search icon
என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார்.
    • 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்த சாதனை முயற்சி.

    தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது.

    ஆனால் அவர் ரூயிபோஸ் வகை தேநீரில் அசல், வெண்ணிலா மற்றும் ஸ்டாபெரி என மூன்று வகைகளில் 249 கப் தேநீர் தயாரித்துள்ளார்.

    தென்னாப்பரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தாவரமான அஸ்பலதஸ் லீனரிஸ் என்கிறத புதர் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீரை ரூயிபோஸ் என்று அழைக்கப்படுகிறது.

    சாதனை முயற்சியின்போது வாலன்டின் தெளிவான மனதை கொண்டு, விறுவிறுப்பாக ஒவ்வொரு டீ கோப்பையிலும் 4 தேநீர் பைகளை போட்டார். சரியான ரூயிபோஸ் தேநீராகத் தகுதிபெற ஒவ்வொரு தேநீர் பையும் குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு நன்கு ஊற வேண்டும். முதல் மூன்று தேநீர் கோப்பைகளில் தேநீர் பைகளை நிறப்பிய பிறகு, அடுத்த கோப்பையை நிறப்பினார்.

    இப்படி வாலன்டின் திட்டமிட்டு ஒரு மணி நேரத்தில் நிமிடத்திற்கு 4 கப்க்கும் மேல் தேநீர் என மொத்தம் 250 தேநீர் தயாரித்தார். இதில் ஒரு கப் மட்டும் அளவில் பூர்த்தியாகாததால் நீக்கப்பட்டது.

    சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு தேநீரை அருந்தினர்.

    2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள மலைக்கிராமம் காட்டுத்தீயால் அழித்த பிறகு, சுற்றுலாவை மேம்படுத்தவும், வுப்பர்தல் சமூகத்தின் மீள்தன்மையைக் கொண்டாடும் விதமாகவும் இங்கார் வாலன்டின் உலக சாதனையில் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், இந்த சாதனையின் மூலம், தங்களின் வுப்பர்தல் சமூகம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

    • நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த சரக்கு லாரி பள்ளி வாகனம் மீது வேகமாக மோதியது.
    • இந்த விபத்தில் வேனில் பயணித்த 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    ஜோகனர்ஸ்பர்க்:

    தென்னாப்பிரிக்கா நாட்டின் குவாஸ்லு - நடால் மாகாணத்தில் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு நேற்று முன்தினம் குழந்தைகள் பள்ளி மினி வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர். அந்த வேனில் 19 குழந்தைகள், வேன் டிரைவர், உதவியாளர் என 21 பேர் பயணித்தனர்.

    நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது சாலையின் எதிரே வந்த சரக்கு லாரி பள்ளி வாகனத்தின்மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனில் பயணித்த 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காயம் காரணமாக முன்னணி வீரர் ரஸ்ஸி வான் டெர் டுசென் சேர்க்கப்படவில்லை.

    ஜோகன்னஸ்பர்க்:

    7-வது டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் இடம் பெறவில்லை.

    தென் ஆப்பிரிக்கா அணி விவரம் வருமாறு:

    டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ஹென்ரிச் கிளாசன், ஹெண்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆன்ரிச் நோர்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிடோரியஸ், ககிசோ ரபடா, ரீல்லி ரோசவ், தப்ரைஸ் ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ். மாற்று வீரர்கள்: பிஜோர்ன் பார்டுயின், மார்கோ ஜேன்சன், பெலுக்வாயோ.

    • படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.
    • துப்பாக்கிகளுடன் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்தது. துப்பாக்கி முனையில் நடிகர்கள், மாடல் அழகிகளை சிறைபிடித்தனர்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்குக்கு மேற்கே உள்ள சிறிய நகரான க்ருகர்ஸ்டோர்ப் பகுதியில் இசை வீடியோ படப்பிடிப்பு நடந்தது. இதில் மாடல் அழகிகள் கலந்து கொண்டனர்.

    படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்தது. துப்பாக்கி முனையில் நடிகர்கள், மாடல் அழகிகளை சிறைபிடித்தனர்.

    பின்னர் 8 மாடல் அழகிகளை அக்கும்பல் கற்பழித்தது. இதில் ஒரு பெண் 10 பேராலும், மற்றொரு பெண் 8 பேராலும் கற்பழிக்கப்பட்டனர்.

    படப்பிடிப்பில் இருந்த ஆண்களை நிர்வாணமாக்கிய அக்கும்பல் அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து காவல்துறை மந்திரி பெக்கி செலே கூறும்போது, "கற்பழிப்பில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டினர் போல் தெரிகிறது. அவர்கள் நாட்டில் சட்ட விரோதமாக சுரங்கங்களை தோண்டும் கும்பலை சேர்ந்தவர்கள் 20 சந்தேக நபர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார். தென்ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு குற்றச்செயல் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தென்னாப்பிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் பார் உள்ளது. இந்த மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    போலீஸ் அதிகாரி எலியாஸ் மாவேலா கூறியதாவது:-

    நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. அப்போது, பாரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
    • ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் ஜெயில் காவலர் ஒருவர் பலியானார். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷூஜப் பெல்கோர் கூறும்போது, "அபுஜாவின் குஜேவில் உள்ள சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    அவர்கள் போகோஹராம் அமைப்பை சேர்ந்தவர்கள். ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்' என்றார்.

    • தென் ஆப்பிரிக்காவின் இரவு விடுதியில் 20 பேர் இன்று உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
    • 20 பேரின் மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர்.

    இந்நிலையில், இரவு விடுதியில் இன்று காலை சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விடுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

    ×