என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor vijay"

    • சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.
    • பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    சென்னையில் வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.

    பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் மாணவர்களுடன் பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
    • மகாராஜா திரைப்படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.

    இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. அன்று முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.

    இதன் எதிரொலியால், படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது. 

    இந்நிலையில், மகாராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மகாராஜா படக்குழு இன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    மேலும், விஜய்யுடன் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • த.வெ.க கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்த திட்டம்.
    • பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், கட்சியின் கொடி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கட்சியின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப மக்களை ஒன்றுபடுத்தும் வகையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு, முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தொண்டர்களுக்கு புதிய வேகத்தை கொடுத்து உள்ளது.
    • தலைமை அலுவலகத்தில் சிறப்பு பந்தல் போடப்பட்டு வருகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வேகம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு கட்சி பணிகள் நடந்து வருகிறது.

    இதைத் தொடர்ந்து கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    முதற்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 22-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

    மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதால் அதற்கேற்றவாறு மாநாடு பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. மாநாடு நடைபெறும் இடத்தை விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பல ஏக்கரில் பார்க்கிங் வசதி, உணவுக் கூடம் அமைக்கப்பட இருக்கிறது.

    மாநாட்டில் தொண்டர்கள் எடுத்து வருவதற்கு வசதியாக கட்சியின் புதிய கொடியை வருகிற 22-ந் தேதி சென்னையில் விஜய் அறிமுகப்படுத்துகிறார்.

    இதற்காக பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன்பு 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது. நேற்று பவுர்ணமி என்பதால் கொடி கம்பத்தில் 'மாதிரி' கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தனர். கொடி ஏற்றுவதை கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டனர். 22-ந்தேதி கட்சியின் அறிமுக விழா நடைபெறுவதை தொடர்ந்து விழாவுக்கு 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கென தலைமை அலுவலகத்தில் சிறப்பு பந்தல் போடப்பட்டு வருகிறது.

    நிர்வாகிகள் முன்னிலையில் சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் வெற்றியை குறிக்கும் வாகைப்பூ நடுவில் இடம் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்சி கொடியை அறிமுகம் செய்வதுடன் கொடிக் கம்பத்திலும் விஜய் கொடி ஏற்றி வைக்கிறார்.

    தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி கொடி வழங்கப்படுகிறது. கட்சிக் கொடி கிளை, நகரம், ஒன்றியம், மாநகரம் வாரியாக ஏராளமான இடங்களில் மாநாட்டுக்கு முன்பாக ஏற்றப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து மாநாட்டு பணிகள் தொடங்க இருக்கிறது. மைதானம் சீரமைப்பு, பந்தல், உணவு காண்டிராக்டர் மற்றும் பல்வேறு முன் ஏற்பாடுகளும் படிப்படியாக தொடங்கப்பட்டு நடக்க இருக்கிறது.

    கட்சிக் கொடி அறிமுகம், மாநாடு என தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தொண்டர்களுக்கு புதிய வேகத்தை கொடுத்து உள்ளது.

    • தவெக கட்சியின் கொடியை நாளை விஜய் அறிமுகப்படுத்துகிறார்.
    • தமிழக வெற்றி கழகத்தின் பாடலும் நாளை வெளியிடப்படுகிறது.

    நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

    தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

    நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்.தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
    • பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம்  நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருக்கிறார்.

    மாநாட்டுக்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.

    கடந்த திங்கட்கிழமை அன்று இந்த கொடிக்கம்பத்தில் மஞ்சள் நிறத்துடன் தனது உருவம் பொறிக்கப்பட்ட கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்தார்.

    இந்த நிலையில், கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

    பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்க வரும் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு வர இருக்கிறார். காலை 9.15 மணிக்கு கொடியை ஏற்றி வைக்கிறார்.

    • அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
    • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி வெளியாகி உள்ளது. அதில்,

    நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

    நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

    சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.
    • தவெக கட்சியின் பிரசார பாடல் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார்.

    கட்சி கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளது.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் துவத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்.
    • ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    சென்னை:

    சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் பயணத்தை தொடங்கி பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.

    * தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன்.

