என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIIMS Delhi"

    • கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
    • கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது.

    4-வது முறையாக கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் இந்த குழந்தையை பெற்றெடுக்க விரும்பினர்.

    இதையடுத்து கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

    மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை மகப்பேறு மருத்துவதுறையுடன் இணைந்து இதயவியல் மற்றும் இதய மயக்க மருந்துத்துறை டாக்டர்கள் குழுவினர் செய்தனர்.

    அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயின் அடி வயிற்றில் துளையிட்டு மெல்லிய குழாய் செலுத்தப்பட்டது.

    அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிலிருந்து சிறிய பலூன் வடிகுழாயை பயன்படுத்தி, திராட்சை அளவு கொண்ட இதயத்தில் இருந்து அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

    இந்த சிகிச்சையை 90 வினாடிகளில் செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மூத்த டாக்டர் ஒருவர் கூறும்போது, தாயின் அடி வயிற்றின் வழியாக கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் ஒரு ஊசியை செலுத்தி அடைப்பை சரி செய்தோம். குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மேலும் குழந்தை பிறக்கும் போது இதய நோய் தீவிரம் குறைவாக இருக்கும். இது போன்ற ஒரு செயல் முறை மிகவும் சவாலானது. ஏனென்றால் அது கருவின் உயிருக்கு கூட ஆபத்தாகலாம்.

    இந்த சிகிச்சை மிக விரைவாக செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இதயத்தின் பெரிய அறையை துளைக்க வேண்டி இருந்தது ஏதாவது தவறு நடந்தால் குழந்தைக்கு ஆபத்தாக முடியும். இந்த சிகிச்சையை நாங்கள் விரைவாக செய்து முடித்தோம் என்றார்.

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
    • சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.


    சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.

    இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

    • டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது.
    • உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பணியாற்றி வரும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில டாக்டர்களின் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரு மாநிலங்களின் புதிய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடர்பாக பேசினார். அப்போது, இந்த மருத்துவக்கல்லூரிகளின் தரத்தை குறைக்கமாட்டோம் என உறுதிபட தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது. ஆனால் 1980-களில்தான் அரு ஒரு பிராண்டாக உருவெடுத்தது. அந்தவகையில் எந்தொரு நிறுவனமும் முழு அளவில் வளர்ச்சியடையவும், இயங்கவும் 20 ஆண்டுகள் எடுக்கும்.

    அதேநேரம் எய்ம்ஸ் தரத்தை குறைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அந்த பிராண்ட் பெயரை பாதுகாப்போம். மேலும் ஆசிரியர் தேர்வில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம்.

    பீகாரின் தர்பங்காவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான பூமி பூஜை விரைவில் நடைபெறும். ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஊழியர் தேர்வுடன் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    மருத்துவக்கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான கொள்கை மாற்றங்கள் நடந்துள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திராக மாற்றப்பட்டு உள்ளன. தற்போது 1.73 லட்சம் மந்திர்கள் உள்ளன. டிஜிட்டல் முறையில் அவற்றின் தர மதிப்பீடு நடைபெறுகிறது.

    பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

    உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    387 ஆக இருந்த நாட்டின் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 786 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 156 மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு உள்ளன.

    இதைப்போல எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 75 ஆயிரத்துக்கு மேல் உயர்த்தவும் திட்டம் உள்ளது.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    • உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

    33 ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், மாநிலங்களவையில் சிங் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். நான்கு மாதங்கள் மேலவையில், ஜூன் மாதம் பி.வி.நரசிம்மராவ் அரசின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பதவியேற்றார்.

    • ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று இரவு திடீரென சென்றார்.
    • நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

    புதுடெல்லி:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக லாரி டிரைவர், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரெயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட தொழில் சார்ந்தவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென சென்றார்.

    எய்ம்ஸ் மருத்துவமனையைச் சுற்றியுள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக வந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவர்கள் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குளிர்ந்த நிலம், பசி மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் சுடரை எரித்துக்கொண்டே இருக்கிறார்கள். மத்திய அரசும், டெல்லி அரசும் பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    ×