என் மலர்
நீங்கள் தேடியது "எச்1 பி விசா"
அமெரிக்காவில் எச்-1 பி விசா மூலம் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உள் நாட்டினருக்கு பணி வழங்குவதில் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவை முன்னுரிமை வழங்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
அதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிவது கனவாகி போனது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆனால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
எனவே ‘எச்-1 பி’ விசாவுக்கான விண்ணப்பம் கடுமையாக ஆராயப்படும். அதன் பிறகே வெளிநாட்டினருக்கு அதற்கான விசா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின் கடந்த 2 ஆண்டுகளாக ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பணி நீட்டிப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அதன் காரணமாக அங்கு பணிபுரிந்து வரும் இந்தியர்களும், புதிதாக பணிக்கு அமெரிக்கா செல்ல தயாராக இருந்த இளைஞர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கிறிஸ்ட்ஜென் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
திறமையான வெளி நாட்டினர் மட்டுமே இங்கு தங்கி வேலை பார்க்க வேண்டும் என எம்.பி.க்கள் விரும்புகின்றனர். எனவே அவர்களுக்கே ‘எச்-1பி’ விசா வழங்கப்படும் என்று கூறினார். #HIBVisa #DonaldTrump #Trump
சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மீன் வியாபாரி.
அவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் 15 வருடங்களாக பெருங்குடி பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த 3 வருடங்களாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் பெருங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 205 பேர் தீபாவளி சீட்டு போட்டு இருந்தனர்.
அவர்களிடம் ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தார். தீபாவளிக்கு முன்பு சீட்டுக்குரிய பொருட்கள் வாங்கி வருவதாக கூறி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
அதன் பின்னர் அவர் ஊர் திரும்பவில்லை. குடும்பத்துடன் தப்பி சென்று விட்டது தெரிய வந்தது. அதையடுத்து அவரிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசாக்களை அந்த நாடு வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் போட்டி நிலவுகிறது.
இப்போது இந்த விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கிற நிறுவனங்கள், விண்ணப்பங்களை முன்கூட்டியே மின்னணு வடிவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி முறை கொண்டு வர உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கும், அதிக சம்பளம் பெறுகிறவர்களுக்கும் மட்டுமே இந்த விசா கிடைப்பதை நோக்கமாகக் கொண்டுதான் டிரம்ப் நிர்வாகம் இந்த மாற்றத்தை கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #HIBVisa #DonaldTrump
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமுதா. இவரது மகள் ஹமிதா (வயது 5). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது தாயார் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேகரித்து வந்தார். இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது.
இந்த நிலையில் அந்த உண்டியல் பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஹமிதா தனது தாயாருடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து வழங்கினார்.
அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் ரோகிணி அந்த சிறுமியை பாராட்டினார். மேலும் இச்சிறுமியை போல மற்றவர்களும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். #GajaCyclone
ஸ்ரீ காளஹஸ்தி, கொல்லப்பள்ளியில் நேற்று செம்மரம் கடத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி சீனிவாசராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-
செம்மர தடுப்புப்பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் அறிவுரையின்படி, பொதுமக்களிடம் செம்மரம் கடத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ராயலசீமா பகுதிகளிலும், சித்தூர் மாவட்டத்திலும் அரியவகை செம்மரங்கள் இருப்பதால் இவை மிகவும் விலை மதிப்புள்ளது. இவற்றை ஒரு சிலர் முறைகேடாக வெட்டுவதோடு மட்டுமல்லாது, கடத்தியும் வருகின்றனர்.
இதுபோன்று செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்கள் முதல் முறையாக பிடிபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 லட்சம் அபராதமும், 2-வது முறை பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதமும், 3-வது முறை பிடிபட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். செம்மரம் கடத்துபவர்களின் விவரங்களை தெரியப்படுத்துபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செம்மர தடுப்பு பிரிவு ஊழியர்கள் சுப்பிரமணியம், சத்தியநாராயணா, பாபாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #sandalwood #smuggling
நியூயார்க்:
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிஷோர்குமார், கவுரு (46). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் 4 கன்சல்டிங் கம்பெனிகள் நடத்தி வருகிறார். அவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.
இவர் கம்பெனியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு போலி ஆவணங்கள் மூலம் எச்1பி விசா பெற்று தந்துள்ளார். மேலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் இருந்தார்.
இந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். #H1B
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 305.354 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 38 நிமிடம் 28.851 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். அவரை விட 17.316 வினாடிகள் பின்தங்கிய ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார்.
பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 3-வது இடத்தை பெற்று 15 புள்ளிகளை தனதாக்கினார். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் 7-வது இடத்துக்குள் வந்தாலே ‘சாம்பியன்’ பட்டத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் களம் கண்ட லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்தை பிடித்ததன் மூலம் மீண்டும் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
இன்னும் 2 சுற்று பந்தயங்கள் (பிரேசில் கிராண்ட்பிரி நவம்பர் 11-ந் தேதி, அபுதாபி கிராண்ட்பிரி நவம்பர் 25-ந் தேதி) எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளார். 33 வயதான லீவிஸ் ஹாமில்டன் பார்முலா1 ‘சாம்பியன்’ பட்டத்தை வெல்வது இது 5-வது முறையாகும். அவர் ஏற்கனவே 2008, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தார். அத்துடன் பார்முலா1 பட்டத்தை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் மைக்கேல் சூமாக்கருக்கு (7 முறை) அடுத்த 2-வது இடத்தை அர்ஜென்டினாவின் ஜூயன் மானுவேல் பான்ஜியோவுடன் (5 முறை) இணைந்து லீவிஸ் ஹாமில்டன் பெற்றார். #LewisHamilton #FormulaOne #WorldTitle
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் 18-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி பந்தயம் ஆஸ்டின் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 308.405 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் அதிவேகமாக சீறிப்பாய்ந்தனர்.

