என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5G technology"

    • சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ. ஆகியவைதான் ஜெர்மனிக்கு பாகங்களை வழங்கி வருகிறது
    • பல்வேறு நாடுகள் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து கொள்ள முடிவு செய்திருக்கின்றன

    மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது.

    5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் (Huawei) மற்றும் இசட்.டி.ஈ. (ZTE) ஆகியவைதான் வழங்கி வருகிறது.

    தற்போது ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம், சீனாவின் தயாரிப்புகளால் தேசிய பாதுகாப்புக்கான ஆபத்துக்கள் வரக்கூடும் எனவும் அதனால் அதனை தடுக்கும் விதமாக 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ., ஆகியவற்றின் தயாரிப்புகளை முற்றிலும் தங்கள் நாட்டிலிருந்தே நீக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

    "டீ ரிஸ்கிங்" (de-risking) எனப்படும் அபாயங்களிலிருந்து விலகி இருத்தலுக்கான இந்த முடிவின்படி ஜெர்மனியின் மென்பொருள் மற்றும் இணைய கட்டமைப்பில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த தளங்களிலிருந்தும் அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை நீக்க வேண்டும் என ஜெர்மனி முடிவெடுத்திருக்கிறது. மேலும், இனியும் அவற்றை இறக்குமதி செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என உறுதியாக உள்ளது. அந்நாட்டிலேயே உள்ள சில முன்னணி அலைபேசி சேவை நிறுவனங்கள் இவற்றை எதிர்த்தாலும், அரசங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது. ஜெர்மனியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு தொழில்நுட்பங்களிலும் உயர் தொழில்நுட்பங்களிலும் சீனா எனும் ஒரே நாட்டை சார்ந்திருப்பதை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் படிப்படியாக குறைத்து கொள்ள முடிவு செய்திருப்பதை தொடர்ந்து ஜெர்மனியும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

    "ஜெர்மனி உண்மையிலேயே எங்கள் நாட்டு தயாரிப்புகளால் அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதை நிரூபிக்காமல் இத்தகைய முடிவை எடுத்தால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்" என இத்தகவல் வெளியானதும் சீனா காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    இந்தியாவில் கோவிட்-19 காலகட்டத்திலிருந்து உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் முடிவுகள், தற்போது சீனாவை சார்ந்திருப்பதை உலகம் குறைத்து கொள்ள முன்வரும் வேளையில், இந்திய பொருளாதாரத்திற்கு பலனளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இந்தியாவில் 6 மடங்கு அதிகமாக செல்போன்களை உற்பத்தி செய்கிறோம்.
    • சர்வதேச தொலைத்தொடர்பு கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி பாரத் மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் சபையையும் அவர் தொடங்கி வைத்து பார்த்தார்.

    இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8-வது பதிப்பையும் மோடி தொடங்கி வைத்தார். இதில் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3 ஆயிரம் தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.

    2014-ல் இந்தியாவில் 2 செல்போன் தயாரிப்பு யூனிட்டுகள் மட்டுமே இருந்தன. இன்று 200-க்கும் அதிகமானவை உள்ளன.

    முன்பெல்லாம் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு போன்களை இறக்குமதி செய்து வந்த நாம் இன்று முன்பைவிட 6 மடங்கு அதிகமாக செல்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறோம்.

    மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மேட்-இன்-இந்தியா போன்களை உலகிற்கு வழங்குவதில் ஈடுபட்டுள்ளோம்.


    பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான தூரத்தை விட 8 மடங்கு அதிகமான ஆப்டிக் பைபரை இந்தியா அமைத்தது. உலகின் 2-வது பெரிய 5ஜி தொலைத்தொடர்பு சந்தையாக இந்தியா மாறியுள்ளது.

    டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வெற்றிகரமாக உருவாக்குவதில் இந்தியா தனது அனுபவத்தை உலகின் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது

    டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உலகளாவிய கட்டமைப்பின் பொருள், உலகளாவிய வழிகாட்டுதல்கள், உலகளாவிய நிறுவனங்கள் உலகளாவிய நிர்வாகத்திற்கான முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

    உலக அளவில் தொழில்நுட்பத்திற்காக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. அனைத்து டிஜிட்டல் கருவிகளும் மற்றும் இன்று கிடைக்கும் பயன்பாடுகள் எல்லைக்கு அப்பாற்பட்டவை, எனவே, எந்தவொரு நாடும் அதன் குடிமக்களை இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க முடியாது.

    விமானப் போக்குவரத்துத் துறைக்கான உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகத்திற்கும் இதேபோன்ற கட்டமைப்பைத் தேவை.

    இந்தியாவின் தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி ஆகியவை பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.

    மோதலில் இருந்து உலகை இணைப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    ×