search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மிச்சாங் புயல்... பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் 4-ந்தேதி விடுமுறை
    X

    மிச்சாங் புயல்... பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் 4-ந்தேதி விடுமுறை

    • தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 4-ந்தேதி பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் வரும் 4-ந்தேதி பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×