என் மலர்
நீங்கள் தேடியது "Airtel"
- தேசிய பாதுகாப்பு கோரும்போது இணைப்பை இயக்க அல்லது முடக்க யாருக்கு அதிகாரம் இருக்கும்?.
- அது ஸ்டார்லிங்காக இருக்குமா அல்லது அதன் இந்திய கூட்டாளிகளாக இருக்குமா?.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவிரைவு இணைய சேவை வழங்கி வருகிறது. நகரம் மற்றும் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள குக்கிராமங்களில் கூட ஸ்டார்லிங்கால் இணைய சேவை வழங்க முடியும்.
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் நெட்வொர்க் சேவையில் முன்னணியாக திகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில்தான் அதிகவேக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் உடன் ஏர்டெல் மற்றும் ஜியோ ஒப்பந்தம் செய்துள்ளன. மத்திய அரசு அனுமதி கிடைத்த உடன் ஸ்டார்லிங்க் இந்தியாவில் கால்பதிக்கும்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் நல்லெண்ணத்தை பெற பிரதமர் மோடியால் கூட்டாண்மை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் விமரம்சித்துள்ளது.
ஸ்டார்லிங்கின் உரிமையாளர் எலான் மஸ்க் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் நல்லெண்ணத்தை பெற இந்த கூட்டாண்மைகள் பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், "இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் உள்ளன. ஒருவேளை மிக முக்கியமான ஒன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். தேசிய பாதுகாப்பு கோரும்போது இணைப்பை இயக்க அல்லது முடக்க யாருக்கு அதிகாரம் இருக்கும்?. அது ஸ்டார்லிங்காக இருக்குமா அல்லது அதன் இந்திய கூட்டாளிகளாக இருக்குமா?. செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைப்பு வழங்கும் மற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படுமா?. அப்படி என்றால் எந்த அடிப்படையில்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்கும்.
- மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிக்கை மூலம் அறிவித்தது.
"இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது. ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்வோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏர்டெல்லை தொடர்ந்து அதன் போட்டியாளரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஷடார்லிங்க் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களை ஸ்பேஸ்எக்ஸ் பெறுவதற்கு உட்பட்டது இந்த ஒப்பந்தம்.
ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ், ஜியோவின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார்லிங்க் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், ஸ்டார்லிங்க் சேவைகளை நேரடியாக நுகர்வோர் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டுக்கு கொண்டுசேர்க்க முடியும் என்பதையும் ஆராய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு சேவையை நிறுவித் தந்து அதனை செயல்படுத்துவதை உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு நிறுவப்படும்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு நம்பகமான இணையம் முழுமையாக அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஜியோவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஸ்பேஸ்எக்ஸ் உடனான ஒப்பந்தம் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல், ஜியோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் சில சலுகைகளை அதிரடியாக நீக்கியது.
- நீக்கிய சலுகைகளுக்கு மாற்றாக சிலவற்றை ஏர்டெல் மாற்றியமைத்து வருகிறது.
இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. முன்னதாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பலன்களை மாற்றியமைத்து மீண்டும் அதே விலையில் அறிவித்து வருகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஏர்டெல் ரூ. 199 விலை சலுகையில் தினமும் 1ஜிபி டேட்டா, 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. பின் இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஏர்டெல் ரூ. 199 சலுகையில் தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி, 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இலவச ஹெலோ டியூன்ஸ், வின்க் மியூசிக் சந்தா, உள்ளூர் எஸ்எம்எஸ் ரூ. 1, எஸ்டிடி எஸ்எம்எஸ் ரூ. 1.5 பைசாவுக்கு வழங்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் 1MB-க்கு ரூ. 50 பைசா வசூலிக்கப்படும். மொத்தத்தில் 300 எஸ்எம்எஸ் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. எனினும், இது தினமும் அதிகபட்சம் 100 ஆகவே நிர்ணயம் செய்யப்பட்டு உளள்ளது. சலுகை தீர்ந்ததும், அதன் பலன்கள் தானாகவே காலாவதியாகி விடும்.
- இந்திய டெலிகாம் சந்தையில் புதிய தலைமுறை செல்லுலார் கனெக்டிவிட்டி வெளியிடப்பட்டு வருகின்றன.
- முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது.

இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.
குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது.

நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக வி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி வி எந்த தகவலையும் வழங்கவில்லை.
- பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- இது மட்டுமின்றி தனது பிரீபெயிட் சலுகை மற்றும் அதன் பலன்களையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே வருகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை உயர்த்தி இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட குறைந்தபட்ச ஏர்டெல் சலுகை விலை தற்போது 57 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய விலை ரூ. 155 என மாறி இருக்கிறது. இந்த சலுகை விவரங்கள் ஏர்டெல் ஹரியானா மற்றும் ஒடிசா மாநில வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.
மேற்படி ரூ. 99 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையை ஏர்டெல் அதிரடியாக நீக்கி இருக்கிறது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 200MB டேட்டா, அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணத்தில் வழங்கப்படுகிறது. தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில் ஏர்டெல் குறைந்தபட்ச ரிசார்ஜ் விலை ரூ. 155 ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

தற்போது சோதனை அடிப்படையில் இந்த சலுகை இரு பகுதிகளில் மட்டும் வழங்கப்படுகிறது. சோதனை முடிவுக்கு ஏற்ப இந்த சலுகை நாடு முழுக்க வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரூ. 155-க்கும் குறைந்த விலையில் 28 நாட்கள் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பலன்களை வழங்கும் அனைத்து சலுகைகளையும் நீக்க ஏர்டெல் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய மாற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண்ணை ஆக்டிவேட் செய்த நிலையில் வைத்திருக்க ரூ. 155 விலையில் ரிசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். மாதாந்திர சலுகையில் எஸ்எம்எஸ் சேவையை பெறவாவது ரூ. 155 விலை சலுகையை ரிசார்ஜ் செய்வது அவசியமாகி விடும்.
- வீட்டில் பொழுதுபோக்கிற்கு அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட் டிவி-க்கள் மாறி விட்டன.
- குறைந்த செலவில் ஸ்மார்ட் டிவி அனுபவத்தை வழங்கும் அசத்தல் திட்டத்தை ஏர்டெல் அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல் இந்தியா நிறுவனம் பயனர்கள் தங்களின் சாதாரண டிவி-யை ஸ்மார்ட் டிவி-யாக மாற்றிக் கொள்ளும் வசதியை ரூ. 1500-க்கு வழங்குகிறது. வீட்டில் பொழுதுபோக்கிற்கான அத்தியாவசிய சாதனமாக ஸ்மார்ட் டிவி-க்கள் மாறி வருகின்றன. சமீப காலங்களில் ஒடிடி சேவை அதிக பிரபலம் அடைந்து விட்ட நிலையில், பல்வேறு வீடுகளில் ஒன்றாக அமர்ந்து டிவி பார்க்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.
அந்த வகையில், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் பயனர்களின் சாதாரண டிவி-யை ஸ்மார்ட் டிவி-யாக மாற்றுகிறது. எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் கொண்டு ஒடிடி தரவுகளை டிவி-யில் ஸ்டிரீம் செய்து பார்க்க முடியும். ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் சாதனமான ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் விலை ரூ. 1500 என மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 650 ஆகும். எனினும், தற்போது இதன் விலை ரூ. 1500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் ஏர்டெல் மற்ற சேவைகளான ஏர்டெல் பிளாக் ஒருங்கிணைத்து பெற முடியும். ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் சோனி லிவ், அமேசான் பிரைம், இரோஸ் நௌ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் பல்வேறு ஒடிடி தளங்களை கொண்ட செட் டாப் பாக்ஸ் ஆகும். இதில் 5 ஆயிரத்திற்கும் அதிக செயலிகள் உள்ளன.
மேலும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், 500-க்கும் அதிக டிவி சேனல்கள், கூகுள் அசிஸ்டண்ட் மூலம் சர்ச் வசதி, ஆண்ட்ராய்டு டிவி 9 உள்ளது. இந்த செட் டாப் பாக்ஸ் தரவுகளை 4K ரெசல்யூஷனிலும் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் ரிமோட் பல்வேறு ஒடிடி தளங்களுக்கான ஹாட்கீ கொண்டுள்ளது. ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அருகாமையில் உள்ள ரிடெயில் ஸ்டோர் சென்று ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ்-ஐ வாங்கிக் கொள்ளலாம்.
- பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த பட்ச சலுகை விலையை தொடர்ச்சியாக மாற்றியமைத்து வருகிறது.
- விலை உயர்வு தவிர நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளிலும் ஏர்டெல் ஈடுபட்டுள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த விலை பிரீபெயிட் சலுகைகளின் விலையை உயர்த்தி இருக்கிறது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஒன்பது டெலிகாம் வட்டாரங்களில் விலை உயர்வை அமலுக்கு கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஹரியானா மற்றும் ஒடிசாவில் குறைந்த விலையில் கிடைத்த பிரீபெயிட் சலுகை விலையை 57 சதவீதம் அதிகரித்தது. தற்போது நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் குறைந்த பட்ச பிரீபெயிட் சலுகை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்டெல் ரூ. 99 சலுகை விலை தற்போது ரூ. 155 ஆக அதிகரித்துள்ளது.

