search icon
என் மலர்tooltip icon

    கத்தார்

    • முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது பிரான்ஸ்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் ஆன்ட்ரெஸ் கிறிஸ்டென்சன் கோல் அடித்தார். இதனால் போட்டி சமநிலையை எட்டியது.

    எனினும் 86 நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் அந்த அணி முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

    • முதல் பாதியில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.
    • ஆட்ட நேர இறுதியில் போலந்து 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து, சவுதி அரேபியா அணிகள் மோதின.

    முதல் பாதியின் 39-வது நிமிடத்தில் போலந்தின் ஜிலின்ஸ்கி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார்.

    இரண்டாவது பாதியில் 82வது நிமிடத்தில் ராபர்ட் லெவான்டௌவுஸ்கி ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டநேர முடிவில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    முதல் போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை சவுதி அரேபியா அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் ஆஸ்திரேலிய அணி ஒரு கோல் அடித்தது.
    • இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, துனீசியா அணிகள் மோதின.

    முதல் பாதியின் 23-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் டூயூக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை ஏற்படுத்தினார். இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் துனீசியா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது. இரு போட்டிகளில் ஒரு டிரா, ஒரு தோல்வி என ஒரு புள்ளியுடன் துனீசியா கடைசி இடத்தில் உள்ளது.

    • கோல் அடிக்கும் இரு அணிகளின் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.
    • இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு.

    கத்தாரில் நடைபெற்று உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அல் பேட் ஸ்டேடியத்தில் நள்ளிரவு நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 0-0 என்ற கோல் கணக்கில் இருந்தன.

    இரண்டாவது பாதி முடிவிலும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.இதனாம் ஆட்டம் சமனில் முடிந்ததுடன் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம் குரூப் பி பிரிவு புள்ளி பட்டியலில் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஈரான் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.

    • குரூப் ஏ பிரிவு புள்ளி பட்டியலில் கத்தாருக்கு கடைசி இடம்.
    • லீக் சுற்றுடன் வெளியேறுவதால் கத்தார் ரசிகர்கள் சோகம்.

    தோஹா:

    2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியை நடத்தும் கத்தார் அணி, முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும்.

    இதனை தொடர்ந்து, 2-வது லீக் ஆட்டத்தில் செனக்கல் அணியை எதிர் கொண்ட கத்தார் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அடுத்ததாக செவ்வாய்கிழமை நெதர்லாந்து அணியை கத்தார் எதிர்கொள்கிறது.

    எனினும் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் குரூப் ஏ பிரிவு புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்த கத்தார் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், உலகக் கோப்பை தொடரிலும் இருந்து வெளியேறி உள்ளது. இது கத்தார் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முதல் பாதியில் நெதர்லாந்து வீரர் ஒரு கோல் அடித்தார்.
    • 2வது பாதியில் ஈக்வடார் வீரர் கோல் அடித்து சமன் செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-ஈக்வடார் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

    இதன் மூலம் முதல் பாதி ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோடி அடிக்க ஈக்வடார் வீரர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 49வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் அன்னர் வலென்சியா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.
    • உலகக் கோப்பையில் கத்தார் அணி இன்று முதல் கோலை பதிவு செய்தது

    உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடந்த குரூப்-ஏ லீக் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தார் அணி, செனகலுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செனகல் வீரர்கள், முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றனர். அந்த கோலை 41வது நிமிடத்தில் பவுல்யே தியா அடித்தார்.

    அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 2வது கோலை பதிவு செய்தது செனகல். 48வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார் பமாரா டைதியோ.

    அதன்பின் போட்டியை சமன் செய்யும் நோக்கில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. முகமது முன்டாரி கோல் அடித்து ஆறுதல் அளித்தார். உலகக் கோப்பையில் கத்தார் அணியின் முதல் கோல் இதுவாகும்.

    அதன்பின், கத்தார் வீரர்களுக்கு பதிலடி கொடுத்த செனகல் அணி 84வது நிமிடத்தில் மற்றொரு கோல் போட்டது. மாற்று வீரர் சம்பா டியங் இந்த கோலை பதிவு செய்தார். இறுதியில் 3-1 என செனகல் அபார வெற்றி பெற்றது.

