என் மலர்
நீங்கள் தேடியது "Advt"
- கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடி அதிகமாக இருந்தது.
- ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முடிவடைந்த 17-வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடி அதிகமாக இருந்தது. இதனால் இந்த சீசனில் ரன் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அதன் முடிவில் நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி வளர்ச்சியை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. இதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி என்று பிரிந்ததும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஐபிஎல் அணிகளின் மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு ரூ.1,930 கோடியாக கணக்கிடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. அதன் மதிப்பு ரூ.1,896 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் ரூ.1,805 கோடி மதிப்புடன் கொல்கத்தா உள்ளது. 4வது இடத்தில் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை அணியின் மதிப்பு ரூ.1,704 கோடியாக உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.1,111 கோடியாகவும், ஐதராபாத் அணியின் மதிப்பு ரூ.1,103 கோடியாகவும் உள்ளது.
- நாடகம் போன்று நடத்தி அதற்காக பணம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம்.
- வார நாட்களில் ரூ. 1,975, வார இறுதி நாட்களில் ரூ. 2,963 வரை வசூலிக்கிறார்.
சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரது கனவாக உள்ளது. அதில், சிலர் வில்லனாக நடித்து புகழ் பெற வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் மலேசியாவை சேர்ந்த ஷாசாலி சுலைமான் (வயது 28) என்பவர் சினிமாவில் வருவது போல நிஜத்திலும் வில்லனாக நடித்து பணம் சம்பாதிக்கிறார். அதாவது காதலி மற்றும் மனைவி முன்பு தங்களை ஹீரோ போல காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்காக வில்லனாக மாற தயார் என்று விளம்பரம் செய்துள்ளார். காதலி மற்றும் கணவன் இல்லாத நேரத்தில் பெண்களை பின் தொடர்ந்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து பின்னர் கணவர் அல்லது காதலன் வரும் போது அவர்களிடம் அடி வாங்கி பெண்கள் முன்பு உங்களை ஹீரோவாக்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
நாடகம் போன்று நடத்தி அதற்காக பணம் ஈட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளாராம். ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் கூட தன்னை அணுகலாம் என கூறியுள்ள சுலைமான் இதற்காக கட்டணம் வசூலிக்கிறார்.
வார நாட்களில் ரூ. 1,975, வார இறுதி நாட்களில் ரூ. 2,963 வரை வசூலிக்கிறார். இவரது அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.