என் மலர்
நீங்கள் தேடியது "Amit Panghal"
- இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- ஏற்கனவே 3 இந்திய வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்றுகள் தற்போது நடந்து வருகிறது.
ஏற்கனவே நடந்த தகுதிச்சுற்று ஒன்றில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை நிஷாந்த் தேவ் இழந்தார். இதற்கிடையே, மற்றொரு தகுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.
ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத் பவார் (54 கிலோ), லாவ்லினா போர்கோஹெய்ன் (75) ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்னர்.
இந்நிலையில், 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம்பிடித்தார். இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்திய வீரர் ஆவார்.
- காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றது.
- இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இங்கிலாந்து வீராங்கனைக்கு எதிரான போட்டியில் நீத்து கங்காஸ் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதேபோல், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இதேபோன்று மகளிருக்கான உதவி பயிற்சியாளர் சந்தியா குருங் மற்றும் முன்னாள் மகளிர் தலைமை பயிற்சியாளர் சிவ் சிங் ஆகியோரின் பெயர்களை துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரைத்து உள்ளது. #GauravBidhuri #AmitPanghal
52 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் சோலங்கி ரஷியாவின் வடிர் குட்ரியாகோவை காலிறுதியில் எதிர்கொண்டார். இதில் கவுரவ் 5-0 என வெற்றி பெற்றார். அரையிறுதிக்கு முன்னேறியதால் இருவரும் பதக்கத்தை உறுதி செய்தனர்.

மணிஷ் கவுசிக் (60), நமன் தன்வார் (91) கிலோ ஆகியோர் தொடக்க சுற்றோடு வெளியேறினார்கள். விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.