search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    கோப்பு படம்

    4 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    • நீர்த்–தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி
    • நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வில்லியனூர் குடிநீர் பிரிவுகூடப்பாக்கம் கிராமம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி வருகிற 31-ந் தேதி நடக்கிறது.இதையொட்டி அன்று நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடப்பாக்கம் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    கூடப்பாக்கம்பேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வருகிற 1-ந் தேதியும், கணுவாப்பேட்டை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2-ந் தே தியும், தில்லை நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 3-ந் தேதியும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.இதனால் அந்த பகுதிகளில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்படுகிறது.


    Next Story
    ×