என் மலர்
நீங்கள் தேடியது "albania"
- இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பியாவை சேர்ந்த 24 அணிகள் விளையாடுகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டி தொடங்கிய 23 நொடியிலேயே அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ராமி தனது அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து இத்தாலி அணியின் அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்தார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக கோல் என்ற சாதனையானது.
இந்த போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் இத்தாலி அணி இரண்டாவது முறையாக பத்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக ஜூன் 1968 முதல் ஜூன் 1988 வரையிலான காலக்கட்டத்தில் இத்தாலி அணி தனது முதல் பத்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
- பிரபல சமூகவலைதளமான டிக்-டாக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- அரசின் இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டு இருப்பதாக டிக்-டாக் செயலியின் பைட் டான்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியது.
டிரானா:
ஐரோப்பாவின் தென்கிழக்கே அமைந்துள்ள பால்கன் வளைகுடா நாடு அல்பேனியா. இங்கு பிரபல சமூகவலைதளமான டிக்-டாக் செயலி மூலம் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவனை சிறுவன் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மாணவர்களிடையே வன்முறையை தூண்டுவதாக கூறி டிக்-டாக் செயலிக்கு அல்பேனியா அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஓராண்டுக்கு தொடரும் என பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசின் இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டு இருப்பதாக டிக்-டாக் செயலியின் பைட் டான்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியது.
இதற்கு பதிலளித்து பேசுகையில், அரசின் இந்த முடிவு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பலமுறை சந்திப்புக்கு பின்னரே எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் எடி ராமா கூறினார்.
ஐரோப்பாவின் பால்கன் தீவுகளில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்று அல்பேனியா. இந்த நாட்டின் தலைநகராக விளங்குவது டிரானா. இந்த நகரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெசுலஜ் கிராமத்தை சேர்ந்தவர் ரித்வான் சைகாஜ் (24).
இவர் நேற்று 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதன்பின், அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த திடீர் தாக்குதலில் அவர்கள் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், 8 பேரின் உடல்களை கைப்பற்றி இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையில் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த படுகொலை தொடர்பான தகவலை வெளியிட்ட ரித்வான் சைகாஜ், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என அலபாமா பிரதமர் எடி ராமா-வுக்கு சவால் விட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்தது.
இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கொலையாளி பதுங்கி இருந்த இடத்தை இன்று சுற்றி வளைத்த போலீசார், ரித்வான் சைகாஜ்-ஐ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட உறவினர்கள் தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி சந்தேக கண்ணோட்டத்துடன் நடத்தி வந்ததால் ஆவேசத்தில் அவர்கள் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு தீர்த்துக் கட்டிவிட்டதாக பிடிபட்ட ரித்வான் சைகாஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #Albania