என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people committed suicide"

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த கொடிகாத்த குமாரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள வீரபாண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கொடிகாத்த குமரன் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கொடிகாத்த குமரனை அவரது மனைவி ரிந்து சென்றார். பின்னர் தனது கணவருக்கு அவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கொடிகாத்த குமாரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பெரிய நாயன்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வால்பாறையை சேர்ந்தவர் நிசாந் பிரதீப்குமார் (30). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் நிசாந் பிரதீப்குமார் குடி பழக்கத்துக்கு அடிமையானார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள பெரிய கமலாபட்டியை சேர்ந்தவர் மருதாச்சலம் (46). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தேனியில் குடும்ப பிரச்சினை மற்றும் நோய்கொடுமையால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு சென்றவர் அங்கிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகில் உள்ள அணைக்கரைப்பட்டி கிழக்குதெருவை சேர்ந்தவர் வீருச்சாமி(70). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்த முருகன் மகன் சூர்யா(25). இவர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து ஊர்சுற்றி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • தற்கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தென்பழனியை சேர்ந்தவர் செல்வக்குமார்(25). இவருக்கு திருமணமாகி 1 மகன் உள்ளார். டிரைவர் வேலை பார்த்து வந்த செல்வக்குமாருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த செல்வக்குமார் விஷம்குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடி புதூரை சேர்ந்தவர் ரமேஷ்(38). லாரி டிரைவர். அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் மது குடித்ததால் வயிற்றுவலி அதிகமானது. இதனால் ரமேஷ் விஷமாத்திரையை சாப்பிட்டு மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு வாழ வந்தாள்புரத்தை சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் கருப்பசாமி என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் 1 மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நந்தினி விஷம் குடித்து மயங்கினார். வருசநாடு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வருசநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கண்டமனூர் அண்ணாநகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன்(57). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார். கண்டமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் வீரேஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(57). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேவதானப்பட்டி அருகில் உள்ள காமக்காபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கஸ்தூரி(34). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் விருமாயி கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×