search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi perukku festival"

    • கோவிலிகளில் வழிபாடுகள் செய்தவற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    • ஆடி 18 அன்று குலத்தெய்வ வழிபாடு செய்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

     திருப்பூர் :

    ஆடிப்பெருக்கையொட்டி திருப்பூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருப்பூர், ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், வாலிபளையம் மகாகாளியம்மன் கோவில், முருகன் கோவில்வில்களில் காலை முதலே மக்கள் வந்து தனிசனம் செய்தனர். கோவிலிகளில் வழிபாடுகள் செய்தவற்கு ஏதுவாக ஏற்பாடு்கள் செய்யப்பட்டு இருந்தன.

    தாராபுரம் பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18 அன்று குலத்தெய்வ வழிபாடு செய்வது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆடிபெருக்கான இன்று தாராபுரம் அமாரவதி ஆற்றங்கரை ஈஸ்வரன் கோவில் அருகே காலை 6 மணி முதல் புத்தாடை அணிந்து வந்த பெண்கள், குழந்தைகள் பலகாரங்கள், பழங்கள், பூக்கள் வைத்து வழிப்பாடு செய்து மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். அதே போன்று பல்வேறு சமூக மக்கள் ஆற்றுக்கு வந்து குடம் மற்றும் கரகத்தில் ஆற்றின் புனித நீரை எடுத்து குடத்தில் பூக்கள் அலங்காரம் செய்து தங்களது குலந்தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு எடுத்து சென்றனர். அவினாசிலிங்கேசுவரர்கோவிலில் சுவாமிக்கு சிறப்பஅபிஷேக அலஙகார ஆராதனை நடந்தது. அதிகாலை 5 மணி முதல் அவினாசி, பழங்கரை, சேவூர், கருவலூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் உள்ளிட்ட திரளான பக்கர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் அனைவருககும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் அவினாசி ஆகாசராயர் கோவில், பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், சேவூர் வாலிசுவரர் கோவில், நடுவச்சேரி சிவா புரி அம்மன் கோவில், நல்லி கவுண்டம்பாளையம் கருப்பராயன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    உடுமலை திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காலையிலேயே திரண்டு வந்தனர். சுவாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ன. பஞ்சலிங்க அருவியில் புனித நீராடி அரச்சனை செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதே மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் வருகையால் களைக்கட்ட இருக்கிறது. #MetturDam
    சேலம்:

    விவசாயத்தை செழித்தோங்க வைத்து தமிழக மக்களை வாழவைக்கும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழாக்கள் நடந்தாலும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    நதிக்கரைகளில் வாழும் மக்கள் தங்களை வாழவைக்கும் நதிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் படித்துறைகளில் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு ஆகியவைகளை வைத்து தண்ணீருக்கு பூஜை செய்து மஞ்சள் கயிறை அணிந்து கொள்வார்கள்.

    இது போல புதுமண தம்பதியர் அன்றைய தினம் காவிரி கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்து புதிய தாலிக்கயிறு மாற்றி திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்வார்கள். இதனால் மேட்டூர் அணை முதல் காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதி வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

    மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் போது காவரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் இருக்கும், இதனால் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெறும்.

    கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. ஆனால் மேட்டூர் அணையில் இருந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட 2 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும்.

    இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டத்தை கடக்காது. இதனால் கடந்த சில வருடங்களாக ஆடிப்பெருக்கு விழா தண்ணீரின்றி களையிழந்து காணப்பட்டது. ஆடிப்பெருக்கு அன்று கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் இறைத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் புனித நீராடினர்.

    கடந்த 2007-ம் ஆண்டு ஆடிப்பண்டிகைக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    அணை நிரம்பியதையடுத்து இந்தாண்டு ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரியின் மற்றும் கிளை ஆறுகளிலும் கடைமடை பகுதி வரை சென்றுள்ளது.

    இதனால் கடந்த 10 ஆண்டுகளாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் களை கட்டும். இதனால் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.

    இதையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றிலும் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்து புனித நீராடுவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மேலும் ஆடிப்பெருக்கு விழா அன்று மேட்டூர் காவிரியில் பக்தர்கள் அதிகம் குளிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரை தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #MetturDam
    ×