search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தென்கொரியாவில் விமானம் தாங்கி போர்க் கப்பல்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
    X

    தென்கொரியாவில் விமானம் தாங்கி போர்க் கப்பல்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

    • வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா அமெரிக்காவுடன் கைகோர்த்து வருகிறது.
    • தீபகற்ப கொரிய பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    சியோல்:

    வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது. இதனால் வடகொரியா கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

    வடகொரியாவை சமாளிக்க தென்கொரியா அமெரிக்காவுடன் கைகோர்த்து வருகிறது. தீபகற்ப பகுதியில் இரு நாட்டு கூட்டுப்படைகளும் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    தென்கொரியாவில் சக்தி வாய்ந்த ராணுவ தளம் அமைப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இந்த ராணுவ தளத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் வரலாம் என வடகொரியா கருதுகிறது.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கிய போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்துள்ளது.

    வடகொரியா இந்த ஆண்டு இதுவரை 4 ஏவுகணை சோதனை நடத்தி உள்ள நிலையில் அமெரிக்கா போர்க்கப்பல் தென்கொரியாவுக்கு வந்துள்ளது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்பின் இந்த நடவடிக்கை வடகொரியாவை நேரடியாக பாதிக்கும் அபாய சூழ்நிலை நிலவுகிறது.


    இதையடுத்து அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டு அதிபர் ஜிம் ஜாங் உன்னின் சகோதரியும், சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவருமான ஜிம் யோ ஜாங்கின் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

    அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் இலக்குகளை குறிபார்த்து தாக்ககூடிய ஏவுகணை சோதனைகள் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் தீபகற்ப கொரிய பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×