search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A clothier"

    • ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கோவில்பாளையம் போலீ–சாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட–னர்.

    சரவணம்பட்டி:

    கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையம் அருகே சிவசக்தி நகரில் ஒரு தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கோவில்பாளையம் போலீ–சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று கிணற்றுக்குள் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் தொடர்ந்து கிணற்றில் கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி(63) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் எஸ்.ஆர்.பி.மில் அருகே துணிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட–னர்.

    அப்போது ரங்கசாமி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், திடீரென்று கோவில்களில் சென்று அமர்ந்து விடுவதாகவும் அங்கிருந்து அவரை மீட்டு வீட்டுக்கு கூட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.நேற்றும் அதேபோன்று வீட்டில் இருந்து வெளியே சென்றதாக தெரிவித்தனர்.

    ஆனால் தற்போது அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து ேகாவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் உடலை வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். துணிக்கடை முதலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×