என் மலர்
சவுதி அரேபியா
- போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
- உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்துக்கு இருநாடுகளும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இறுதி முடிவை ஈட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷியா - உக்ரைன் இரு தரப்பும் டிரோன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் வைத்து ரஷியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒரு நாள் முன்னதாக உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று தனியே ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
மின்சக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலில் முழுமையாக நிறுத்த அமெரிக்கா வலியறுத்தி உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரயில்வே மற்றும் துறைமுகங்கள் பாதுகாக்கப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளும் தற்போது மின்சக்தி உள்ளிட்ட உள்கட்டுமானகளை குறிவைத்து ஒன்றையன்று தாக்கி வருகிறது. எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
- இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை சுமார் 30 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பான அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் அறிவித்துள்ளது. மேலும், ரஷியாவுடன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு சமீபத்தில் நிறுத்தப்பட்ட ராணுவ உதவிகளை மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து, ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பு அதிகாரிகள், வான் வழி மற்றும் கடல் வழி தாக்குதல்களில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர். மறுப்பக்கம் அமெரிக்கா சார்பில் ஒரு மாத காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.
"போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனிடம் இன்று வலியுறுத்தினோம், அவர்கள் தரப்பில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். தற்போது பந்து அவர்களிடம் தான் உள்ளது."
"அவர்கள் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில், துரதிர்ஷ்டவசமாக இங்கு அமைதி திரும்ப என்ன தடையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாங்கள் முயற்சிப்போம்," என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகள் உடனடியாக மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சந்தித்தனர். அப்போது, ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இதன் பிறகு தான், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்தார். அப்போது "அடுத்த சில நாட்களில் நடக்கும் என்று நம்புகிறேன், நான் அதை பார்க்க விரும்புகிறேன். நாளை ரஷியாவுடன் எங்களுக்கு ஒரு பெரிய பேச்சுவார்த்தை இருக்கிறது. சுமூகமான உரையாடலாக அது இருக்கும் என்று நம்புகிறேன்," என தெரிவித்தார்.
- சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியான ஜிசான் அருகே விபத்து நடந்துள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருவதாக தகவல்
சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிசான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முழு ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
"சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்து தொடர்பாக தகவல் அறிய ஒரு பிரத்யேக உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது" ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் "விபத்து மற்றும் உயிர் இழப்பு குறித்து அறிந்து துயரமடைந்தேன். ஜெட்டாவில் உள்ள தூதர அதிகாரியிடம் பேசினேன். அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பில் உள்ளார். இந்த துயரமான சூழ்நிலையில் முழு ஆதரவையும் வழங்கி வருகிறார் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்" என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் அதி கனமழை பெய்துள்ளது.
- அதிகபட்சமாக அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.
பாலைவன நாடான சவுதி அரேபியாவில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.
புனித நகரங்களான மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் பெய்த அதி கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகிலுள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது.
மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் மிக கனமளிக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
+8
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.
- ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
- முதல் நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் 7 வீரர்கள் இணைந்தனர்.
ஜெட்டா:
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டமாக நடைபெற்றது.
முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட 7 வீரர்களை எடுத்துள்ளது.
இந்நிலையில், முதல் நாளில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களின் விவரம் வருமாறு:
ரிஷப் பண்ட்: 27 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஷ்ரேயஸ் அய்யர்: 26.75 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
வெங்கடேஷ் அய்யர்: 23.75 கோடி - கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
அர்ஷ்தீப் சிங்: 18 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
யுஸ்வேந்திர சஹல்: 18 கோடி - பஞ்சாப் கிங்ஸ்
ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
டாப் 5-ல் இடம்பிடித்த அனைவரும் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- முதல் நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அந்த வீரர்களின் விவரம்:
ஜெட்டா:
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அந்த வீரர்களின் விவரம்:
நூர் அகமது 10 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி
டேவன் கான்வே 6.25 கோடி
கலீல் அகமது 4.8 கோடி
ரச்சின் ரவீந்திரா 4 கோடி
ராகுல் திரிபாதி 3.4 கோடி
விஜய் சங்கர் 1.2 கோடி
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்
- சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது..
வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்கில் செல்வச்செழிப்பான நாடக விளங்கும் சவூதி அரேபியாவில் பலர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்குச் சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த வருட மரண தண்டனை எண்ணிக்கை குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த ஆண்டில் [2024 இல்] இதுவரை மொத்தமாக 274 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் 101 வெளிநாட்டவர்கள் ஆவர். இது கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமன் - 20 பேர், சிரியா - 14 பேர், நைஜீரியா - 10, எகிப்து - 9 பேர், ஜோர்டான் - 8 பேர், எத்தியோப்பியா - 7 பேர், சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேர், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடந்தால் தொடர்பாக வழக்குகள் இந்த ஆண்டு மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு போதைப்பொருள் வழக்குகளில் 92 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதில் 69 பேர் வெளிநாட்டவர்கள். ஒரு வருடத்தில் இந்த அளவிலான எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றுவது இதுவே முதல் முறை.

சவுதி இளவரசர் - முகமது பின் சல்மான் அல் சவுத்
முன்னதாக 2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அரேபியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த மரண தண்டனைகள் சர்வதேச அரங்கில் கவலையளிப்பதாக உள்ளது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீராங்கனை கோகோ காப் கோப்பை வென்றார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது.
இதில் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மோதினார்.
இதில் கோகோ காப் 3-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக கோப்பை வென்று அசத்தினார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா மோதினார்.
இதில் குயின்வென் ஜெங் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரவு 9.45 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவுடன், அமெரிக்காவின் கோகோ காப் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தார்.
இறுதிப்போட்டியில் கோகோ காப், குயின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.
ரியாத்:
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா மோதுகிறார்.
இரவு 9.45 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவுடன், அமெரிக்காவின் கோகோ காப் மோதுகிறார்.
நாளை இறுதிப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.