search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மொரிஷியஸ் இந்தியாவிற்கும் உலகளாவிய தெற்கிற்கும் இடையே பாலமாக உள்ளது: பிரதமர் மோடி
    X

    மொரிஷியஸ் இந்தியாவிற்கும் உலகளாவிய தெற்கிற்கும் இடையே பாலமாக உள்ளது: பிரதமர் மோடி

    • மொரிஷியஸின் பல குடும்பங்கள் கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
    • அவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் கவலைப்பட்டேன் என தெரிவித்தார்.

    போர்ட் லூயிஸ்:

    மொரிஷியசில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா மற்றும் மொரிஷியஸ் உறவுகளில் இனிமை அதிகரித்துள்ளது. மொரிஷியஸ் குடிமக்களுக்கு அவர்களின் தேசிய தின வாழ்த்துக்கள்.

    மொரிஷியஸைச் சேர்ந்த பல குடும்பங்கள் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டன. சுமார் 65 முதல் 66 கோடி மக்கள் கலந்துகொண்ட உலகின் மிகப்பெரிய கூட்டத்தைக் கண்டு உலகம் ஆச்சரியப்படுகிறது.

    மொரிஷியஸின் பல குடும்பங்கள் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் கவலைப்பட்டேன்.

    எனவே, மகா கும்பமேளாவின்போது சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்தேன். இந்தப் புனித நீர் நாளை கங்கை தாலாப்பில் இணைக்கப்படும்.

    கங்கை அன்னையின் அருளால் மொரிஷியஸ் புதிய செழிப்பை அடைய பிரார்த்திக்கிறேன்.

    மொரிஷியஸ் இந்தியாவிற்கும் உலகளாவிய தெற்கிற்கும் இடையே பாலமாக உள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×