என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "America"

    • 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
    • காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டன.

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

    உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.

    இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் ஆப்பிரிக்க யானைகளின் கூட்டம் தங்கள் குட்டிகளை பாதுகாக்க செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நிலஅதிர்வை உணர்ந்த யானைக் கூட்டத்தின் மூத்த யானைகள் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, கூட்டமாக தங்கள் குட்டிகளை சூழ்ந்து பாதுகாப்பு அரணாக நின்ற காட்சிகள் மெய்சிலர்க வைப்பதாக உள்ளது.

    இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டு, அவை முதலில் சிதறி, பின்னர் விரைவாக மீண்டும் ஒன்றுகூடி, ஜூலி மற்றும் மக்யா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளை மூத்த தாய்மார்கள் நட்லுலா, உமங்கானி மற்றும் கோசி ஆகியவை சூழ்ந்து நிற்கின்றன.

    நிலநடுக்கம் நின்ற பிறகும், வயது வந்த யானைகள் தங்கள் பாதுகாப்பு வலயத்தை கலைக்காமல் காதுகளை விரித்து, எச்சரிக்கையாக, பல நிமிடங்கள் அப்படையே நின்றிருந்தன. 

    • அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடிமக்கள் அல்லாத அனைவரும் அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
    • தங்கள் முகவரியை மாற்றுபவர்கள் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாடு கடத்தப் பட்டனர். மேலும் அமெரிக்காவில் பல்வேறு விசாக்கள் மூலம் வசிக்கும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனைத்து அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல் என்ற டிரம்பின் நிர்வாக உத்தரவின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் அவர்களின் அடையாள ஆவணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.

    இதற்கு இணங்கவில்லையென்றால் எந்த அடைக்கலமும் இருக்காது. அமெரிக்காவில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அல்லாத அனைவரும் படிவத்தை நிரப்பி அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

    குடியேறிகளின் குழந்தைகளும் 14 வயது ஆன 30 நாட்களுக்குள் மீண்டும் பதிவு செய்து கைரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 11-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியை மாற்றுபவர்களும் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும், தவறினால் அவர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எச்-1பி உள்ளிட்ட செல்லுபடியாகும் விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் மீண்டும் படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை.

    ஆனாலும், அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களுடன் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரிகள் கேட்கும்போது அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.

    அமெரிக்காவில் சுமார் 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார்.
    • உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் வருகிற 21ம் தேதி இந்தியா வருகிறார்கள். அவர்கள் 24ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

    ஜே.டி.வான்ஸ் தனது மனைவியும் அமெரிக்கா வின் 2-வது பெண்மணியுமான உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார். உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் சிம்லா, ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அவர் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜே.டி.வான்ஸ்க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். அதன்பின் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

    வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த நபராக உள்ள ஜே.டி.வான்சின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    ஜே.டி.வான்ஸ் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்தாலும் வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வரவுள்ளாா்.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 22ம் தேதி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    • இன்று முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளன.
    • 34 சதவீத வரியை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதிக்கு அதிக வரிகளை விதித்தார்.

    அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரியும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளன.

    34 சதவீத வரி விதிப்புக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கவுக்கு 34 சதவீத வரியை விதித்தது. இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். 34 சதவீத வரியை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தார். ஆனால் டிரம்ப்புக்கு அடிபணிய மறுத்த நிலையில் சீனா மீது 104 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதுவும் உடனே அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஏற்கனவே விதித்த 34 சதவீத வரியை 84 சதவீதமாக சீனா தற்போது உயர்த்தி உள்ளது. இந்த 84 சதவீத வரிவிதிப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

    இவ்வாறு போட்டி போட்டு இரண்டு வல்லரசுகளும் வரி விதித்துக்கொள்வதால் டிரம்ப் தொடங்கிய சர்வதேச வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

    • வர்ஜீனியாவில் உள்ள ஸ்பாட்சில்வேனியா கவுண்டி பகுதியில் சம்பவம் நடந்தது.
    • காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஸ்பாட்சில்வேனியா கவுண்டி பகுதியில் உள்ள ஒரு கட்டிட வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

    இதில் 3 பேர் பலியானார்கள். மேலும் மூவர் காயமடைந்தனர். அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்தாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது.
    • அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக சீனா அறிவித்தது.

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக அறிவித்தது.

    வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.

    இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "சீனா - இந்தியா பொருளாதாரம், வர்த்தக உறவு, பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்கொள்ளும் உலகின் 2 வளர்ச்சியடைந்த நாடுகள் இணைந்து செயல்பட்டு இந்த கடினமான சூழ்நிலையை கடக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் கட்டணப் போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அனைத்து நாடுகளும் விரிவான ஆலோசனையின்படி கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அனைத்து வகையான ஒருதலைப்பட்சம் மற்றும் பாதுகாப்புவாதத்தை கூட்டாக எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது.
    • சீனா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக அறிவித்தது.

    வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.

    இந்நிலையில், டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த 2-ந்தேதி அவர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரியும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்படும் என கூறினார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

    அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீதம் வரி விதிக்கும் என அதிரடியாக அறிவித்தது. இந்த கூடுதல் வரி 10-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என சீனா தெரிவித்துள்ளது.

    50 சதவீதம் கூடுதல் வரி

    இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    சினா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34 சதவீத பழிவாங்கும் வரிகளை விதித்து உள்ளது. இன்று சீனா தனது 34 சதவீத வரி அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் 9-ந் தேதி முதல் சீனா மீது 50 சதவீதம் கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தையும் நிறுத்தப்படும். வரி விதிப்பு தொடர்பாக மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்

    சீனாவும், அமெரிக்காவும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு வரி விதிப்பை அறிவித்து வருவது வர்த்தக போரை மேலும் தீவிரமாக்கி உள்ளது.

    • வருகிற 21-ந்தேதி இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல்.
    • துணை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம்மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார். தனது மனைவி உஷா வான்ஸ், மகன்களுடன் இந்திய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். உஷா சிலுகுரி வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

    ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் வருகிற 21-ந்தேதி இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், அவர் 4 நாட்கள் பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்சுடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    ஆனால் வான்சின் பயண திட்டம் பெரும்பாலும் தனிப்பட்டதாக இருக்கும் என்றனர். ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு டெல்லியில் பிரதமர் மோடி விருந்து அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இந்தியாவுக்கு வரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    சமீபத்தில் இந்தியா மீது கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.
    • இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2-ந்தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.

    அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதற்கிடையே வரி விதிப்பு நடவடிக்கையில் சலுகை அளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்பு வருகிற 9-ந்தேதி அமலுக்கு வர உள்ள நிலையில் இந்தியா-அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதால் இவ்விவகாரத்தில் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளனர் என்றும் அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறும்போது, இந்தியா, வியட்நாம், இஸ்ரேலுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக டிரம்ப் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டோலாமுடன் மிகவும் பயனுள்ள ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினேன்.

    அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முடிந்தால், வியட்நாம் தங்கள் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறது என்று அவர் என்னிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார். வியட்நாம் மீது 46 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா ஏப்ரல் 10-ந்தேதி முதல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34 சதவீத வரியை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, சீனா தவறாக விளையாடியது. அவர்கள் பீதியடைந்தார்கள் என்றார்.

    • ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • நேற்றை விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாடுகளை சேர்ந்த பொருட்களுக்கு பரஸ்பரம் வரிவி திப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தி யாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்ப டும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் ரூ.11 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடை பெற்று உள்ளது. இந்தியாவில் உள்ள விவசாய பொருட்கள் மற்றும் அரிசி, இறால், தேன், காய்கறி ஜூஸ், ஆமணக்கு எண்ணை, மிளகு உள்ளிட்ட பல பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விவசாய பொருட்கள் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ரத்தின கற்கள், நகைகள், வாகனங்கள், உணவு பொருட்கள் ஆகியவை ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு உள்ளதால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் ஆகியவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இந்தியாவில் 52 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

    அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக டிரம்ப் ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இந்திய பொருட்க ளுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருப்பது இந்தியாவில் பங்கு வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    நேற்றை விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 75,653 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியும் சரிவோடு தொடங்கியது.

    வங்கிகள், ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட் கள், நிதி சேவைகள் சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. இந்தி யாவில் இருந்து எந்தெந்த பொருட்கள் அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறதோ அந்தந்த பொருட் களை தயாரிக்கும் நிறுவ னங்கள் பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்து உள்ளன.

    • இந்தியா-அமெரிக்கா இடையே 2007 இல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.
    • 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் இணைந்து இந்த ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

    ஆனால் இந்த ஒப்பந்தம் அதன்பின்பு நடைமுறைக்குவரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமேரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியாவில் அணு உலைகள் அமைக்க ஹோல்டெக் என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு டிரம்ப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், அமெரிக்க அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ அல்லது அமெரிக்க நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்துக்கோ மாற்றப்படக்கூடாது என்று அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனை விதித்துள்ளது. 

    ×