என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AB de Villiers"

    • பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.
    • பெங்களூரு அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    முதல் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்திய பெங்களூரு, 2 ஆவது போட்டியில் சென்னையை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியது.

    இப்போது 3 ஆவது போட்டியில் குஜராத் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது,. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.

    லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள். அதாவது ஒரு போட்டி பெங்களூரில் அடுத்த போட்டி வெளியூரில் என ஆர்.சி.பி. அணி விளையாடும் போட்டிகளில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணை பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    ஆர்.சி.பி. அணி ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணையை பாருங்கள். ஒருபோட்டி பெங்களூரில், அடுத்த வெளியூரில், மறுபடியும் பெங்களூரில் அடுத்தப்போட்டி வெளியூரில்.. இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.

    இதுபோன்ற ஒரு சவாலான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. ஆனால் அது அவர்களின் பலமாகவும் இருக்கலாம்.

    கொல்கத்தாவில் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர். அணியை வீழ்த்தினார்கள். சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தினார்கள். தற்போது நல்ல ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதல் இடத்தில உள்ளது" என்று தெரிவித்தார்.

    • கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியிருந்தது.
    • 2008-க்குப் பிறகு முதன்முறையாக சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

    ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நட்சத்திர வீரர்களுடன் விளையாடிய ஆர்சிபி ஒருமுறை கூட சாம்பியன் கோப்பையை வென்றது கிடையாது. அந்த அணி தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கும். ஆனால், பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கமாட்டார்கள்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சமநிலையற்ற ஒரு அணியாகத்தான் திகழும். ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணியை பார்க்கும்போது சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியாக திகழ்கிறது. தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி உள்ளனர். அதன்பின் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், லிவிங்ஸ்டன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேவேளையில் பந்து வீச்சிலும் ஹெசில்வுட், புவி, யாஷ் தயால் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சீசன்களை விட தற்பேதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    கடந்த சீசன்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்சிபி அணிக்கு பேலன்ஸ் தேவை எனப் பேசியிருந்தேன். இது பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் அல்லது பீல்டர்களை பற்றியது கிடையாது. ஐபிஎல் அணிகள் மற்றும் ஆப்சன்களில் சமநிலையை கொண்டுள்ளது பற்றியது.

    நான் புவியை பார்த்தேன். அவர் விளையாட போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் சிஎஸ்கே அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுபோன்ற அட்டகாசமான மாற்று வீரர்களைத்தான் அணி விரும்பும். முதல் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது போட்டியில் வேறொரு வீரருக்காக களம் இறக்கப்பட்டார். இதுபோன்ற பேலன்ஸ், பந்து வீச்சில் பலம் அணிக்கு தேவையானது. ஆர்சிபிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்துள்ளது. இது உண்மையிலேயே சிறந்தது.

    இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    • பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
    • கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும்.

    ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது.

    17 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாததால் கிண்டலடிக்கப்பட்டு வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

    கடந்த வருடம் விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ஒருபுறம் பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதனால் விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்தார்.

    இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் மற்றும் இதர தொடர்களில் பிலிப் சால்ட் மிகவும் அட்டாக் செய்யக்கூடிய ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்.

    அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும். எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் எப்போது கூடாது என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பெங்களூரு அணியின் பேட்டிங் துறையின் கேப்டனாக செயல்பட்டு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

    ஏனெனில் இம்முறை பெங்களூரு அணி நிறைய மைதானங்களுக்கு பயணித்து விளையாட உள்ளது. அங்கே பேட்டிங் ஆர்டரில் குறைந்த ரன்களுக்குள் சரிவு ஏற்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருப்பதால் விராட் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    • ஒரு இந்திய ரசிகராக நீங்கள் ரோகித் சர்மாவால் பெருமைப்பட வேண்டும்.
    • ரோகித் தன்னுடைய ஆட்டத்தை மாற்றியுள்ளார்.

