என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
பரிசோதனையில் அதிர்ச்சி- பெண்ணின் மூக்கில் இருந்து 100க்கும் மேற்பட்ட புழுக்களை அகற்றிய மருத்துவர்கள்
- மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாய்லாந்தை சேர்ந்த 59 வயது பெண்ணின் மூக்கில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து அகற்றியுள்ளனர்.
தாய்லாந்து வடக்கு பகுதிசை சேர்ந்த பெண், கடந்த ஒரு வாரமாக மூக்கு அடைப்பு மற்றும் முக வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். பிறகு, பெண்ணின் மூக்கில் இருந்து திடீரென ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணை தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள நகோர்ன்பிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அந்த பெண்ணுக்கு எக்ஸ் ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எக்ஸ்ரேவை பரிசோதித்த மருத்துவர் பட்டீமோன் தனச்சாய்கான், பெண்ணின் மூக்கில் அசாதாரணமான ஒன்று இருப்பதை கண்டார்.
இதையடுத்து, பெண்ணிற்கு எண்டோஸ்கோப்பிக் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு, பெண்ணிற்கு சிகிச்சையின் மூலம் மூக்கின் உள்ளே இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்களை மருத்துவர்கள் அகற்றினர்.
சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், கண்கள் அல்லது மூளை போன்ற அருகிலுள்ள உறுப்புகளுக்கு புழுக்கள் இடம்பெயர்ந்திருக்கக்கூடும். அது இன்னும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி, மரணத்திற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக சியாங் மாய் பகுதியில், ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அது, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்