என் மலர்
நீங்கள் தேடியது "Agasthiyar"
- அகத்தியர் சிலைக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர்.
தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகைமலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் நதி. இந்த நதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கிறது.
இந்த நிலையில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தாமிரபரணி நதியின் உப நதியான கடனா ஆறு, மணிமுத்தாறு, பச்சையாறு, சிற்றாறு உள்பட ஆறுகளும் வறண்டு விட்டன.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி வறண்டு போனால் மே மாதம், பொதிகை மலையில் அகத்தியருக்கு பூஜை செய்வது வழக்கம். எனவே இந்த வருடமும் அதுபோன்ற பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர்.
இதற்காக செய்துங்க நல்லூரில் இருந்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், பஞ்சாயத்து எழுத்தர் சங்கர பாண்டியன், உச்சிமகாளி சுவாமி உள்பட 16 பேர் கொண்ட குழுவினர் கடந்த 26-ந்தேதி மாலை கிளம்பினர்.
இவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட தாமிரபரணி ஆர்வலர்கள் வழி அனுப்பி வைத்தனர். இவர்களை போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பொதிகைமலை யாத்திரைக்கு வருகை தந்தனர். கேரள வனத்துறைக்கு உட்பட்ட விதுரா வழியாக கானித்தலம் வந்து, அங்குள்ள சோதனை சாவடியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு போனக்காடு என்ற பகுதிக்கு வந்தனர்.
அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கரடு முரடான பயணத்தினை தொடங்கினர். அவர்கள் தங்கர் பச்சான் கோவில், லாத்தி மோட்டா, கருமேனியாறு, வாலை பிந்தியாறு, அட்டையாறு, புல்வெளி, ஏழுமடங்கு, ஏ.சி. காடு வழியாக அத்திரிமலை பங்களா வந்து அடைந்தனர்.
அங்கு இரவு ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் காலை மீண்டும் பயணத்தினை தொடங்கினர். அவர்கள் மதிமயக்கும் சோலை, தாமரைக்குளம், பொங்கலா பாறை, சங்குமுத்திரை, வழுக்கு பாறை, இடுக்கு பாறை ஆகிய மூன்று இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை பிடித்து ஏறி பொதிகை மலை உச்சிக்கு சென்றனர்.
அங்கு அகத்தியர் சிலைக்கு பால், நெய், விபூதி, சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் நடந்தது. பின்னர் தாமிரபரணி நதி வற்றாமல் இருக்கவும், பருவ காலங்களில் மழை பெய்யவும் சிறப்பு வழிபாடு நடந்தது.
அங்கு வந்த பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர். அவர்கள் வேண்டுதல் நடத்தும் போதே மழை பொழிந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முடிந்து கீழே இறங்கியவுடன் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி அத்திரி பங்களாவில் இரவு தங்கி விட்டு, 3-வது நாள் கீழே இறங்கி வந்தனர். பொதிகை மலை உச்சியில் கடந்த 1996-க்கு பிறகு தமிழ்நாடு வனத்துறை பாதை அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் கேரள வனத்துறை சார்பில் அனுமதி பெற்று அகத்தியரை தரிசனம் செய்ய மக்கள் செல்கிறார்கள். இவர்கள் வேண்டுதல் நிறைவேறி மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற பக்தர்கள் நம்பிக்கை நிறைவேறட்டும்.
- சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது.
- இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் பழனியம்பதியாக உள்ளது.
பார்வதி திருமணம் நடைபெறும் சமயத்தில் தென் கோடியிலுள்ள மக்கள் அனைவரும் திருமண வைபவத்தை காண வடகோடியை நோக்கி சென்றனர்.
அந்த சமயம் தென்கோடி உயர்ந்தும் வடகோடி தாழ்ந்தும் இருக்க, சிவபெருமான் அகஸ்தியரை நோக்கி நீ தென்கோடியில் பொதிகை நோக்கி சென்றடைவாய் என்று பணித்தார்.

அதற்கு அகஸ்தியர், எல்லோரும் உங்கள் திருமண வைபவத்தை காண நான் மட்டும் தங்கள் திருமணத்தை காண கொடுத்து வைக்காதவனாக உள்ளேன் என்று சொன்னார். அதற்கு இறைவன், உனக்கு அங்கே திருமண வைபவ காட்சியளிக்கிறேன் என்றார்.
எல்லோரும் வடதிசை நோக்கி வரும்போது அவர்கள் அனைவரும் பலம் உடையவர், அதனால் தான் நீ தென்திசை சென்றால் சமமாகும் எனக் கூறினார்.
அதன்பின் தென்திசையை நோக்கி வரும்போது, இடும்பாசுரன் (சூரபத்மன் முதலான அசுரர்களின் தலைவன்), அகஸ்தியரை எதிர்கொண்டு அவரை நமஸ்கரித்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான். அகஸ்தியரும் இடும்பனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.
இடும்பாசுரன் தங்களுக்குண்டான பணிவிடை செய்ய வேண்டும் என்று வேண்டியபோது, அகஸ்தியர் அவசரமாக தென்திசை நோக்கி வந்ததால் எனது சிவபூஜையை சென்று எடுத்து வருவாயாக என்று பணித்தார்.

இடும்பாசுரன் வடதிசை நோக்கி சென்று மலையில் சிவபூஜை எங்கு உள்ளது என்பதை அறியாது சிவகிரி மற்றும் சத்யகிரி ஆகிய 2 மலைகளையும் காவடியாக எடுத்துக் கொண்டு தென் திசையை நோக்கி வரும்போது வழியறியாது சென்னிமலை வந்தடைந்தான்.
அப்போது சென்னிமலை துவாபரயுகத்தில் புஷ்பகிரியாக இருந்தது. இடும்பாசுரன் பொதிகைக்கு வழி அறியாது இருக்கும்போது, முருகப் பெருமான் ராஜகுமாரனாக காட்சி அளித்து பொதிகைக்கு செல்ல இடும்பனுக்கு வழி காட்டிய இடம்தான் புஷ்பகிரி (சென்னிமலை) ஆகும்.
சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் தற்போது பழனியம்பதியாக உள்ளது.