என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அரசு போக்குவரத்து ஊழியர் பலி

- அளவுக்கு அதிகமாக மது குடித்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் இறந்து போனார்.
- புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
அளவுக்கு அதிகமாக மது குடித்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் இறந்து போனார்.
மரக்காணம் அருகே சுனாம்பேடு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது62). இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள வெங்கடேசன் அடிக்கடி புதுவைக்கு வந்து மது குடித்து விட்டு செல்வது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று இவர் மது குடிக்க புதுவை வந்தார். புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி போன வெங்கடேசன் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.