search icon
என் மலர்tooltip icon

    தஜிகிஸ்தான்

    • இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
    • தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

    தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 3 லட்சமும் மத தலைவர்களுக்கு 5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சகம் இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்தபோது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்நாட்டில் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

    கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்துள்ளது.

    • வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை அபு சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, ஜூலை 7-ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.
    • துபாயில் ஜூலை 6-ந்தேதி பாக்ஸிங் பைட் போட்டி நடக்கிறது.

    தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபு ரோசிக். 3 அடி உயரம் கொண்ட இவர் தடைகளை தகர்த்து தனது திறமையின் மூலம் பாடகராகவும் திகழ்கிறார். சமூக வலைதளங்களிலும் பிரபலமான இவர் இந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

    இவருக்கும் தஜிகிஸ்தான் பாடகி அமீராவுக்கும் திருமணம் முடிவாகி கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை அபு சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, ஜூலை 7-ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில் தற்போது அவர் திருமணத்தை தள்ளிவைத்திருப்பதாக கூறி உள்ளார். துபாயில் ஜூலை 6-ந்தேதி பாக்ஸிங் பைட் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இருப்பதால் தனது திருமணத்தை தள்ளி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
    • ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்

    தஜிகிஸ்தான் நாட்டில் சனிக்கிழமை காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தஜிகிஸ்தானில் காலை 6:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ஆழம் 80 கிலோ மீட்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தது. இருப்பினும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    ஜப்பான், ஜம்மு காஷ்மீர், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

    • தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவானது.

    துஷான்பே:

    மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 2.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

    இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜிஜாங்:

    தெற்கு திபெத் நாட்டில் உள்ள ஜிஜாங் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பயந்து போன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    இதே போல தஜிகிஸ்தான் நாட்டிலும் இன்று அதிகாலை 3.18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கடியில் 150 கிலோ மீட்டர் ஆழத்தில் இது உருவானது. ரிக்டர் அளவு கோலில் இது 4.1 ஆக பதிவாகி இருந்தது. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    ×