என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/11/1913232-.webp)
X
கோப்பு படம்.
முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By
மாலை மலர்11 July 2023 11:36 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்பில் சேர புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- புதுவையை சேர்ந்த 499 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரி:
மத்திய சுகாதார அமைச்சகம் எம்.பி.பி.எஸ். இன்டர்ன்ஷிப் கட் ஆப் தேதியை ஆகஸ்ட்டு 11-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. இதையடுத்து இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்பில் சேர புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று 11-ந் தேதி முதல் 13-ந் தேதி மாலை 6 மணி வரை எம்.டி, எம்.எஸ். படிப்புகளுக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே எம்.டி, எம்.எஸ். முதுநிலை படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த 499 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.
Next Story
×
X