2-வது வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனென் (பெராரி அணி) 1 மணி 34 நிமிடம் 18.634 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை கைப்பற்றினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு கிமி ராய்கோனென் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக கிமி ராய்க்கோனென் 2013-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய கிராண்ட்பிரி போட்டியில் வென்று இருந்தார். அவரை விட 1.281 வினாடிகள் பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தை பிடித்து 18 புள்ளிகள் பெற்றார். முதல் வரிசையில் இருந்து காரை செலுத்திய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2.342 வினாடிகள் பின்தங்கி 3-வது இடம் பிடித்து 15 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்து இருந்தால் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீவிஸ் ஹாமில்டனுக்கு போட்டியாளராக விளங்கும் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 4-வது இடம் பெற்றார். போர்ஸ் இந்தியா அணி வீரர் செர்ஜியோ பெரெஸ் 8-வது இடம் பிடித்தார். 18 சுற்றுகள் முடிவில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 346 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 276 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ராய்க்கோனேன் 221 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பார்முலா 1 பந்தயத்தின் அடுத்த சுற்று (19-வது) போட்டி மெக்சிகோவில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் 7-வது இடம் பிடித்தாலே 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விடுவார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அரசு எச்-1பி விசா வழங்குகிறது. இந்த ‘விசா’ மூலம் அங்கு வெளிநாட்டினர் நிரந்தரமாக குடியேற முடியாது. அமெரிக்க கம்பெனிகளில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கான ‘விசா’ வாகும்.
அதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்றவுடன் அதற்கான எச்-1பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தினார். அதன்மூலம் எச்-1பி விசாவின் காலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1000-க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தி வருகின்றனர். அங்கு எச்-1பி விசா மூலம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

தற்போது எச்-1பி விசாவின் காலத்தை குறைப்பதன் மூலம் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமின்றி ஐ.டி. நிறுவனங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியிருப்பு சேவை துறையின் மீது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நகர ஐ.டி நிறுவனத்தினர் கோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தனர்.
43 பக்க புகாரில் எச்-1பி விசா செல்லுபடியாகும் காலத்தை குறைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விசா வழங்கும் அதிகாரத்தை தொழிலாளர் துறைக்கு வழங்க அமெரிக்க பாராளுமன்றம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்-1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக தற்போது 2-வது வழக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2018 ஜூலை மாதம் முதல் முறையாக வழக்கு தொடரப்பட்டது. #DonaldTrump #H1BVisa #WorkPermit
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் இயக்கினர்.
இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 70-வது வெற்றியாக இது அமைந்தது.

தகுதி சுற்றில் வெற்றி பெற்று முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2.545 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் போட்டாஸ், ஹாமில்டனை விட முந்திதான் சென்று கொண்டிருந்தார். இருவரும் ஒரே அணி என்பதாலும், ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கியுள்ளதாலும் அவருக்கு வழிவிடும்படி அணி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் அதற்கு கட்டுப்பட்டு ஒதுங்கினார். இல்லாவிட்டால் போட்டாஸ் தான் முதலிடத்தை பிடித்திருப்பார். அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.
முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (பெராரி அணி) 4-வதாக வந்து 12 புள்ளிகளையும் மற்றும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 5-வதாக வந்து 10 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணி வீரர்களான ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்), செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) முறையே 9-வது, 10-வது இடங்களை பிடித்தனர். இந்த போட்டியை கடைசி கட்டத்தில் நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
16 சுற்று முடிவில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரெய்க்கோனன் 186 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த போட்டி வருகிற 7-ந்தேதி ஜப்பானில் நடக்கிறது. #LewisHamilton #ValtteriBottas #FormulaOne
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா பே ஓடுதளத்தில் நேற்றிரவு நடந்தது. மின்னொளியின் கீழ் 308.706 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனும், இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 51 நிமிடம் 11.611 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளையும் வசப்படுத்தினார். இந்த சீசனில் ஹாமில்டனின் 7-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் ருசித்த 69-வது வெற்றியாகும்.

அவரை விட 8.961 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளையும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு போர்ஸ் இந்தியா அணி வீரர் பிரான்சின் ஈஸ்ட்பான் ஒகானின் கார் விபத்தில் சிக்கியதால் பாதியிலேயே விலகினார்.
இதுவரை நடந்துள்ள 15 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 241 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் 174 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
அடுத்த சுற்று போட்டி வருகிற 30-ந்தேதி ரஷியாவில் நடக்கிறது. #LewisHamilton
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ‘எச்1-பி’ விசா வழங்கப்படுகிறது. அதை பெறுவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.
அதில் முறைகேடு செய்து ஊழியர்களை பணியில் நியமித்ததாக பிரதியும்னா குமார் காமல் (49) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க குடியுரிமை துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.
இந்த நிலையில் அவர் சீட்டில் விமானநிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவை விட்டு வெளியேறவிடாமல் இவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியரான இவர் அமெரிக்காவில் 2 தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ‘எச்பி-1’ விசா மோசடி மூலம் அமெரிக்காவில் பணிபுரிவதாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.