என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akilesh yadav"

    • உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி என அழைத்துக் கொள்கிறது.
    • ஆனால், இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது- அகிலேஷ்.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது சமாஜ்வாடி கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் பேசும்போது "பாஜக கட்சி உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி என தாங்களாகவே கொள்கிறது. ஆனால், இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது" என கிண்டல் செய்யும் வகையில் கூறினார்.

    அதற்கு பதில் அளித்த அமித் ஷா "இங்கு என் முன் அமர்ந்துள்ள அனைத்து கட்சிகளிலும், அவர்களுடைய தேசிய தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

    நாங்கள் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து, 12 முதல் 13 கோடி உறுப்பினர்களிடமிருந்து தேர்வு செய்வோம். இதனால் கொஞ்சம் நேரம் பிடிக்கும். உங்களுடைய முறையில் அதிக நேரம் எடுக்காது. நீங்கள் இன்னும் 25 வருடத்திற்கு தலைவராக இருப்பீர்கள் எனச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார்.

    பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். பாஜக கட்சி விதிப்படி பாஜக தலைவர், அரசு பதவியில் இருக்கக் கூடாது. இதனால் விரைவாில் பாஜக புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது.
    • பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது என்றார்.

    மேலும், மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்ததற்காக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர்.

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பிரம்மாண்டத்தை கண்டது என தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் வெளியே சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மகா கும்பமேளாவை ஒருங்கிணைத்து நடத்த மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது? உத்தரப் பிரதேச முதல் மந்திரியும், மத்திய பிரதேச முதல் மந்திரியும் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்தனர். மக்கள் எல்லைக்குள் கூட நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    1000 இந்துக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜ.க.வும், அதன் தொண்டர்களும் உதவ வேண்டும்.

    காணாமல் போயுள்ள அந்த 1000 இந்துக்கள் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு பா.ஜ.க. முறையான பதிலை வழங்கவேண்டும். காணாமல் போன அந்த 1000 இந்துக்களையாவது பா.ஜ.க. கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்தன.
    • சமாஜ்வாதி கட்சி ஆதரவில் ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் களம் இறங்குகிறார். இவர் இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது.

    மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இருக்கிறது. சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மறைந்த அமர் சிங் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை தொடங்கினார். தற்போது அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி கட்சியை வழிநடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    ராஷ்டிரிய லோக் தளம், சமாஜ்வாதி கட்சிகள் வரும் மக்களவையில் இணைந்து போட்டியிடும் என கடந்த மாதம் 19-ந்தேதி அறிவித்தன.

    இந்த நிலையில் ஜெய்ந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-ஆர்எல்டி கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆர்எல்டி போட்டியிடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆர்எல்டி பாக்பாத், பிஜ்னோர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் எனவும், மாநிலங்களவை மற்றும் உ.பி. மேலவையில் தலா ஒரு இடம் பா.ஜனதா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாக்பாத் தொகுதியில் இரண்டு முறை பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் சத்ய பால் சிங் 2014-ல் அமர்சிங்கையும், 2019-ல் ஜெயந்த் சவுத்ரியையும் தோற்கடித்துள்ளார்.

    பிஜ்னோர் தொகுதியில் 2014-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. அத்துடன் மத்திய மற்றும் மாநில மந்திரி சபையிலும் இடம் வகிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "அதுபற்றி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. எது நடந்தாலும் அது பத்திரிகையில் செய்தியாக வந்துவிடும். எனக்கு தெரிந்த தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றார்.

    • உத்தர பிரதேச மாநிலத்தின் வலுவான கட்சியாக சமாஜ்வாடி திகழ்ந்து வருகிறது.
    • பல மாநிலங்களில் சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருவதால் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி கட்சியாக சமாஜ்வாடி கட்சி இருந்து வருகிறது. இந்த கட்சி உத்தரகாண்ட், மத்தயி பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் இந்த கட்சி தேசிய கட்சியாக கருதப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.

    சமாஜ்வாடி கட்சிக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கு அமைப்புகள் உள்ளன. இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவின் அறிவுறுத்தலின்படி தலைவர் பதவி உள்பட தமிழ்நாடு பிரிவு கலைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்படடுள்ளது.

    • உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்றார் அகிலேஷ் யாதவ்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு வாரணாசி, ரேபரேலி, அமேதி, பாரபங்கி, ஜான்சி, காசியாபாத் உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ல 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், எல்லாம் நன்றாகத்தான் முடிந்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. எங்களுக்குள் மோதல் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்தார்.

    • முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஷா ஆலம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷா ஆலம் அக்கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2014 மற்றும் 2022 மக்களவை தேர்தல்களில் அசம்கர் தொகுதியில், முறையே சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் தர்மேந்திரா யாதவ்க்கு எதிராக ஷா ஆலம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களின் உயிர் அபாயகர சூழலில் உள்ளது.
    • நன்கொடை பெற்றது அனைவருக்கும் தெரியும்.

    இந்திய மக்களின் வாழ்க்கை அபாயகர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் இலவசமாக இதய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெயின்பூரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், "அரசாங்கத்தின் முடிவு காரணமாக அரசியலமைப்பு மட்டுமின்றி மக்களின் உயிரும் அபாயகர சூழலில் உள்ளது."

