என் மலர்
நீங்கள் தேடியது "5G"
- ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
- ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி வருவோருக்கு புதிய தலைமுறை 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 பீட்டா வெர்ஷனை உலகம் முழுக்க வெளியிட்டு வருகிறது. இந்திய ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்தியாவில் 5ஜி சப்போர்ட் வெளியிடும் நிறுவனங்களில் ஆப்பிள் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக சாம்சங், சியோமி, ரியல்மி, ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கின.
ஐஒஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வருவோர் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்து 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. தற்போது ஐஒஎஸ் 16.2 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்களிடம் இருந்து கருத்து கேட்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் தேர்வு செய்த பயனர்கள் புதிய ஐஒஎஸ் 16.2 பீட்டா 2 வெர்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பீட்டா திட்டத்தில் இணைந்து இருக்கும் பயனர்கள் 5ஜி சேவையை அனுபவிக்க முடியும். தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக இந்த இரு நிறுவன சேவைகளை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதற்கு பயனர் வசிக்கும் பகுதியில் 5ஜி ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பது அவசியம் ஆகும்.
தற்போது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் SE 2022 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐஒஎஸ் 16.2 பீட்டா இன்ஸ்டால் செய்த பின் ஐபோன்களின் செட்டிங்ஸ் -- வாய்ஸ் & டேட்டா -- 5ஜி ஆன், 5ஜி ஆட்டோ மற்றும் 4ஜி/எல்டிஇ போன்ற ஆப்ஷன்கள் காணப்படுகின்றன.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் சாதனங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் என எட்டு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கைாயளர்கள் அதிவேக 5ஜி நெட்வொர்கில் இணைந்து கொள்ள முடியும். எனினும், இதற்கு மைஜியோ செயலியில் இன்வைட் பெற்று இருப்பது அவசியம் ஆகும்.
டிசம்பர் 2023-க்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது. ஜியோ பயனர்கள் தங்களின் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். புதிய தலைமுறை 5ஜி சேவைகளை பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிறப்பு அறிமுக சலுகையை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு 5ஜி சேவையை 500Mbps முதல் 1Gbps வேகத்தில் பயன்படுத்த முடியும்.

மைஜியோ செயலியில் 5ஜி-யை பயன்படுத்துவதற்கான நோட்டிபிகேஷன் வைத்திருப்பவர்கள், தங்களின் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
- முதலில் ஸ்மார்ட்போனின் "செட்டிங்ஸ்" செல்ல வேண்டும்
- அடுத்து "மொபைல் நெட்வொர்க்" அல்லது இதே போன்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- இனி ஜியோ சிம் ஆப்ஷனில் "பிரெஃபர்டு நெட்வொர்க் டைப்" ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- இதில் 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற ஆப்ஷன்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதில் 5ஜி-யை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்-இல் 5ஜி நெட்வொர்க்-ஐ தேர்வு செய்ததும், ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 5ஜி தெரியும். இனி வழக்கம் போல் மொபைல் டேட்டாவில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.
தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெற புது சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய 4ஜி சிம் கொண்டு புதிய நெட்வொர்க்கில் இணைய முடியும்.
- இந்திய டெலிகாம் சந்தையில் புதிய தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி வெளியிடப்பட்டு வருகின்றன.
- முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.
குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது.

நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக வி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி வி எந்த தகவலையும் வழங்கவில்லை.
- இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
- நாட்டின் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனங்கள் தினந்தோரும் அறிவித்து வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பூனேவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டதாக அறிவித்து இருக்கிறது. இந்த பகுதியில் 5ஜி சேவை வழங்கிய முதல் நிறுவனம் ஜியோ தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்டாண்ட்அலோன் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டுமே ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் பீட்டா டெஸ்டிங் துவங்கப்படுகிறது என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
முன்னதாக டெல்லி-NCR பகுதிகளான- டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன. இவை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரனாசி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடந்த மாதம் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டன.

பூனே அதிக மாணவர்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதோடு முன்னணி தகவல் தொழில்நுட்ப பகுதியாகவும் விளங்குகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியின் பெரும்பாலான பகுதிகள் பூனே சுற்றுவட்டார பகுதிகளிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில், ஜியோ 5ஜி வெளியீடு இந்த பகுதிவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சேவைகள் வழங்கப்பட்டதை அடுத்து பூனேவில் வசிக்கும் ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு இன்வைட் செய்யப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் 1Gbps+ வேகத்தில் மொபைல் டேட்டா பயன்படுத்த முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
- டெலிகாம் சந்தையில் அதிநவீன புது தொழில்நுட்பம் 5ஜி, உலகளவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
- இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வெளியிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
உலகின் பல்வேறு நாடுகளில் புதிய தலைமுறை டெலிகாம் தொழில்நுட்பான 5ஜி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் பணிகளில் டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 5ஜி என்பது 5th Gen செல்லுலார் நெட்நொர்க்குகளை குறிக்கும்.
புதிய தொழில்நுட்பம் வெளியாகும் முன்பே இதுபற்றிய வதந்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி விட்டன. அந்த வகையில் புதிய 5ஜி தொழில்நுட்பம் பற்றி அதிகம் வெளியாகி இருக்கும் வதந்திகள் மற்றும் அவற்றுக்கு பின்னணியில் உள்ள உண்மை தகவல்கள் பற்றி தொடர்ந்து பாரப்போம்.