    மும்பை:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த தொடர் நிறைவடைந்தவுடன் ரோகித் சர்மா, ஓய்வு பெற்று விடுவார் என யூகங்கள் கிளம்பின. ஆனால் கோப்பையை வென்றதும் பேட்டி அளித்த 37 வயதான ரோகித் சர்மா, இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை என இது குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் 37 வயதானாலும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வென்றுக் கொடுத்துள்ள ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட்டில் மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும்போது ரோகித் சர்மாவின் வெற்றி சராசரி விகிதத்தை பாருங்கள். அது கிட்டத்தட்ட 74 சதவீதம். இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்த அவர் உச்சகட்ட அழுத்தத்தில் இந்தியாவின் வெற்றிக்கான நல்ல அடித்தளத்தைக் கொடுத்தார். எனவே ரோகித் ஓய்வு பெறுவதற்கும் விமர்சனங்களை சந்திக்கவும் காரணம் இல்லை. அதை அவருடைய சாதனைகள் பேசுகின்றன.

    இது போக அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றியுள்ளார். இதற்கு முன் பவர் பிளே ஓவர்களில் கொஞ்சம் மெதுவாக விளையாடிய அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. ஆனால் 2022-க்குப்பின் 115 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் அவர் சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். அப்படி நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை மாற்றுவது சிறந்த விஷயம் நீங்கள் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டு முன்னேறலாம்.

    ஒரு இந்திய ரசிகராக நீங்கள் ரோகித் சர்மாவால் பெருமைப்பட வேண்டும். அவரது பயணம் எப்போதும் சீராக இருப்பதில்லை. வெவ்வேறு பார்மட்டில் வெவ்வேறு பார்மை கொண்டிருக்கும். அவர் மேடு பள்ளங்களைக் கடந்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    • இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள்.
    • ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேஸ்ட்மேன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வு பெறும். இதில் இந்தியா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.

    சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள். ரோகித் சர்மா இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாட ஆரம்பித்தால் அனல் பறக்கும். ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணியும், நாளை நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    • இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.
    • பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். அதிரடி பேட்ஸ்மேனான அவர், தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்களின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு டிவில்லியர்ஸ் கூறியதாவது:-


    எனது ஒட்டுமொத்த காலத்திற்கான சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.

    பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார். அவர் வெற்றி பெற வேண்டுமென்று எப்போதும் நினைப்பார். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். அவர்தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், பல்வேறு 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறார்.

    டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை.
    • நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. ஐதராபாத் அணி நிர்ணயித்த 187 ரன் இலக்கை பெங்களூரு 19.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து எடுத்தது.

    விராட் கோலி சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 12 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும். இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.


    ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியதாவது:-

    முக்கியமான ஆட்டத்தில் நான் சதம் அடித்து இருப்பது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. நாங்கள் நல்ல தொடக்கத்தை அளிக்க விரும்பினோம். ஆனால் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுப்போம் என்று எதிர் பார்க்கவில்லை.

    டுபிளசிஸ் வேறு ஒரு அளவில் சிறப்பாக விளையாடி வருகிறார். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. வலைப்பயிற்சியில் பந்துகளை அடிப்பதுபோல் போட்டியில் அடிக்கவில்லை.

    இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன். இன்றைய ஆட்டத்தில் அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எப்போதும் ரன் கணக்குக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

    சில சமயங்களில் பெரிய இன்னிங்சை விளையாடியதற்கும் பெருமைப்பட்டு கொள்ளமாட்டேன். நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.

    நான் வித்தியாசமான ஷாட்டுகளை ஆட விரும்பவில்லை. ஒரு ஆண்டில் 12 மாதங்களிலும் விளையாடுகிறோம். இதில் வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை. எப்போதுமே எனது கிரிக்கெட் யுக்திகளுக்கு உண்மையாக இருந்து அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்.

    டுபிளசிசும் நானும் விளையாடுவதை பார்க்கும் போது டிவில்லியர்சும் நானும் விளையாடுவது போல் எனக்கு தெரிகிறது.

    இங்கு (ஐதராபாத்) ரசிகர்கள் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்தனர். சொந்த மண்ணில் விளையாடியது போல் இருந்தது. நான் விளையாடும் போது மக்கள் சந்தோஷப்படுவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.
    • இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன்.

    லண்டன்:

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கோப்பையை எந்த அணி வெல்லும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் மற்றும் முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளனர்.

    ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-


    ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை கொள்வார்கள். பேட்டிங் செய்ய இது ஒரு நல்ல விக்கெட், ஆனால் டெஸ்ட் போட்டியின் கடைசி கட்டங்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாசர் ஹூசைன் கூறியதாவது:-


    இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன். அதற்கு ஆஸ்திரேலியாவில் அவர்களது செயல்பாடு உதாரணம். சூரியன் பிரகாசிக்கும் வகையில் வானிலை ஒத்துழைத்தால் அவர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் என்ற ஃபார்முலாவின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யலாம்.

    கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அந்த மைதானத்தின் சூழலை தவறாக கணித்து விட்டனர் என கருதுகிறேன். அதே நேரத்தில் ஓவலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தை இங்கு வீழ்த்தி உள்ளது. ஷமிக்கும், கம்மின்சுக்கும் இடையே நிச்சயம் பலமான போட்டி நிலவுகிறது. அது ட்யூக் பந்தில் அவர்களது லெந்த் மற்றும் லைனில் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான்.

    என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஏபிடி வில்லியர்ஸ் அறிமுகமானார்.
    • சில சமயங்களில் அடி வாங்கினாலும் ரஷித்கான் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கப்படுகிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 19000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் குவித்துள்ளார்.

    இந்நிலையில் தனது கேரியரில் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    2006-ல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னே பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக நுணுக்கங்களை தாண்டி தம்முடைய பெயராலேயே அவர் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன்.அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது.

    ஆனால் அதற்கு நிகராக பும்ரா போன்ற புதிய பவுலர்கள் மிகப் பெரிய சவாலை கொடுத்தனர். ஏனெனில் அதிக போட்டியை கொடுத்த அவர் எப்போதும் பின் வாங்காமல் உங்களது முகத்துக்கு நேராக சவாலை கொடுப்பார்.

    அதே போல் ரஷித் கான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான ஒருவர். சில சமயங்களில் அடி வாங்கினாலும் அவரும் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    அவர் ஓவரில் நான் ஒருமுறை 3 சிக்சர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர்களைப் போன்ற பவுலர்கள் நான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

    என்று அவர் கூறினார்.

    • இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது.
    • சூர்யாவுக்கு 32-33 வயதாகிவிட்டது. நான் இன்னமும் 22 வயதான சிறுவன்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வீரர் தான் முகமது ஹாரிஸ். சர்வதேச கிரிக்கெட்டின் தனது முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், தனது அதிரடியான ஆட்டம் காரணமாக தனித்து விளங்குகிறார்.

    தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஏ.சி.சி. எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணியில் முகமுது ஹாரிஸ் விளையாடி வருகிறார். இந்த தொடரில் பாகிஸ்தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. வித்தியாசமான ஷாட்களை விளையாடி வரும் அவரை இந்திய அணியின் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவுடன் உடன் ஒப்பிட்டு கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ் பெயருடன் ஒப்பிட விரும்பவில்லை என இளம் பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது. சூர்யாவுக்கு 32-33 வயதாகிவிட்டது. நான் இன்னமும் 22 வயதான சிறுவன். அந்த இடத்தை அடைவதற்கு நான், இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

    மேலும் சூர்யா தனக்கென ஒரு இடத்திலும், ஏ.பி. டி வில்லியர்ஸ் தனது சொந்த அளவிலும், நான் எனது சொந்த அளவில் இருக்கிறேன். நான் எனக்கென 360 டிகிரி கிரிக்கெட்டர் என்ற பெயரை எடுக்க விரும்புகிறேன். அவர்களின் பெயரை பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

    • இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது.
    • என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.

    உலக கோப்பையையொட்டி எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்று முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் உலக கோப்பை போட்டியின் அரை இறுதிக்கு நுழையும் 4 அணிகள் எவை என்று கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நிச்சயமாக இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான உலக கோப்பையாக இருக்கும்.

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 பெரிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 4-வது அணியாக தென்ஆப் பிரிக்கா இணைய வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானும் முன்னேற்றலாம்.

    ஆனால் நான் தென்ஆபிரிக்கா நுழையும் என நம்புகிறேன். திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    ஆசிய கண்டத்தை சாராத 3 அணிகளை நான் தேர்வு செய்துள்ளேன். இது கொஞ்சம் கடினமானதுதான். ஆனாலும் எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

    இந்தியா ஆடுகளங்கள் நன்றாக இருக்கும். மோசமான ஆடுகளத்தை உலக கோப்பை தொடரில் பார்க்க முடியாது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
    • விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.


    புதுடெல்லி:

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.

    ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

    இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.

    4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

     

    ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.

    அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.

    விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.

    காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.

    ×