என் மலர்
ஆன்டிகுவா
- டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 250 ரன்கள் எடுத்தது.
ஆன்டிகுவா:
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடைபெற உள்ளன.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீசி கார்டி டக் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் லூயிஸ் பொறுப்புடன் ஆடினார். 3வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் லூயிஸ், கவெம் ஹோட்ஜ் ஜோடி 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோட்ஜ் 25 ரன்னில் வெளியேறினார்.
4வது விக்கெட்டுக்கு மைக்கேல் லூயிஸ் உடன் அலிக் அத்தான்ஸ் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி ரன்களை சேர்த்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் லூயிஸ் 97 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 140 ரன்களை எடுத்தது. கவெம் ஹோட்ஜ் 90 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது.
- டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- சில நாட்களுக்கு முன்பு இன்டர்போலீஸ் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்டிகுவா:
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பினார்.
2018-ம் ஆண்டில் இருந்து ஆன்டிகுவா தீவில் வசித்து வந்த மெகுல் சோக்சி திடீரென்று மாயமானார். சில நாட்களுக்கு பிறகு அவர் டொமினிக்கன் தீவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற மெகுல் சோக்சியை அந்நாட்டுக்கு திரும்ப அனுப்ப அவரது வக்கீல்கள் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து ஆண்டிகுவாவுக்கு அனுப்பப்பட்ட மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. இது தொடர்பான வழக்கு ஆன்டிகுவா அண்ட் பார்டிடா நாட்டில் உள்ள ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில் மெகுல் சோக்சியை வலுக்கட்டாயமாக ஆன்டிகுவா மற்றும் பார்டிடா தீவில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதனால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல் முறையீடு உள்ளிட்ட அனைத்து சட்டப் பூர்வ வாய்ப்புகளையும் இழந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இன்டர்போலீஸ் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.