என் மலர்
நீங்கள் தேடியது "Actress Andrea"
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன்.
- இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர். தங்கள் குடும்பத்தினர் குண்டு காயங்களுடன் தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும் என நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை நினைத்து மனம் உடைந்துபோனேன். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் இன்னும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைத்தும் மனம் உடைகிறது. நாட்டில் பிரிவுவாதம் அதிகரித்துவரும் இக்கட்டான இச்சூழலில், குறிப்பிட்ட மதம்/சமூக மக்களுக்கு எதிரான வெறுப்பு பரவலுக்கு, குடிமக்களான நாம் இரையாகிவிடாமல் இருக்க வேண்டும்.
என ஆண்ட்ரியா கூறினார்.
- வி.ஐ.டி. ரிவேரா கலைவிழா நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வி.ஐ.டி.யில் ரிவேரா' 23 என்ற சர்வதேச கலைத் திருவிழா 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரிவேரா' 23 சர்வதேச கலை திருவிழா 2-வது நாளான நேற்று நாளில் இன்பியூசன் எனும் சர்வதேச மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
சாகிதி எனும் தெலுங்கு பாட்டுக்கு பாட்டு நிகழ்வும், சைலன்ட் டிஸ்கோ எனும் நிகழ்வில் மாணவ, மாணவிகள் ஹெட்போன் அணிந்து கொண்டு அதில் கேட்கும் இசைக்கேற்ப நடனம் ஆடினார்கள்.
மேற்கத்திய இசையை மையப்படுத்தி 'ரெசோனன்ஸ்' நிகழ்வும், மாணவ, மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து திரைப்பட பிரபல நடிகையும், பின்னணி பாடகிமான ஆண்ட்ரியாவின் இசை கச்சேரி நடைபெற்றது.
இசைக்கச்சேரியில் ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படப் பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். மேலும் ஜாவித் அலி குழுவினரின் இசை கச்சேரியும் நடைபெற்றது. இன்று மாலை நாளயக் குழுவின் இசை கச்சேரி நடைபெற உள்ளது.
அதேபோல் மாலை ப்ரிஸ்க் பேக்டர் என்ற மாபெரும் நடனப் போட்டியும் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஐக்கியா என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார பண்பாட்டை விளக்கும் வகையில் இந்த நிகழ்வு இருக்கும் என தெரிவித்தனர்.
- படக்குழு கடந்த 2022ல் "கா" படத்தின் டிரைலரை வெளியிட்டது.
- இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல் என இரண்டிலும் அசத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர், 'தரமணி', 'அவள்', 'விஸ்வரூபம் 2', 'வடசென்னை' 'அரண்மனை', 'பிசாசு' போன்ற பல படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.
இந்நிலையில், நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா கா என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு கடந்த 2022ல் "கா" படத்தின் டிரைலரை வெளியிட்டது. இந்நிலையில், 'கா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 'கா' திரைப்படம் வரும் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.