search icon
என் மலர்tooltip icon

    நைஜீரியா

    • நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியது.
    • இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

    இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க விரைந்தனர்.

    அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

    • குடிசைகளை தீயிட்டு கொளுத்தியதுடன் கிராமத்தை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேரை பணய கைதிகளாக கடத்தி சென்றனர்.
    • ராணுவத்தினரின் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நடானா நைஜீரியாவின் வடமேற்கு கடூனா மாகாணத்தில் பயங்கரவாதிகள் கும்பல் செயல்பட்டு நாட்டின் அமைதிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி வருகிறது. அந்த வகையில் அங்குள்ள கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் கும்பல் ஊடுருவியது.

    பின்னர் அங்குள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்தியதுடன் கிராமத்தை சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேரை பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நைஜீரியா ராணுவம் பயண கைதிகளை மீட்க சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அந்தவகையில் தனிப்படை ராணுவத்தினர், பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல் நடத்தி் பணய கைதிகளாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 20 பேரை உயிருடன் மீட்டனர்.

    ராணுவத்தினரின் இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 4 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானதாக அந்த நாட்டின் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

    • விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறின.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.

    அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நைஜீரியாவில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பலியாகினர்.

    அபுஜா :

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக போகோ ஹாரம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை பல்லாயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தினரை குறிவைத்து பயங்கர ஆயுதங்களுடன் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் மாயமாகினர் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

    • தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் அல்ல என்ற குற்றச்சாட்டு.
    • என்னுடைய பயணம் மிகவும் கடுமையானது.

    லாகோஸ்:

    நைஜீரியா தலைநகர் லாகோசில் மிஸ் நைஜீரியா அழகி போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நைஜீரியா அழகியாக சட்டக்கல்லூரி மாணவியான 23 வயது சிதிம்மா அடெட்ஷினா தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டத்தை வென்ற அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    அழகி பட்டம் வென்ற சிதிம்மா அடெட்ஷினா கடந்த ஜூலை மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த மிஸ் தென் ஆப்பிரிக்கா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    அப்போது அவர் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் அல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவரது தாயார் தென் ஆப்பிரிக்காவில் வசிப்பது போன்று ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்தது.

    இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. இதையடுத்து சிதிம்மா அடெட்ஷீனா தென் ஆப்பிரிக்கா அழகிப் போட்டியில் இருந்து மனவேதனையுடன் வெளியேறினார். இதனால் அவரால் இறுதி போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இவரது தந்தை நைஜீரியாவை சேர்ந்தவர். இதனால் மிஸ் நைஜீரியா போட்டியில் பங்கேற்க சிதிம்மா அடெட் ஷீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதை ஏற்று அவர் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி உள்ளார். அவர் கூறியதாவது:-

    என்னுடைய பயணம் மிகவும் கடுமையானது. தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெருமையாகவும் இருக்கிறது. எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாம் ஒருவரோடு ஒருவர் சண்டையிடக் கூடாது. கறுப்பு கண்டமான ஆப்பிரிக்கா ஒன்றுபட வேண்டும். இதை தான் எப்போதும் விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பம். நாம் அனைவரும் ஒரே மனிதர்கள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த போட்டியில் வென்றது மூலம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச பிரபஞ்ச அழகி போட்டியில் சிதிம்மா பங்கேற்க உள்ளார். இதில் நான் எப்படியும் வெற்றி பெறுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    • விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
    • விபத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    வடக்கு மத்திய நைஜீரியாவில் நேற்று காலை வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு மாடி பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில், 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பிளாட்டு மாநிலத்தின் புசா புஜி பகுதியில் உள்ள செயிண்ட்ஸ் அகாடமி பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சில நிமிடங்களில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.

    இந்த கோர விபத்தில் மொத்தம் 154 மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 132 மாணவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 22 மாணவர்கள் உயரிழந்துள்ளனர். 

    விபத்து குறித்து, நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் கூறுகையில்," விபத்து ஏற்பட்ட உடனே சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

    உடனடி மருத்துவ கவனிப்பை உறுதி செய்வதற்காக, ஆவணங்கள் அல்லது கட்டணம் இல்லாமல் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்குமாறு மருத்துவமனைகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக, பிளாக் மாநில தகவல் ஆணையர் மூசா அஷோம்ஸ் தெரிவித்துள்ளார்.

