என் மலர்
புதுச்சேரி
X
மின்துறை அதிகாரிகளுடன் - நேரு எம்.எல்.ஏ. ஆலோசனை
Byமாலை மலர்23 Nov 2022 12:37 PM IST
- உருளையன்பேட்டை தொகுதிட்பட்ட பகுதிகளில் மின்துறை மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் அமைத்தல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதிட்பட்ட பகுதிகளில் மின்துறை மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், ஸ்ரீதர், ராஜேஷ் சென்னிஹியால், செயற்பொறியாளர்கள் கனியமுது, செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் கண்ணன், திலகராஜ், ஜானகிதேவி, இளநிலை பொறியாளர்கள் கார்த்தி கேயன், அச்சிதானந்தம், சுரேஷ், சந்திரசேகர் மற்றும் மின்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனையின் போது தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளான புதைவிட மின் கேபிள்கள் அமைப்பது, அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் அமைத்தல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
Next Story
×
X