மொபைல் போன்களில் மட்டும் வேலை செய்யும்?
பெரும்பாலானோரும் 5ஜி தொழில்நுட்பம் மொபைல் போன்களுக்கு மட்டும் தான் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இணைய சேவையை மாற்றிக் கொள்ளும் வகையில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தொழில்துறை பயனர்களுக்கு இது அதிவேக இணையம், லோ-லேடன்சி மற்றும் தலைசிறந்த கனெக்டிவிட்டி வழங்குகிறது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் பரவலான சாதனங்களில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
4ஜி - 5ஜி என்ன வித்தியாசம்?
லேடன்சி, டவுன்லோடு வேகம், பேஸ் ஸ்டேஷன் மற்றும் செல் டென்சிட்டி உள்ளிட்டவை 5ஜி-யில் அதிகளவில் இருக்கும். பயனர்கள் நொடிக்கு அதிகபட்சம் 20 Gb வேகத்தை அனுபவிக்க முடியும். இத்துடன் 1ms லோ லேடன்சி, அதிக தரமுள்ள வீடியோ ஸ்டீரிமிங், ஹை-ரெசல்யூஷன் ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. 5ஜி முந்தைய தலைமுறை 4ஜி நெட்வொர்க்கை விட அதிகளவு அனுபவப்பூர்வமான சேவை ஆகும்.

5ஜி அதிக மின்திறன் எடுத்துக் கொள்ளும்?
5ஜி தொழில்நுட்பத்தில் ஆண்டெனாக்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன்படும் என்பதால் மின் பயன்பாடு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு விடும். தகவல் பரிமாற்றம் செய்யப்படும் போது மட்டுமே இவை பயன்படுத்தப்படும். மேலும் 5ஜி-யில் தகவல் பரிமாற்றம் மற்ற நெட்வொர்க்குகளை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
உடல் நலத்தை பாதிக்கும்?
5ஜி நெட்வொர்க்குகள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் ஆழமாக பரவி விட்டது. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்றும் இந்த கூற்றை நிரூபிக்கும் சான்று இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் உலகம் முழுக்க பல்வேறு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். 5ஜி மூலம் வெளிப்படும் ரேடியோ கதிர்களும், சிக்னல்களும் மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
5ஜி பாதுகாப்பற்றது, வை-பை-க்கு மாற்றாக இருக்கிறது?
5ஜி தொழில்நுட்பம் மேம்பட்ட பாதுகாப்பை வழங்க இருக்கிறது. இதன் மூலம் முற்றிலும் புதிய ஆதெண்டிகேஷன் வழிமுறைகள் மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். 5ஜி தொழில்நுட்பம் அதற்கும் முந்தைய நெட்வொர்க்குகளை விட மிகவும் பாதுகாப்பானது ஆகும். 5ஜி மற்றும் வைபை இரண்டும் முற்றிலும் வித்தியாசமான தொழில்நுட்பங்கள் ஆகும். 5ஜி செல்லுலார் நெட்வொர்க் வழங்கும். வைபை குறுகிய ரேன்ஜ் வரை இணைய சேவையை வழங்கும். அந்த வகையில் 5ஜி எப்போதும் வைபை தொழில்நுட்பத்திற்கு மாற்றாக முடியாது.
- ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்குவதற்கான பீட்டா டெஸ்டிங்கை மேற்கொண்டு வந்தது.
- தற்போது ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 வெர்ஷன்களை ஆப்பிள் வெளியிட துவங்கி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களாக பீட்டா முறையில் டெஸ்டிங் செய்து வந்த ஐஒஎஸ் 16.2 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.2 அப்டேட்களின் ஸ்டேபில் வெர்ஷன்களை ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு வெளியிட்டு உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துவோர் ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 மற்றும் ஐபோன் SE 3 மாடல்களில் 5ஜி அப்டேட் பெற முடியும்.
எனினும், சில பயனர்களுக்கு ஐபேட் ஒஎஸ் 16.2 தங்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். 2022 ஐபேட் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களின் செல்லுலார் வெர்ஷன்களில் 5ஜி சப்போர்ட் உள்ளது. புது அப்டேட் 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினை குறித்து பயனர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
5ஜி மட்டுமின்றி புதிய அப்டேட் ஃபிரீடம் ஆப் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தரவுகளை கேன்வாஸ் ஒன்றில் ஒருங்கிணைத்து வைத்துக் கொள்ளலாம். பின் இங்கிருந்தபடி அவற்றை பார்ப்பது, ஷேர் மற்றும் கொலாபரேட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இதில் ஏராளமான ஃபைல்களுக்கான சப்போர்ட், அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபிரீடம் போர்டுகள் ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும்.
இவற்றை ஃபேஸ்டைம் அழைப்புகளின் போதும் இயக்க முடியும். இதை கொண்டு மற்றவர்களுடன் இணைந்து குறிப்பிட்ட போர்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம். ஐகிளவுடில் ஸ்டோர் செய்யப்பட்டு இருப்பதால், இவை தானாக மற்ற சாதனங்களிடையேயும் சின்க் செய்யப்பட்டு விடும். இந்த அப்டேட்டில் ஆப்பிள் மியூசிக் சிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐகிளவுடிற்கு மேம்பட்ட டேட்டா பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன.
- ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும்.
மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தலா ஒரு நகரத்தில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி 5ஜி சேவை தொடங்கபட்டது. நவம்பர் 26 நிலவரப்படி, 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகின்றன. மேலும், விரைவில் பிஎஸ்என்எல்-லில் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை பீட்டா டெஸ்டிங் செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃப்ரின் கீழ் இன்வைட் செய்யப்படும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிடும் பீட்டா டெஸ்டிங்கை ரிலையன்ஸ் ஜியோ துவங்கியது.
ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் ஐஒஎஸ் 16.2 ஒஎஸ்-ஐ வெளியிட்டது. இந்த அப்டேட் ஐபோன் 12 சீரிஸ் மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. இதில் ஐபோன் SE 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது. தற்போது 5ஜி சப்போர்ட் கொண்ட ஐபோன் வைத்திருப்பவர்கள் ஜியோ வெல்கம் ஆஃபரில் இணைந்து கொண்டு இலவமாக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறலாம்.