    பள்ளியின் பலவீனமான கட்டமைப்பு மற்றும் ஆற்றங்கரை அருகே பள்ளி அமைந்துள்ளதே விபத்து ஏற்படக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற 12க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. அங்கு, கட்டிடங்கள் இடிந்து விழுவது சகஜமாக உள்ளது.

    கட்டிட பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தத் தவறியதாலும், மோசமான பராமரிப்பு காரணமாகவும் இதுபோன்ற பேரழிவுகமக ஏற்படுவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    • 2022-ல் சுமார் 900 கைதிகள் தப்பிச்சென்றனர்.
    • கட்டமைப்புகள் அரிதாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் கைதிகள் தப்பிக்க மிகவும் எளிதாகிவிட்டன.

    நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா அருகே உள்ள நைஜர் மாநிலத்தின் சுலேஜா என்ற இடத்தில் பழமையான சிறைச்சாலை ஒன்று உள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்து வேலி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது. இதனை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சிறைத்துறையினர் மற்றும் மற்ற ஏஜென்சிகள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 கைதிகளை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சுலேஜாவை ஒட்டியுள்ள மாநிலத்தில் அடர்ந்த காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டால் பிடிக்க கஷ்டமாகிவிடும் என அதிகாரிகள் பயப்படுகின்றனர். அந்த காடு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள கும்பல் அதிகமாக வாழ்ந்து வரக்கூடிய இடமாகும்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நைஜீரியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாக, 1960-க்கும் முன் காலனி ஆதிக்கத்தில் கட்டப்பட்டதாகும்.

    கட்டமைப்புகள் அரிதாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் கைதிகள் தப்பிக்க மிகவும் எளிதாகிவிட்டன. அபுஜா ஜெயிலில் இருந்து இதுபோன்று ஆயிரம் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 2022-ல் சுமார் 900 கைதிகள் தப்பிச்சென்றனர்.

    • பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
    • மாணவர்களை திருப்பி அனுப்புவதற்கு கடத்தல்காரர்கள் பெரிய தொகையை கேட்டதாக உறவினர்கள் கூறினர்.

    வடமேற்கு மற்றும் வட-மத்திய நைஜீரியாவில் மக்களை குறிவைப்பது, கிராமங்களை கொள்ளையடிப்பது மற்றும் பணத்திற்காக வெகுஜன மக்கள் கடத்தல்களை மேற்கொள்வது வழக்கம்.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கடத்தலில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடத்தப்பட்ட 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த மார்ச் 7ம் தேதி அன்று கடுனா மாநிலத்தின் குரிகாவில் நடந்த கடத்தல் சம்பவம், கடந்த ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும். பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட மாணவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

    இதுகுறித்து கடுனா மாநில ஆளுநர் உபா சானி வெளியிட்டுள்ள அறிக்கையில்"கடத்தப்பட்ட குரிகா பள்ளி குழந்தைகள் காயமின்றி விடுவிக்கப்படுகிறார்கள். கரிஜா நகரில் இருந்து கடத்தப்பட்ட 250 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி விடுதலை செய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்ட நைஜீரிய அதிபருக்கு நன்றி" கூறினார்.

    மேலும், மாணவர்களை திருப்பி அனுப்புவதற்கு கடத்தல்காரர்கள் பெரிய தொகையை கேட்டதாக உறவினர்கள் கூறினர். ஆனால் ஜனாதிபதி டினுபு பணம் செலுத்த வேண்டாம் என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

    • நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமம் உள்ளது.
    • திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்தது.

    அபுஜா:

    நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது.

    இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்தது. அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.

    இந்த கோர தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • நைஜீரிய மக்களின் பிரதான உணவு தானியம் அரிசி
    • அஃபாஃபாடாவை ஆலை அதிபர்கள் தூக்கி எறிந்து வந்தனர்

    கினியா வளைகுடா பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடு, நைஜீரியா. இதன் தலைநகரம், அபுஜா (Abuja).

    நைஜீரியா முழுவதும் விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் வாட்டி வருகிறது.

    அந்நாட்டு மக்களின் பிரதான உணவு தானியம், அரிசி.

    உயர்ந்து வரும் அரிசி விலையின் காரணமாக, அந்நாட்டு மக்கள் அரிசி ஆலைகளில் முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த அஃபாஃபாடா (afafata) எனும் தடியான, சமைக்க கடினமான அரிசி வகையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

    சில வருடங்களுக்கு முன், அஃபாஃபாடா அரிசியை, அரிசி ஆலை அதிபர்கள் மீன்களுக்கு உணவிட பயன்படுத்துபவர்களிடம் மட்டுமே குறைந்த விலைக்கு விற்று வந்தனர்; சில நேரங்களில் விற்காமல் தூக்கி எறிவார்கள்.

    ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறி வருகிறது.

    ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளதால், மீன் பண்ணை வைத்திருந்தவர்களுக்கு இப்போது அஃபாஃபாடா கிடைப்பது அரிதாகி வருகிறது.

    உலகளாவிய பொருளாதார மந்தநிலை, எரிபொருளுக்கான மானியத்தை அதிபர் போலா டினுபு (Bola Tinubu) ரத்து செய்தது, "நைரா" (Naira) எனும் அந்நாட்டு கரன்சி மீதான பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நைஜீரியாவில் உணவு பண்டங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    பல மாநிலங்களில், விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தினர்.

    கடந்த 2 மாதங்களில் நைஜீரியாவில் விலைவாசி 2 மடங்காகி உள்ளது.

    வழக்கமாக, அந்நாட்டு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாங்கும் 50 கிலோ அரிசி மூட்டை தற்போது சுமார் ரூ.4400 ($53) எனும் மதிப்பில் விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு விற்கப்பட்ட விலையை விட 70 சதவீதம் அதிகம் என்பதால் பெரும்பாலான மக்களால் தரமான அரிசியை வாங்க முடியவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வாதாடி வருபவர் கோலா
    • 13-வயது சிறுவனுக்கு நீண்ட சிறை தண்டனையை ரத்து செய்தார் கோலா

    நைஜீரியா நாட்டின் கானோ (Kano) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோலா அலப்பின்னி (Kola Alapinni).

    கோலா, இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் (Essex) பல்கலைக்கழகத்தில் சர்வதேச மனித உரிமைகள் சம்பந்தமான சட்ட படிப்பில் பட்டம் பெற்றவர்.

    சட்டத்துறையில் ப்ரோ போனோ (pro bono) எனப்படும், வழக்கறிஞருக்கான கட்டணத்தை பெறாமல், இலவசமாக, பொது நன்மைக்காக வாதாடும் முறையில், கோலா பலருக்காக வாதாடி வருகிறார்.

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, கடும் தண்டனை பெற இருந்த பலரின் சார்பாக கோலா வாதாடி, அவர்களை கடும் தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

    ஷரியா சட்டப்படி குற்றம் இழைத்ததாக கருதப்பட்டு தண்டனைக்குள்ளாகும் பல ஏழை எளிய மக்களுக்கு கோலா சட்ட ஆலோசனையையும், உதவியையும் வழங்கி வருகிறார்.

    இவரது உயிருக்கு எதிராக பல அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது.

    மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த யஹாயா ஷரீஃப்-அமினு எனும் பாடகரின் சார்பில் கோலா வாதாடியதால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

    கோலாவின் திறமையால் பல வருடங்கள் சிறை தண்டனை பெற இருந்த 13 வயது சிறுவன் ஒருவனுக்கு தண்டனை ரத்தானது.

    கோலாவின் சேவையை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க அரசு சர்வதேச மத சுதந்திர விருது (International Religious Freedom Award) எனும் உயரிய விருதை வழங்கியுள்ளது.


    இது குறித்து கோலா தெரிவித்ததாவது:

    வாழ்வா, சாவா எனும் ஆபத்தான நிலையில் உள்ள பலருக்கு எங்கள் பணி மெல்லிய நம்பிக்கையை தருகிறது. எப்போது வேண்டுமானாலும் அடிப்படைவாத கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து எங்களுக்கு உள்ளது. 2015ல் ஒரு கும்பல் காவல் நிலையத்தையும் நீதிமன்ற அறையையும் தீ வைத்து எரித்தது. எனது பல வருட போராட்டங்களுக்கான அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன்.

    இவ்வாறு கோலா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்தது.
    • ஓயோ மாநிலத்திற்குள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    நைஜீரியாவின் மிகப்பெரிய நகரங்களில் நேற்று இரவு ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், 12க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமானது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் இறந்தனர் மற்றும் 77 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களால் வெடிகுண்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது.

    மேலும் விரிவான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓயோ மாநிலத்திற்குள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    கனிம வளம் மிக்க நைஜீரியாவில் சட்டவிரோத சுரங்கம் பொதுவானது. அதனால், அதிகாரிகள் மத்தியில் சம்மந்தபட்டவர்களை கைது செய்வது கடினம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ஓயோ ஆளுநர் மகிந்தே, "வெடிபொருட்களை யார் பதுக்கி வைத்திருந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அதனால், கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்குக் காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றார்.

    ×