என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agreement"

    • கோலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார்.
    • உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

    வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 குறித்து விளக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட கோலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023 காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்துள்ளது.
    • கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    கிழக்கு லடாக், அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கால்வான் பகுதியில் 2020-ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா-சீனா இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கிழக்கு லடாக் பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவ வீரர்களை குவித்து வந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.

    இருநாட்டுக்கும் எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படாததால் எல்.ஏ.சி. எனப் படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு நாட்டு ராணுவ வீரர் களும் அவரவர் பகுதியில் ரோந்து சென்று வந்தனர்.

    இருநாட்டினரும் தொடர்ந்து ராணுவ வீரர்களை நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் குவித்ததால் அங்கு எப்போது வேண்டு மானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் இருந்து வந்தது.

    இதற்கு தீர்வு காண 4 ஆண்டுகளாக இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதில் உடன்பாடு ஏதுவும் ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவத்தினரும், எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

    ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து, ரஷ்யாவில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினர்.

    அப்போது எல்லையில் ராணுவ வீரர்களை வாபஸ் பெறும் முடிவிற்கு, இருநாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர். அதன் படி இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்க தொடங்கியுள்ளனர்.

    சீன ராணுவமும் கிழக்கு லடாக் பகுதியில் தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தது. இந்திய ராணுவமும் சில படைகளை திரும்பப் பெற்றது. எல்லையில் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைந்து இயல்பு நிலை சூழல் உருவாகியுள்ளது.

    அந்த பகுதியில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. இதனிடையே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கி கொள்ளப்பட்டாலும் சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 நிறுவனங்களான, அசாம் திப்ரூகார் -பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், உத்திரபிரதேசம் கோரக்பூர் -பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், மத்திய பிரதேசம் ஜபல்பூர் -தேசிய பழங்குடியினர் ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனம், பீகார் பட்னா -ராஜேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர்கள் அஷ்வனி குமார், கன்வர் நரேன், ரஜினிகாந்த் ஸ்ரீவஸ்தவா, அபரூப் தாஸ், டாக்டர் கிருஷ்ணா பாண்டே, சர்வதேச சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் முகேஷ் குமார், டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 5 இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் ஒரு புதிய முதுகலை படிப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

    மேலும் முனைவர் பட்டத்திற்கான இரட்டை வழிகாட்டி முறை, மாநாடுகள், பட்டறைகள் நடத்துதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளது.

    • வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.

    திருப்பூர் 

    இந்தியா - பிரிட்டன் இடையே, வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜூலை 29ல் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்று, முக்கிய அம்சங்கள் குறித்து பேசினர்.

    இது குறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:- இந்திய ஆயத்த ஆடைகளுக்கு பிரிட்டனில், 9 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சு வேகமெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.முக்கியமான, 15 அம்சம் குறித்து இரு நாட்டு தொழில் நுட்பக்குழுவினர் 85 அமர்வுகளில் பேசிஉள்ளனர்.வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வர்த்தக ஒப்பந்தத்தால், இந்திய ஆயத்த ஆடைகள், பிரிட்டன் சந்தையில் வரியின்றி இறக்குமதியாகும்.இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய ஏற்றுமதியாளர்கள், போட்டி நாடுகளை எளிதாக எதிர்கொண்டு, பிரிட்டனுக்கான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க செய்ய முடியும். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, பிரிட்டனிலிருந்து ஆர்டர் வருகை கண்டிப்பாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் இல்லை.
    • அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் போக்குவரத்து கழக ஏ.ஐ.டி .யூ .சி. தொழிலாளர் சங்கத்தின் 39-வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். 39 -வது பேரவை கொடியினை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை கவுரவ தலைவர் சுந்தரபாண்டியன் வாசித்தார். மாநில செயலாளர் சந்திரகுமார் பேரவையை தொடக்கி வைத்து பேசினார். சங்க பொதுச் செயலாளர் கஸ்தூரி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் தாமரைச்செல்வன் வரவு செலவு வாசித்தார்.

    இந்த பேரவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் இல்லை என்ற போக்குவரத்து துறை அமைச்சரின் அறிவிப்பினை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு போர்க்கால அடிப்படையில் உரிய நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும், தொழிலாளர்களின் 14- வது ஊதிய ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைவதால் உடனடியாக ஒப்பந்தம் பேசி முடித்து மூன்றாண்டு ஒப்பந்த பலன்கள் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டும், நிலுவை தொகை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், மின்வாரிய சம்மேளன துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஏ .ஐ. டி .யூ .சி மாவட்ட தலைவர் சேவையா, தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் மல்லி தியாகராஜன், பொதுச்செயலாளர் அப்பாத்துரை, பொருளாளர் பாலசுப்பிரமணியன், கட்டுமான சங்க செயலாளர் செல்வம் , டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம், துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் நன்றி கூறினர்.

    வியட்நாம் வந்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit
    ஹனோய்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘மை சன்’ கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.



    இந்நிலையில், தலைநகர் ஹனோயில் இன்று வியட்நாம் அதிபர் ப்ஹு டிராங்-கை அவர் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பாதுகாப்புத்துறை, ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்காக அணுசக்தியை பயன்படுத்துவது, விண்வெளித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெட்ரோலிய கச்சா எண்ணைய், எரிவாயு, உள்கட்டமைப்பு துறை மேம்பாடு, வேளாண்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பான துறைகளில் இருநாடுகளும் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

    இருநாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் வகையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இந்தியாவும், வியட்நாமும் இனி தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்களும் இந்த சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தினர்.

    இன்றைய பேச்சுவார்த்தையின்போது தலையெடுத்து வரும் பயங்ரவாதத்தை அனைத்து வகையிலும் எதிர்ப்பது எனவும் அவர்கள் உறுதியேற்றனர். வியட்நாம் அதிபருடனான இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பின்னர் ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்டார்.

    தொலைத்தொடர்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

    வியட்நாம் ராணுவத்துக்கு தேவையான ஒத்துழைப்பை நல்கவும், வியட்நாம் கடலோர எல்லைப் பகுதியில் கண்காணிப்பை மேம்படுத்தவும் அதிவிரைவு படகுகளை தயாரிக்க இந்தியா 10 கோடி டாலர்கள் கடன் உதவி அளிக்கும் எனவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

    இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான கடந்த ஆண்டு வர்த்தகம் 128 கோடி அமெரிக்க டாலர்களாக ஏறுமுகம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்த தொகை 150 கோடி டாலர்களாக உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit 
    சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டது.

    எனினும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்தது. உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

    இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாகவும், மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் கிம் ஜாங் அன்னும் சாதகமான கருத்தையே கூறினார்.



    அதன்பின்னர், இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அமைதி மற்றும் நட்புறவு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் என தெரிகிறது.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    ×