என் மலர்
நீங்கள் தேடியது "3 person arrest"
- பா.ஜ.க. நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
- வெரைட்டிஹால் ரோடு ஆகிய பகுதிகளில் பஸ் கண்ணாடியை உடைத் ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோவை மாநகரில் கடந்த 22-ந் தேதி இரவு வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க.அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, 100 அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
மறுநாள் குனியமுத்தூர், பொள்ளாச்சி பகுதியில் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. குனியமுத்தூர் மற்றும் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் பா.ஜ.க. அலுவல கத்தில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் குனிய முத்தூரில் இந்து அமைப்பை சேர்ந்த வர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி யதாக இன்று ஒருவரை போலீ சார் கைது செய் தனர். மேலும் குனிய முத்தூர் வெரை ட்டி ஹால் ரோடு ஆகிய பகுதிகளில் பஸ் கண் ணாடியை உடைத் ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசார ணை நடத்தி வரு கின்றனர்.
- நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கு இறங்கி கொள்வார்.
- இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது
கோவை
கோவை மாநகரில் ஓடும் பஸ்ஸில் பெண்களை குறி வைத்து தொடர் நகை பறிப்பு சம்பவம் மற்றும் கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் பயன்படுத்தி பெண்களிடம் செயின் பறித்து செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை குறி வைத்து பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, நாகராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் உமா, கார்த்தி, பூபதி, ரங்கராஜ் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தெலுங்கு பாளையம் தாமு நகரை சேர்ந்த நாகம்மாள்(48) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
நாகம்மாளின் சொந்த ஊர் மதுரை. இவரது கணவர் ராமு, மகன் சத்யா. இவர்கள் 3 பேரும் காரில் ஊர் ஊராகச் சென்று நகை கொள்ளை அடிப்பது வழக்கம்.
நாகம்மாள் பஸ்சில் ஏறி பயணிகளுடன் பயணிகளாக பயணித்து, அருகில் இருக்கும் பெண்களிடம் நகையை பறித்து கொள்வார்.
நகையை பறித்தவுடன் அருகே எந்த பஸ் நிறுத்தம் வருகிறதோ அங்கு இறங்கி கொள்வார். அவர் செல்லும் பஸ்சை பின்தொடர்ந்து அவரின் கணவர் அல்லது மகன் காரில் செல்வார்கள். பஸ் நிறுத்தத்தில் வைத்து காரில் ஏறி தப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி பலரிடம் நகையை பறித்துள்ளனர்.
இப்படி சம்பாதித்த பணத்தில் காந்திபுரம் பாரதியார் ரோட்டில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதனை தற்போது வாடகைக்கு விட்டுள்ளனர். மேலும் திருடிய பணத்தை கொண்டு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சத்யாவின் மனைவி திருட்டு வழக்கில் கைதாகி கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து போலீசார் நாகம்மாள் கொடுத்த தகவலின் பேரில் ராமு, சத்யாவையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். நாகம்மாளை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநாயக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
- தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர்.
சூலூர்:
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்த்(41). இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.வசந்த் தனது குடும்பத்தினருடன் சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன், காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கலங்கல் பகுதிக்கு சென்றார்.
அப்போது அவரை கார் ஒன்று வேகமாக பின்தொடர்ந்து வந்தது. கலங்கல் குட்டை அருகே வந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் வசந்த் மற்றும் அவரது மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பின்னர் 2 பேரும் எழுந்திருக்க முயன்றனர்.
அப்போது காரில் இருந்து 3 பேர் கும்பல் திபு,திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கி, வசந்தை அரிவாளால் வெட்டினர். வலி தாங்க முடியாத அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று வெட்டினர்.இதை பார்த்த வசந்த்தின் மனைவி காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தத சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வசந்த்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர். மேலும் சி.சி.டி.வி காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த கும்பல் செல்லும் கார் திருப்பூர் அமராவதி செக்போஸ்ட் வழியாக சென்ற தகவல் தெரியவரவே போலீசார் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் குறிப்பிட்ட காரை மறித்து, அதில் இருந்த 3 பேரையும் பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.
போலீசார் அவர்களை கோவை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கருப்புசாமி உத்தமபாளையம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு தேனியில் ெசாந்தமாக 21 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அவரது உறவினர் முருகன் என்பவர் குத்தகைக்கு கேட்டார்.
அவரும், முருகனுக்கு குத்தகைக்கு விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்புசாமி அந்த நிலத்தை பார்க்க சென்ற போது வசந்த் என்பவர் அங்கு கோழிப்பண்ணை அமைத்து இருந்தார்.
இதுகுறித்து கருப்புசாமி வசந்த்திடம் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரித்து வசந்த்தை அந்த இடத்தை காலி செய்ய வைத்து கருப்புசாமியிடம் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநா யக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
தன்னை வெட்டியவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே கருப்புசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது புலியனூர். அங்குள்ள வயல் பகுதியில் சுமார் 30 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இதையொட்டி திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணை நடத்திய போது பிணமாக கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்கண்டிகையை சேர்ந்த பாலாஜி என்ற ஜெயபாலன்(வயது 30) என்பது தெரியவந்தது.
தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது திண்டிவனம் புலியனூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜூ(39). இவரது அண்ணன் சுரேஷ்(41), நந்தன்(55) ஆகியோர் சரண்அடைந்தனர்.
பின்னர் 3 பேரும் வெள்ளிமேடுபேட்டை போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் பாலாஜியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

பாலாஜி மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். அவர் அறையில் தங்கியிருக்கும்போது பக்கத்து வீடுகளில் பெண்கள் குளிப்பதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்பு அதை அந்த பெண்களிடம் காட்டி மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் கனகேஷிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மெக்கானிக் பாலாஜியை கண்டித்தார். ஆனாலும் அவர் பெண்களிடம் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை. இதுபற்றி கனகேஷ் எங்களிடம் கூறினார்.
அப்போது பாலாஜியை கொலை செய்ய முடிவு செய்தோம். பின்னர் நாங்கள் கூறிய யோசனைப்படி கனகேஷ் தனது காரில் பாலாஜியை புலியனூருக்கு அழைத்து வந்தார்.
காரில் இருந்து இறங்கியதும் அவரை ஒரு வயல்பகுதிக்கு அழைத்து சென்றோம். அப்போது அவரை சரமாரியாக அடித்து உதைத்தோம். இதில் பாலாஜி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சகதிக்குள் அவரது முகத்தை அழுத்தி கொன்றோம். பிறகு நாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டோம்.
இந்தகொலை தொடர்பாக போலீசார் எங்களை தேடியதை அறிந்ததும் கிராம அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்துவிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கைதான ராஜூ, சுரேஷ், நந்தன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
