என் மலர்
நீங்கள் தேடியது "A. Raza MP Tribute"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அழைப்பு விடுத்தார்.
- 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்தார்.
ஊட்டி,
இங்கிலாந்தின் லண்ட னை சேர்ந்த சர் ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை அன்றைய பிரிட்டன் அரசின் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர்.
நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவர் 1819-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்தார்.
இவரின் கல்லறை ஊட்டில் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி எம்.பி ஆ. ராசாஅவரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சர் ஜான் சல்லிவனுடைய கொள்ளு பேத்தி ஓரியல் சல்லிவனும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சர் ஜான் சல்லிவனுடைய 200-வது ஆண்டு நிறைவு விழாவிற்கு அவரது குடும்பத்தினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அழைப்பு விடுத்தார்.
அப்போது அவரின் மகள் வக்கீல் மயூரி, இங்கிலாந்து தி.மு.க அமைப்பாளர் பைசல், நிர்வாகிகள் பிரேம், சத்யா, செந்தில் மற்றும் கோகுல், சியாம், ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.