ஏர்டெல் ரூ. 99 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி, 200MB டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற பலன்களை வழங்கியது. தற்போது புதிய குறைந்த விலை பிரீபெயிட் சலுகையான ரூ. 155 வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நாட்டின் ஏழு டெலிகாம் வட்டாரங்களில் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இவை எந்தெந்த பகுதிகள் என்ற விவரம் தற்போது மர்மமாகவே உள்ளது.
"சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எங்களின் குறிக்கோளை அடையும் வகையில், நாங்கள் மீட்டர்டு சலுகையை நிறுத்திவிட்டு, ரூ. 155 விலையில் எண்ட்ரி லெவல் சலுகையை அறிவித்து இருக்கிறோம். இதில் 1GB டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் உள்ளன. இது பயனர்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்கும்," என ஏர்டெல் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
- ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- 5ஜி வெளியீடு மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
ஏர்டெல் நிறுவனம் இரண்டு புது பிரீபெயிட் சலுகைகளை இந்திய பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகைகளின் விலை ரூ. 489 மற்றும் ரூ. 509 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் முறையே 50 ஜிபி மற்றும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றன. இவற்றின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
புதிய ரூ. 489 ஏர்டெல் சலுகைகள் 30 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 50 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ. 509 சலுகையில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், 60 ஜிபி அதிவேக டேட்டா, 300 எஸ்எம்எஸ், ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இரு சலுகைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாட்டை கடந்ததும், எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ. 1, 1MB டேட்டாவுக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுதவிர இரு சலுகைகளிலும் ஏர்டெல் தேங்ஸ் பலன்களான மூன்று மாதங்களுக்கு அப்போலோ 24|7 சர்கிள் சந்தா, ஃபாஸ்டேகிற்கு ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன் மற்றும் வின்க் மியூசிக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- ஏர்டெல் நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகை பலன்களை ஏர்டெல் அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.
இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெறுவது எப்படி?
ரூ. 239 மற்றும் இதை விட அதிக தொகை கொண்ட பிரீபெயிட் சலுகை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தகுதியுடைய பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் (Airtel Thanks App) சென்று இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.
பயனர்கள் இனி அதிவேக, பாதுகாப்பு நிறைந்த 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அனைத்து சலுகைகளிலும் டேட்டா கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இன்றி பயன்படுத்தலாம்.
- ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வேரியன்டில், 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.
- இது போக்கோ C51 ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.
போக்கோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில், தனது C51 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது இதே ஸ்மார்ட்போனின் ஏர்டெல்-எக்ஸ்குளூசிவ் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது போக்கோ C51 ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது.