    * தமிழக மக்களின் வெற்றிக்கான ஒரு கொடியாக தவெக கொடி அமையும்.

    * தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.

    * ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    * என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம்.

    * நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.

    * தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை, கொடிக்கான விளக்கத்தை விரைவில் சொல்வேன் என்று கூறினார்.

    • பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு.
    • மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.

    தூத்துக்குடி:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொது அரசியலில் பணியாற்ற எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இயக்கம் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார் நடிகர் விஜய்.

    இன்றைக்கு அவருடைய கட்சியினுடைய கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றுவதாக அறிவிப்பு வந்து இருக்கின்றது. மக்கள் பணி, இயக்கப் பணி, மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அந்த வகையில் மக்களின் நம்பிக்கையை பெறுபவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது உறுதி.

    புதிய கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    பாலியல் தொந்தரவு என்பது உலக அளவில் இருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மிருகத்தனமான பாலியல்கள் செய்திகளை கேட்கும்போது வருத்தமாக இருக்கின்றது.

    இந்த பாலியல் சீண்டலில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருவது, பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் யார் என்று முதல் நிலையிலே தெரிந்தாலே உடனடியாக அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான். அப்படி கடுமையான தண்டனை இருக்குமேயானால் அடிப்படையில் பயம் இருக்கும்.

    சட்டம், ஒழுங்கு எங்கு கெடுவதாக இருந்தாலும் அதற்கு குடிப்பழக்கம், போதைப் பொருட்கள் தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதனுடைய தாக்கம் பாலியல் தொல்லைக்கும் வழி வகுக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு வேதனைக்கும், வருத்தத்திற்கு உரிய விஷயம். பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று தெரிந்தால் நேரம், காலம் தாழ்த்தாமல் உடனடியாக 20 மணி நேரம், 48 மணி நேரத்தில் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம்.

    சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார்.

     

    சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் 2 போர் யானைகள், வாகை மலர் கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிப்பாடலை கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்துள்ளார்.

     

    இதைத்தொடர்ந்து தொண்டர்களின் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தவெக கட்சியின் கொடியை கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வருங்கால எதிர்காலமாகவே பார்க்கிறேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம் என்று கூறினார்.

    இந்த நிலையில் விஜய்க்கு அவருடைய அம்மா ஷோபா வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில்,

    'இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய். நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று.

    பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு. வானில் பறக்கும் உன் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் ஒரு CM (celebrity mother). இனி நானும் ஒரு PM (proud mother)' என கூறி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

    • போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன.
    • 4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன.

    தமிழக வெற்றிக் கழக பாடல் இன்று வெளியிடப்பட்டது. பின்னணியில் போர்க்கள காட்சிகளுடன் கூடிய வீடியோ பாடலாக வெளியாகி இருக்கும் அந்த பாடலை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

    போர்க்களத்தில் 2 யானைகளில் அமர்ந்துள்ள இருவர் போர் வீரர்களை யானையை கொண்டு விரட்டி கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத யானைகளான அந்த 2 யானைகளையும் அடக்கி மக்களை காப்பதற்கு போர் வீரன் (விஜய்) குதிரையில் மின்னல் வேகத்தில் வருகிறார்.

    அதே போர்க்களத்தில் விஜய் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள 2 யானைகளும் நிற்கின்றன. போர் வீரன் குதிரையில் வந்து இறங்கியதும் 2 யானைகளும் அவனது உத்தரவுக்கிணங்க செயல்பட்டு 2 மாத யானைகளையும் துதிக்கையில் தாக்கி கீழே சாய்ப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோக்களை பரப்பி வரும் விஜய் கட்சியினர் அரசியல் களத்தில் எதிரிகளை இப்படித்தான் விஜய் சாய்க்கப் போகிறார் என்கிற வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    4½ நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளும் துள்ளல் போட வைக்கின்றன. தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பொறக்குது.

    தமிழா தமிழா நாம் வாழப் போறோமே... சட்டசபையை அலங்கரிப்போம் ரெட்டை யானை பலம் கொடுக்கும் என்பது போன்ற வரிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

    ×