என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#all eyes on rafah"

    • பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
    • உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த தாக்குதல் துரதிஸ்டவசமான தவறு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

    மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நிற்கின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்கிறது. 

     

     

    பல்ஸாதீனம் மீது இஸ்ரேல் நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை காலத்துக்கு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்கலில் 'All Eyes On Rafah" 2என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இருத்தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்திற்கு வராமல் போர் தொடுத்து வருகின்றனர்.

    நேற்று இஸ்ரேலி டிஃபன்ஸ் ஃபோர்ஸ் ரஃபாபில் உள்ள அகதிகள் முகாமில் ஏவுகனைகளை வீசினர், இந்த தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 45 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.

    இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து 'All Eyes On Rafah" புகைப்படத்தை பகிர்ந்து இந்திய திரையுலக பிரபலங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஆலியா பட், டியா மிர்ஸா, கரீனா கபூர், ரிச்சா, வருண் தவான்,ராஷ்மிகா மந்தனா, திரிஷா, சமந்தா, பார்வதி, துல்கர் சல்மான் போன்றவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" படத்தை பதிவிட்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஃபா நகரில் காசாவின் 50 சதவீத பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசாவின் தெற்கு பகுதியில் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. முழு அளவில் இல்லாத ஒரு குறைந்த அளவிலான தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. காசாவின் வடக்கு பகுதியில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் ரஃபா நகரில் குவிந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 13 லட்சம் மக்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில்தான் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஏவுகணைகள் தற்காலிக முகாம் மீது விழுந்தது. இதில் தற்காலிக முகாம் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா மீது அனைத்து கண்களும் என்ற வாசகத்துடன் போட்டோ ஒன்று வெளியானது.

    இந்த போட்டோவை ஷேர் செய்து காசா மக்களுக்கு (பாலஸ்தீன மக்கள்) பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால், ஏவுகணை தாக்குதலின்போது ஹமாஸ் வெடிப்பொருட்கள் தீப்பற்றி எரிந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்க இன்னும் ஏழு மாதங்கள் தாக்குதல் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது உங்களுடைய கண்கள் எங்கே இருந்தன என்ற வாசகத்துடன் ஒரு குழந்தை முன் ஹமாஸ் பயங்கரவாதி துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டு இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது.

    அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் 1200 பேரை கொலை செய்த ஹமாஸ், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தற்போது வரை இந்த தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    • கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் 'All Eyes on Rafah' முதலிடம்.
    • Stampede என்ற வார்த்தை இப்பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்தாண்டு கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    2024ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகள்:

    1. All Eyes on Rafah

    2024ம் ஆண்டில் கூகுளில் இந்திய அளவில் அதிகமாக அர்த்தங்கள் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் 'All Eyes on Rafah' முதலிடத்தை பெற்றுள்ளது. பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டிக்கும் விதமாக 'All Eyes on Rafah' என்ற இணையத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

     2. Akaay

    இப்பட்டியலில் பிரபல கிரிக்கெட் வீரர் கோலி - அனுஷ்கா தம்பதியின் மகன் பெயரான Akaay 2ம் இடம் பிடித்துள்ளது. அகாய் என்ற பெயருக்கு அழிவில்லாதவன் என்று அர்த்தமாகும்.

     

    3. Cervical Cancer

    கர்ப்பப்பை புற்றுநோய் (Cervical Cancer) என்ற வார்த்தை இப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

    4. Tawaif

    Tawaif என்ற வார்த்தை இப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது. பண்டைய காலத்தில் குறிப்பாக முகலாயர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் மற்றும் பணக்காரர்கள் முன்பு நடனமாடும் பெண்களை Tawaif என்று அழைப்பர்.

    5. Demure

    இப்பட்டியலில் Demure என்ற வார்த்தை 5-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தைக்கு அமைதியான அடக்கமான பெண்கள் என்று அர்த்தமாகும்.

    6. Pookie

    Pookie என்ற வார்த்தை இப்பட்டியலில் 6-ம் இடம் பிடித்துள்ளது. தங்களுக்கு பிடித்தமான நபரை செல்லமாக அழைப்பதை Pookie என்று சொல்கிறார்கள்.

     7. Stampede

    Stampede என்ற வார்த்தை இப்பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தையை நாம் அடிக்கடி ஆங்கில செய்திகளில் படித்திருப்போம். பெருமளவிலான மக்கள் ஒரே இடத்தை நோக்கி ஓடுவதை Stampede என்று குறிப்பிடுகிறார்கள். உ.பி. மாநிலம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்ததை அடுத்து Stampede என்ற வார்த்தை இந்திய அளவில் ட்ரெண்டானது.

    8. Moye Moye

    Moye Moye என்ற வார்த்தை இப்பட்டியலில் 8-ம் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தையை பலரும் ரீல்ஸ்களில் கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தைக்கு தனிமையில் அல்லது சோகத்தில் இருப்பது என்று அர்த்தமாகும்.

    9. Consecration

    Consecration என்ற வார்த்தை இப்பட்டியலில் 9-ம் இடம் பிடித்துள்ளது. ஒரு இடத்தையோ ஒரு செயலையோ இறைவனின் பெயரால் புனிதமாக்கும் செயலுக்கு Consecration என்று அர்த்தமாகும்.

     10. Good Friday

    Good Friday என்ற வார்த்தை இப்பட்டியலில் 10-ம் இடம் பிடித்துள்ளது. புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளாகும்.

    ×