என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்னதாக அமித் ஷா சந்தித்து பேசினார்.
- செங்கோட்டையனும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதிமுக- பாஜக இடையில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியானது. மேலும், பாஜக-வுக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் அமித் ஷாவை சந்தித்தபோது கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே செங்கோட்டையன் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். இவரும் அமித் ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் அதிமுக-வை பிரிக்க செங்கோட்டையன் மூலம் பாஜக ஆபரேசன் தாமரையை தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் முனுமுனுக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி பயணம் பற்றி எதுவும் தெரிவிக்காதது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மவுனம் அனைத்தும் நன்மைக்கே என பதில் அளித்துள்ளார்.
- 2-வது இடத்திற்குதான் போட்டி என மு.க. ஸ்டாலின் கூறியது கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக... அது உண்மையல்ல.
- கூட்டணியின் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி ஒருவர்தான் எடுப்பார். அவர் அறிவிப்பார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பேட்டியளிக்கும்போது அவர் கூறியதாவது:-
* திருப்பதி ஏழுமலையான் கோவில் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய ஸ்தலம்.
* விஜய் திமுகவுக்கும்- தவெக-வுக்கும் இடையில்தான் போட்டி என்பதற்கு எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அந்தந்த கட்சி தலைவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தங்களுடைய பேச்சுகளில் கவனம் செலுத்துவார்கள். போட்டி என்பது திமுக-வுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் என்பதை உலகம் அறியும், ஊர் அறியும். நாடு அறியும்.
* 2-வது இடத்திற்குதான் போட்டி என மு.க. ஸ்டாலின் கூறியது கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக... அது உண்மையல்ல.
* கூட்டணியை பொறுத்த வரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அருமையான வெற்றிக் கூட்டணி அமைப்பார்.
* கூட்டணியின் முடிவுகளை அவர் ஒருவர்தான் எடுப்பார். அவர் அறிவிப்பார்.
* ஒருநாள் திட்டத்தில் இருந்து 100 வேலை திட்டம் வரை அனைத்திலும் ஊழல் நடப்பதாக பொதுவாக தமிழகத்தின் மத்தியில், இளைஞர்கள் மத்தியில், சமூக ஆர்வலர்கள் மத்தியல் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திமுக-வுக்கு இனிமேல் வீழ்ச்சிதான்.
* அற்புதமான ஆட்சி கொடுத்த ஆட்சி அதிமுக என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அற்புதமான ஆட்சி அமையும். அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தல் அதிமுக-வுக்கான தேர்தல்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
- அண்மையில், செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது.
- செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும் நிலையில், செங்கோட்டையனை முன்னிறுத்தி பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
- செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு வந்தார்.
- செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கஉள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.
- பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
அதிமுக உடன் கூட்டணி இல்லை என தெளிவாக இருக்கிறேன் என்றும் அவ்வாறு இருப்பின் ராஜிமானா செய்வேன் என்று கூறினீர்களே என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எப்போதும் பேச்சை மாற்றி பேசுபவன் நான் இல்லை. வருங்காலத்தில் என்னை பார்ப்பீர்கள், எதையும் மாற்றி பேச மாட்டேன்.
நான் தெளிவாக இருக்கின்றேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.
பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.
- 'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்ற தாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்'.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
'பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; பிணியுற்றவரைச் சென்று பாருங்கள்; துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்'' என்று, நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.
'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்ற தாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்' என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. சு.திரு நாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலை வர் காதர் மொய்தீன் ஆகி யோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.
- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. இது தமிழகத்தின் நலன்களை காப்பதற்கான சந்திப்பு என்றும் கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவோ தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக 2 கட்சிகளுமே தனித் தனி அணியை உருவாக்கி போட்டியிட்டு தோல்வியையே தழுவின. அது போன்ற நிலை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் 2 கட்சி தலைவர்களும் உறுதியோடு உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். பா.ஜ.க.வால் தான் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற முடியாமல் போய் விட்டது. அதுவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.
இதற்கு பா.ஜ.க. தலைவர்களும் பதிலடி கொடுத்திருந்தனர். இது போன்ற காரணங்களால் 2 கட்சி தலைவர்களிடையே மனக்கசப்பும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2 கட்சிகளின் விருப்பமாக உள்ளது.
இதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என டெல்லி பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட்டணி விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளநிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளையும் சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் அதற்கான சூழலை உருவாக்குவதில் தமிழக தலைவர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும் டெல்லி பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது.
இப்படி அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி விட்டு அதன் பிறகே 2-வது கட்ட கூட்டணி பேச்சுவார்த் தையை நேரடியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் பட்சத்தில் அது வலிமையான கூட்டணியாக நிச்சயம் மாறும் என்றே அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை:
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் சூட்டை கிளப்பி இருப்பதுடன் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே அமித்ஷா-செங்கோட்டையன் சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்று அமித்ஷா, செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க.வினரை முழுவதுமாக அணி திரட்ட முடியவில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையனை கொம்பு சீவி விட்டு என்ன நடக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு செங்கோட்டையனை அவருக்கு எதிராக எப்படி திருப்பி விட முடியும் என்பதும் பாரதிய ஜனதா கட்சியினரின் கேள்வியாக உள்ளது.
- தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.
- கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
ராமமூர்த்தி என்பவர் 2021-ம் அண்டு இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்- இ.பி.எஸ் யுகாதி வாழ்த்து.
- தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
'யுகாதி' என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுமான செயல், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை
- யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள்.
- இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது.
மதுரை:
மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
இன்றைக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுவிட்டது, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது. போதைப்பொருள் குறித்து அறிவுரை சொன்ன உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் படுகொலை செய்யப்படுகிறார். இது குறித்து நீதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. இது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கடமையாகும்.
கேள்வி நேரம் புரிந்து ஜீரோ ஹவரில் தான் கேள்வியை எழுப்பினோம், சபாநாயகரும் அனுமதி தந்தார். ஆனால் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்லாமல் முறையாக நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று கூறுகிறார்.
நாங்கள் இதை கேள்வி நேரத்தில் கேட்கவில்லை. இது மக்களின் கோரிக்கையாகும். முதலமைச்சர் இதற்கு பதில் பேச மறுக்க காரணம் என்னவென்றால், உதயநிதி பேசும் பொழுது சட்டசபையில் அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்று காவலர்களை வைத்து எங்களை வெளியே தூக்கிப் போட்டனர். ஜனநாயகம் எங்கே போய்விட்டது? சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது.
உதயநிதி சிறப்பாக பேசுகிறார். அழகாக பேசுகிறார் என்று ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை, குற்றம் குறைகளை சுட்டி காட்டும் ஆண்மகனாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். உதயநிதி மானிய கோரிக்கைக்கு காய்ச்சலால் வரவில்லை என்று கூறுகிறார்கள். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த உடன் தி.மு.க. அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துவிட்டது.
தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, நிதி அமைச்சர் அழகு தமிழில் பேசுகிறார். ஆனால் உள்ளே கடன் தான் உள்ளது.
தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள். ஆனால் பார்க்க தான் ஆள் இல்லை. இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசுக்கு திராணி இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும். மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் .
இவ்வாறு அவர் கூறினார்.