என் மலர்
நீங்கள் தேடியது "4 centres"
- விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.
- 1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கி வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது. விடைத்தாள்கள் 4 மையங்களில் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
விடைத்தாளில் உள்ள மதிப்பெண் உடனுக்குடன் கணினி மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தம் செய்து முடிக்கப்பட்ட உடன் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது.
இதேப்போல் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஈரோடு செங்கோடம்பாளையம் யு.ஆர்.சி பள்ளி, கோபி குருகுலம் பள்ளி, சக்தி ராகவேந்திரா பள்ளி, அந்தியூர் விஸ்வேஸ்வரய்யா பள்ளியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.
விடைத்தாள்கள் பாட வாரியாக பிரிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றோடு கலந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.
பின்னர் பிற மாவட்ட விடைத்தாள்கள் ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு பாட வாரியாக பிரித்து திருத்தம் செய்து அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.