    • ஹென்னிஸி தனது பாக்சை விட்டு வெளியே பாய்ந்து வந்து பந்தை தடுக்க முயன்றார்.
    • உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174வது ரெட் கார்டு ஆகும்.

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் வேல்ஸ் கோல்கீப்பர் ஹென்னிஸி நடுவரால் ரெட் கார்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் தடுப்பாட்டத்தை தகர்த்த ஈரான் வீரர் மெஹ்தி தாரெமி, பந்தை துரத்திக்கொண்டு கோல் கம்பத்தை நெருங்கினார். ஆபத்தை உணர்ந்த ஹென்னிஸி, அவரது எல்லையை விட்டு வெளியே பாய்ந்து வந்து, தாரெமிக்கு முன்னதாக பந்தை தடுக்க முயன்றார். அதற்குள் தாரெமி அடித்த பந்து ஹென்னஸியை தாண்டி சென்றுவிட்டது.

    அதேசமயம் வந்த வேகத்தில் ஹென்னிஸி, தாரெமியை உதைக்க, இருவரும் கீழே விழுந்துவிட்டனர். விதிமுறை மீறலை கவனித்த போட்டி நடுவர் மரியோ எஸ்கோபார், ஹென்னிஸிக்கு முதலில் மஞ்சள் அட்டை காட்டினார். ஆனால் வீடியோ மானிட்டரைப் பார்த்த அவர், பின்னர் தனது முடிவை மாற்றி, ரெட் கார்டு காண்பித்தார். இதையடுத்து ஹென்னிஸி சோகத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இந்த உலகக் கோப்பையில் முதல் ரெட் கார்டு இதுவாகும்.

    உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174வது ரெட் கார்டு ஆகும். உலகக் கோப்பையில் ரெட் கார்டு பெற்ற மூன்றாவது கோல் கீப்பர் ஹென்னிஸி ஆவார். இதற்கு முன்பு 2010ல் தென் ஆப்பிரிக்காவின் இடுமெலங் குனே, 1994ல் இத்தாலி கோல் கீப்பர் ஜியன்லுகா பக்லியுகா ஆகியோர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கூடுதல் நேரத்தில் இரு தரப்பினரும் வெற்றிக்கான கோலை பதிவு செய்ய ஆக்ரோஷத்துடன் முன்னேறினர்.
    • வெற்றி பெற்றதும் ஈரான் வீரர்கள் மரியாதை நிமித்தமாக மைதானத்தைச் சுற்றி வந்தனர்.

    உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-பி பிரிவில் உள்ள ஈரான், வேல்ஸ் அணிகள் மோதின. துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை இரு தரப்பிலும் தவறவிட்டனர். ஆட்டநேரமான 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. அதன்பின்னர் கூடுதல் நேரத்தில் இரு தரப்பினரும் வெற்றிக்கான கோலை பதிவு செய்ய ஆக்ரோஷத்துடன் முன்னேறினர்.

    இந்த போராட்டத்தில் ஈரான் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியது. ரூபஸ் செஸ்மி, ரமின் ரசீயன் தலா ஒரு கோல் அடித்து, வேல்ஸ் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இறுதியில் 2-0 என ஈரான் வெற்றிபெற்றது.

    வெற்றி பெற்றதும் ஈரான் வீரர்கள் மரியாதை நிமித்தமாக மைதானத்தைச் சுற்றி வந்தனர். அப்போது ஈரான் மற்றும் வேல்ஸ் நாடுகளின் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வேல்ஸ் ரசிகர்களின் கைதட்டி பாராட்டியதைப் பார்த்த சில ஈரானிய வீரர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கானாவுடனான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    • நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

    இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

    • முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
    • ஆட்ட நேர இறுதியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில், செர்பியா அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73 வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • ஆட்ட நேர இறுதியில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

    அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 73-வது நிமிடத்தில் கானா அணியின் ஆண்ட்ரூ ஆயு ஒரு கோல் அடித்தார்.

    போர்ச்சுக்கல் அணியின் ஜோ பெலிக்ஸ் 78-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் ரபேல் லியோவும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    கானா அணியின் ஓஸ்மான் புகாரி 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.

    ×