என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol seller arrested"

    • போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர்.
    • வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது27) என்பவர் மூக்கனூர் ஏரிக்கரை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • அனுமதியின்றி மது விற்ற சுந்தர்ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கணபதிபாளையம்-மன்னாதம்பாளையம் சாலையில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த ஈரோடு முத்தையம்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×