search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாலா திரிபுர சுந்தரி  கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
    X

    கோப்பு படம்.

    பாலா திரிபுர சுந்தரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

    • அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
    • கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த இரும்பை குபேரன் நகரில் பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது.

    இங்கு 10-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி சதசண்டி ஹோம பூஜை கடந்த 3-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை 7.30 மணிக்கு சதசண்டி ஹோமம் ஆரம்பமானது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. இறுதியில் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசம் புறப்பாடாகி அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    இரவு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பா லித்தார். தொடர்ந்து பவுர்ணமி பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏற்பாடு களை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×