search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ammanpuram"

    • மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 19-வது ஆண்டு நினைவு வீர வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆய்வை மேற்கொண்டார்.

    ஆறுமுகநேரி:

    அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் நிறுவனர் மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 19-வது ஆண்டு நினைவு வீர வழிபாடு நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு அம்மன்புரம் மற்றும் வெங்கடேஷ் பண்ணையாரின் சொந்த ஊரான மூலக்கரை ஆகிய பகுதிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆய்வை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரகு ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×