    "கொரோனா காலக்கட்டத்தில் இந்த அரசாங்கம் தடுப்பூசியை எப்படி கையாண்டது என்பதும் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் நன்கொடை பெற்றதும் அனைவருக்கும் தெரியும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று இதய பரிசோதனை செய்து கொள்கின்றனர்."

    "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, நாடு முழுக்க மருத்துவமனைகளில் இ.சி.ஜி. போன்ற இதய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எங்கு, எப்போது பரிசோதனை செய்து கொள்ள விரும்பினாலும், எடுத்துக் கொள்ளலாம். நாட்டு மக்களின் வாழ்க்கையை பா.ஜ.க. தலைவர்கள் அபாயத்தில் தள்ளிவிட்டனர்," என்று தெரிவித்தார். 

    • டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
    • தற்போதைய கள நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான தொகுதிகளையே பெறும் என்றார்.

    லக்னோ:

    டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தர பிரதேச மாநிலம் சென்றார். லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்துக்குச் சென்ற கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:

    டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும். பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. குறைந்த எண்ணிக்கையிலேயே வெற்றி பெறும்.

    தற்போதைய கள நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான தொகுதிகளையே பெறும்.

    உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, பீகார், கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.

    மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 400 தொகுதிகளுக்கு மேல் வென்றால் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள். இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி விரும்புகிறார். அமித் ஷாவை பிரதமராக்கவே பிரதமர் மோடி வாக்கு கேட்கிறார்.

    பா.ஜ.க.வில் 75 வயதானவர்கள் கட்சி பதவியில் இருந்து ஓய்வு பெறுவர் என்ற விதியை பிரதமர் மோடி பின்பற்றுவார் என நம்புகிறேன் என்றார்.

    இதைத் தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 143 இடங்கள்தான் கிடைக்கும் என தெரிவித்தார்.

    • பெண்கள் ஆணைய துணைத் தலைவர் பதவி ஒரு வருட கால பதவியாகும்.
    • இல்லையெனில் உ.பி. அரசு முடிவு எடுக்கும் வரை பதவியில் நீடிக்க முடியும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உ.பி.யில் பாஜக-வுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையில்தான் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சி தலைவர்களும் பரஸ்பர கருத்து விமர்சனங்களவை முன்வைப்பது உண்டு. இதனால் அரசியலில் எலியும் பூனையுமாக திகழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் மாநில பெண்கள் ஆணையத்தின் துணைத் தலைவராக அகிலேஷ் யாதவின் சகோதரர் மனைவி அபர்னா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பபிதா சவுகானை தலைவராகவும், அபர்னா யாதவ் மற்றும் சாரு சவுத்ரி ஆகியோரை துணைத் தலைவராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் அல்லது உ.பி. அரசு முடிவு எடுக்கும்வரை ஆகும்.

    சமாஜ்வாடி கட்சியை நிறுவிய மறைந்த முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்னா யாதவ் ஆவார். இவர் பிரதீக் யாதவ் மனவைி ஆவார். அகிலேஷ் யாதவின் வளர்ப்பு சசோதரர் பிரதீக் யாதவ் ஆவார்.

    அபர்னா யாதவ் 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் லக்கோன் கான்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2022-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

    • அராஜகம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் சமாஜ்வாடி கட்சியின் டி.என்.ஏ.-வில் வேரூன்றியுள்ளது- ஆதித்யநாத்
    • அந்த வார்தைக்கு முழு அர்த்தம் என்ன? என்பதை அறிந்திருக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்.

    உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசும்போது "அராஜகம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் சமாஜ்வாடி கட்சியின் டி.என்.ஏ.-வில் வேரூன்றியுள்ளது. இது சமூக கட்டமைப்பு கிழித்தெறிந்து, மக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நீங்கள் குற்றச்சாட்டை கூறுவதற்கு முன், அந்த வார்தைக்கு முழு அர்த்தம் என்ன? என்பதை தெரிந்திருக்க வேண்டும். DNA = Deoxyribonucleic Acid. இது பற்றி உங்களுக்கு தெரிந்தாலும், உங்களால் பேச முடியாது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சேர்ப்பவர்கள், எவ்வளவு குறைவாக பேசுகிறார்களோ, அவ்வளவு மரியாதையும் அதிகம்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
    • கடந்த முறை 7 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போது அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 288 இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

    கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நாளை மகாராஷ்டிரா செல்கிறார்.

    அவர் இந்தியா கூட்டணியில் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடும் வகையில் இடங்களை கேட்டு வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    கடந்தமுறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஏழு இடங்களில் போட்டியிட்டது. இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

    "நாளை நான் மகாராஷ்டிரா செல்கிறேன். இந்தியா கூட்டணி வெற்றியை உறுதி செய்வதுதான் எங்களுடைய முயற்சி. மகாராஷ்டிராவில் சரத் பவார், உத்தவ் தாக்கரே கட்சி தலையைிலான இந்தியா கூட்டணியில், சமாஜ்வாடி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் அடங்கும்.

    எங்கள் கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது நாங்கள் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் வகையில் அதிகமான இடங்களை கேட்போம். எங்களின் முழு பலத்துடன் இந்தியா கூட்டணிக்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம்" என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • உத்தர பிரதேசத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறுகிறது.
    • இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி களம் காண்கிறது.

    இங்கு 7 தொகுதிகளில் சமாஜ்வாதியும், 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    ×