இதற்கு பயனர்கள் முதலில் ஐபோனில் ஐஒஎஸ் 16.2 இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பின் ஐபோன் செட்டிங்ஸ்-இல் 5ஜி-யை தேர்வு செய்தால் 5ஜி நெட்வொர்க்-ஐ பயன்படுத்த முடியும்.
ஐபோனின் செட்டிங்ஸ் -- மொபைல் டேட்டா -- வாய்ஸ் & டேட்டா ஆப்ஷன்களில் 5ஜி ஆட்டோ மற்றும் 5ஜி Standalone ON ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் செட்டிங்ஸ் -- பேட்டரி -- லோ பவர் மோட்-ஐ ஆஃப் செய்ய வேண்டும்.
தற்போது குஜராத், பூனே, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, மும்மை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன. டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ ஏற்கனவே அறிவித்து விட்டது.
- மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார்.
- 5ஜி சேவை துவக்க நிகழ்வில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி எப்போது வெளியாகும் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார். தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் நாடு முழுக்க சுமார் 70-க்கும் அதிக நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய டெலிகாம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் "பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் 2024 வாக்கில் துவங்கும்," என தெரிவித்து இருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவங்கி வைத்த மத்திய மந்திரி நாட்டில் பிஎஸ்என்எல் 5ஜி வெளியீடு பற்றிய கருத்துக்களை தெரிவித்தார். பிஎஸ்என்எல் தற்போது பயன்படுத்தி வரும் உள்கட்டமைப்புகளை கொண்டு 4ஜி-யில் இருந்து வேகமாக 5ஜி-க்கு அப்கிரேடு செய்து கொள்ள முடியும். மாநிலம் முழுக்க 4ஜி சேவைகளை வழங்குவதற்காக 100 டெலிகாம் டவர்கள் 100 கிராமங்களில் இன்ஸ்டால் செய்யப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் ஆகஸ்ட் 2023 வாக்கில் வெளியாகும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருந்தார். 2023 ஜனவரி மாதம் 4ஜி சேவைகள் வழங்கும் பணி துவங்கும். பின் ஆகஸ்ட் 2023 வாக்கில் 5ஜி வெளியீடு படிப்படியாக துவங்கும் என அவர் தெரிவித்து இருந்தார். தற்போதைய தகவல்களின் படி முந்தைய திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பாதக தெரியவந்துள்ளது.
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு ஒருவழியாக 5ஜி அப்டேட் வெளியாக இருக்கிறது.
- பிக்சல் ஸ்மார்ட்போன்களில் 5ஜி அப்டேட் முதற்கட்டமாக பீட்டா முறையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்க துவங்கி இருக்கிறது. இதற்கான QPR பீட்டா 2 அப்டேட் ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் வெளியான பிக்சல் ஃபீச்சர் டிராப்-இல் 5ஜி சப்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது இந்த அம்சம் பீட்டாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
முதற்கட்டமாக 5ஜி டெஸ்டிங் செய்யப்பட்டு, பயனர்களிடம் தரம், பயன்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கருத்து கேட்கப்படும் என கூகுள் அறிவித்து இருக்கிறது. டெஸ்டிங்கை தொடர்ந்து ஸ்டேபில் அப்டேட் 2023 முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. பீட்டா அப்டேட் என்பதால், இதில் அதிக பிழைகள் நிறைந்திருக்கும்.
பீட்டா டெஸ்டிங்கில் பங்கேற்க பிக்சல் 6a, பிக்சல் 7 அல்லது பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் பீட்டா திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆண்ட்ராய்டு 13 பீட்டா திட்டத்தில் இருப்பவர்களுக்கு, சமீபத்திய QPR அப்டேட் கிடைத்திருக்கும்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- ஜியோ தவிர ஏர்டெல் நிறுவனமும் நாடு முழுக்க தனது 5ஜி சேவைகளை தொடர்ச்சியாக பல நகரங்களில் வெளியிட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது நாடு முழுக்க 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் 5ஜி சேவைகளை தங்களின் சாதனங்களில் பயன்படுத்த அழைக்கப்படுவர். ஜியோ ட்ரூ 5ஜி 1Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம்.
"17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 கூடுதல் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிடுவதில் நெகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகிலேயே 5ஜி சேவை வெளியீட்டில் இது மிகப்பெரியது ஆகும். ட்ரூ 5ஜி வெளியீட்டை வேகப்படுத்தி இருக்கிறோம். 2023 புத்தாண்டில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும். " என ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

