என் மலர்
நீங்கள் தேடியது "AnandMahindra"
- டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
- என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன்.
குஜராத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியையும் அதன் கேப்டன் டோனியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு அடுத்த சீசனிலும் விளையாடுவது குறித்து டோனி கூறியதாவது, மிகவும் உணர்வுப்பூவமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.
இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் டோனியின் முடிவு குறித்து டுவிட் செய்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன். ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக செயலாற்றுகிறாரோ, அதே அளவுக்கு அவரிடம் அறிவார்ந்த சிந்தனையும் உள்ளது என உணர்ந்தேன். புதுமையான விஷங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். நிச்சயம் டோனி வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார்.
டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் SUVகளான BE6, XEV 9E கார்களுடன் நேரம் செலவிட்ட முதலமைச்சருக்கு நன்றி.
- அந்த கார்களில் உள்ள தானியங்கி பார்க்கிங் தொழில்நுட்பம் முதலமைச்சருக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் அப்பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் SUVகளான BE6, XEV 9E கார்களுடன் நேரம் செலவிட்ட முதலமைச்சருக்கு நன்றி. ஆதரவு அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் நன்றி. அந்த கார்களில் உள்ள தானியங்கி பார்க்கிங் தொழில்நுட்பம் முதலமைச்சருக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
எங்கள் நிறுவனத்தின் திறமையான ஆராய்ச்சிக் குழு இந்த வெற்றியை சென்னையில் சாத்தியப்படுத்திக் காட்டியதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.