போக்கோ C51 ஏர்டெல்-லாக்டு வேரியன்ட் விவரங்கள்:
புதிய சலுகையின் கீழ் போக்கோ C51 ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 5 ஆயிரத்து 999 எனும் விலையில் வாங்கிட முடியும். இதில் ஏர்டெல் பிரத்யேக பலன்களும் அடங்கும். பலன்களை பொருத்தவரை 7.5 சதவீதம் அதிகபட்சம் ரூ. 750 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் 50 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
50 ஜிபி இலவச டேட்டா, ஐந்து வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இவற்றில் பயனர்கள் மாதம் ஒரு வவுச்சரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு வவுச்சருக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. புதிய ஏர்டெல் லாக் செய்யப்பட்ட வேரியன்டில், பயனர்கள் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.
சாதனத்தை அன்லாக் செய்வதற்கு பயனர்கள் ஸ்மார்ட்போனினை செட்-அப் செய்த 24 மணி நேரத்திற்குள் ஏர்டெல் சிம் ஒன்றை செருகி, குறைந்தபட்சம் ரூ. 199 விலை கொண்ட ஏர்டெல் ட்ரூலி அன்லிமிடெட் ரிசார்ஜ் செய்ய வேண்டும்.
இவற்றை செய்த பிறகு, இரண்டாவது சிம் கார்டு ஸ்லாட்-இல் ஏர்டெல் இல்லாத சிம் கார்டை பயன்படுத்த முடியும். ஏர்டெல் லாக் செய்யப்பட்ட போக்கோ C51 ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை (ஜூலை 18) ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக துவங்க இருக்கிறது.

போக்கோ C51 அம்சங்கள்:
6.52 இன்ச் LCD ஸ்கிரீன், HD+ 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர்
4 ஜிபி ரேம்
3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம்
ஆன்ட்ராய்டு 13 கோ எடிஷன்
8MP பிரைமரி கேமரா
டெப்த் சென்சார்
5MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்
3.5mm ஹெட்போன் ஜாக், எப்எம் ரேடியோ
பின்புறம் கைரேகை சென்சார்
- ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட பெரியது.
- ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை 200Mbps வேகத்தில், 3.3TB டேட்டா வழங்குகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இந்திய சந்தையில் முன்னணி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் திட்டத்தில் பயனற்கள் 40Mbps துவங்கி அதிகபட்சம் 1Gbps வரையிலான இணைய வேகத்தில் ஏராளமான சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கான தேவைக்கு ஏற்ப பயனர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் வழங்கி வருகிறது. இதில் ஒடிடி பலன்களை வழங்கும் சலுகைகளும் அடங்கும். அந்த வகையில், ஏராளமான ஒடிடி பலன்களை கொண்ட பிராட்பேன்ட் இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் ஏர்டெல் சேவையை தேர்வு செய்து சிறப்பானதாக இருக்கும்.

ஏர்டெல் சேவை நாடு முழுக்க வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட அளவில் பெரியது ஆகும். இதன் காரணமாக பிராட்பேன்ட் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து கொள்ள முடியும். ஒடிடி பலன்களை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரூ. 999 சலுகை பலன்கள்:
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 999 சலுகையில் 200Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மாதம் 3.3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபிக்சட் லைன் காலிங் வசதி வழங்கப்படுகிறது. லேன்ட்லைன் சாதனத்தினை வாடிக்கையாளரே வாங்கிக் கொள்ளலாம்.
இவை தவிர இந்த சலுகையில்- அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர், விஐபி சர்வீஸ், அப்போலோ 24|7 சர்கில் சந்தா மற்றும் வின்க் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- ஏர்டெல் நிறுவனம் இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
- பயனர்கள் டேட்டா கட்டுப்பாடின்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.
ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் துவங்கிவிட்டது. நாடு முழுக்க கிரிக்கெட் ஆர்வம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் பயனர் தேவைகளை கருத்தில் கொண்டு இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிரீபெயிட் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.
புதிய சலுகைகள் விலை ரூ. 99 மற்றும் ரூ. 49 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஏர்டெல் ரூ. 99 சலுகையில் இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எவ்வித டேட்டா கட்டுப்பாடுகளும் இன்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும். ரூ. 49 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

இரு சலுகைகளிலும் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. ஏர்டெல் ரூ. 49 சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும்.
மொபைல் டேட்டா சலுகைகள் மட்டுமின்றி, ஏர்டெல் டி.டி.ஹெச். ஸ்டார் நெட்வொர்க் உடன் கூட்டணி அமைத்து கிரிக்கெட் பயனர்களுக்காக பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் எளிதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவு சேனல்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.