என் மலர்
நீங்கள் தேடியது "47 day"
- குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது.
- அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் வெள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் பாலசுப்பிரமணியம் (வயது 29). கட்டிட தொழி லாளி. இவரது மனைவி சித்ரா (25).
இவர்களுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த குழந்தைக்கு நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது. இதையடுத்து உடன டியாக குழந்தையை சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தை யை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.