"டிசம்பர் 2023 முதல் நாட்டில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். ஆந்திர பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி ஆர்கிடெக்ச்சரில் வேலை செய்யும். இது 5ஜி ஸ்பெக்ட்ரமை 700MHz, 3500MHz, 26GHz பேண்ட்களில் வழங்குகிறது. ஜியோ 5ஜி சேவைகள் 4ஜி நெட்வொர்க் சாராமல் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.
- ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளின் எல்டிஇ வேகம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
- மீடியா டவுன்லோட் வேகம் 13.87Mbps-இல் இருந்து 29.85Mbps ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மீடியன் மொபைல் டவுன்லோட் வேகம் 115 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவைகள் வெளியீட்டை தொடர்ந்து மொபைல் டவுன்லோட் வேகம் திடீரென அதிகரிக்க துவங்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13.87Mbps ஆக இருந்த மொபைல் டவுன்லோட் வேகம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29.85Mbps ஆக அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் பற்றிய தகவல்களை ஊக்லா ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நெட்வொர்க் இண்டெலிஜன்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி பற்றி அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.
இதன் காரணமாக சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியா 49 இடங்கள் முன்னேறி தற்போது 69 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 118 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 69 ஆவது இடத்திற்கு முன்னேரி இருக்கிறது. சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியாவின் வளர்ச்சி சில ஜி20 நாடுகளான மெக்சிகோ, ரஷ்யா மற்றும் அர்ஜெண்டினாவை விட அதிகரித்து இருக்கிறது.

ஆய்வு அறிக்கையின் படி 5ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் எல்டிஇ வேகம் வளர்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இரு நிறுவனங்கள் புதிய நெட்வொர்க் கட்டமைப்புக்கு மேற்கொண்டு இருக்கும் முதலீடுகள் தற்போது பலன் அளிக்க துவங்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி முதன் முதலில் வெளியிடப்படும் போது, 5ஜி நெட்வொர்க் திறன் பற்றி பயனர்களுக்கு முரணான கருத்துக்கள் இருந்து வந்தது. மீடியன் 5ஜி டவுன்லோடே வேகங்கள் குஜராத்தில் 512.57Mbps ஆகவும், மேற்கு உத்திரபிரேதச மாநிலத்தில் 19.23Mbps ஆக இருந்தது. தற்போது. ஒன்பது டெலிகாம் வட்டாரங்கள்: ஆந்திர பிரதேசம், கொல்கத்தா, வடகிழக்கு, ஹரியானா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், கேரளா மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு பகுதிகளில் டெஸ்டிங் காரணமாக மீடியன் 5ஜி டவுன்லோட் வேகம் 100Mbps-க்கும் குறைவாகவே இருந்து வந்தது.
நான்கு மாதங்களுக்கு பின், 5ஜி மீடியன் டவுன்லோட் வேகம் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அதிகரித்து இருக்கிறது. தற்போது ஜம்மு காஷ்மீர் தவிர இதர பகுதிகலில் 200Mbps வேகம் சீராக கிடைக்கிறது. கொல்கத்தாவில் 500Mbps வரையிலான டேட்டா வேகம் கிடைக்கிறது.