என் மலர்
நீங்கள் தேடியது "Anbazhagan"
- அன்பழகன் தாக்கு
- இந்து மதத்தை அவமானப்படுத்தி பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாகும். ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேசத்தை மக்களிடம் தி.மு.க கொண்டு செல்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடந்தது.
அ.தி.மு.க. அவை தலைவர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் கோபால், பொதுக்குழு உறுப்பினர் நாக.லோகநாதன், முன்னாள் தொகுதி தலைவர் துரைசாமி, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன், புதுவை மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோர் 500-க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு புடவை வழங்கினர்.
தொடர்ந்து மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
ஆட்சியில் இருந்த போதுதான் சாராத எந்த மதத்தையும் புன்படுத்தும் கருத்துக்களை உயிர் மூச்சு உள்ளவரை பேசாதவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியை பின்பற்றுவர் எடப்பாடி பழனிசாமி.
பிற மதம் சுப நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை அவமானப்படுத்தி பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாகும். ஓட்டு வங்கிக்காக திட்டமிட்டு மத துவேசத்தை மக்களிடம் தி.மு.க கொண்டு செல்கிறது.
ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக சேவை செய்யும் ஒரு மாபெரும் இயக்கம் அ.தி.மு.க.
புதுவையில் செயல்படுத்தப்படும் பல்வேறு நல்ல திட்டங்களுக்கு கோரிக்கை வைப்பதும், அதனை செயல்படுத்த போராட்டம் நடத்துவதும் அ.தி.மு.க. மட்டுமே. இதனை மக்கள் நன்கு உணர வேண்டும்.2024-ல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் மகத்தான வெற்றியை பெறும். எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக வர இருக்கிறார். அதற்கு புதுவை தொகுதி தேர்தல் வெற்றி அவசியமானது.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
கூட்டத்தில் மாநில ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, ஆர்.வி.திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச் செயலாளர்கள் உமா, குணசேகரன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, வி.கே.மூர்த்தி, காந்தி, உழவர்கரை நகர செயலாளர் எஸ்.எஸ்.சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் ,, மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உருளையன்பேட்டை தொகுதி அவைத் தலைவர் ராஜா நன்றி கூறினார்.
- அன்பழகன் வழங்கினார்
- கண்ணம்மா தோட்டம் ரைஸ் மில் எதிரில் பாண்டுரங்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தந்தையும், புதுவை மாநில அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவருமான பாண்டுரங்கனின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையொட்டி அரியாங்குப்பம் தொகுதி அருந்ததிபுரம் கண்ணம்மா தோட்டம் ரைஸ் மில் எதிரில் பாண்டுரங்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இங்கு புதுவை மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பாண்டுரங்கன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக 1000-க்கும் மேற்ப்பட்ட ஏழைகளுக்கு சேலை உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு.மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில துணை செயலாளர்கள் பி.எல் கணேசன், எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, , காந்தி,
உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்,
மாநில இலக்கியணி செயலாளர் ராமசாமி,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் பரசுராமன், மாநில இலக்கியணி துணை தலைவர் தட்சணாமூர்த்தி, தொகுதி செயலாளர்கள் ராஜா, பாஸ்கரன், சிவக்குமார், நடேசன், சம்பத், கருணாநிதி, கமல்தாஸ், வேலவன், கோபால், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன் நாக.லோகநாதன்,
உழவர்கரை நகர அவைத் தலைவர் டாக்டர் கணேஷ் , உழவர்கரை நகர முன்னாள் துணை செயலாளர் விமலா ஸ்ரீ, மாநில மாணவர் அணி முன்னாள் பொருளாளர் பார்த்தசாரதி, தொகுதி தலைவர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- அன்பழகன் பேட்டி
- புதுவையில் சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை தாதாக்களின் ஆட்சி நடை பெறும் சூழல் வந்து விட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் சுற்றுலா என்ற பெயரில் கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு முழுவதும் சீரழிக்கப்
பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோபார், மசாஜ் கிளப்புகள், ஸ்பா, பப் மற்றும் கேபரே டேன்ஸ், அதன் தொடர்ச்சியாக விபச்சாரம் ஆகியவை எந்த விதமான தங்கு தடையுமின்றி நடத்தபடுகிறது.
வெளியூரிலிருந்து புதுவையில் தங்கி படிக்கும் மாணவிகள், வேலை பார்க்கும் பெண்களை சிலர் அணுகி அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர்.கடந்த 2 ஆண்டு காலமாக இது நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறை எதையும் தடுத்து நிறுத்தவில்லை.
அரசு மற்றும் காவல்துறை யின் உயர் அதிகாரிகள் இவை அனைத்தையும பார்வையாளராக வேடிக்கை பார்த்து வரு கின்றனர்.
எனவே காவல்துறை உயர் அதிகாரியும், கவர்ன ரும் இந்த கலாச்சார சீரழிவை தடுக்க கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையில் சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை தாதாக்களின் ஆட்சி நடை பெறும் சூழல் வந்து விட்டது.
சட்டப்பேரவை நிலம் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் மீது சி.பி.ஐ. விசரணைக்கு அனுப்பி உள்ளேன் என சபாநாயகர் கூறினார். இதுவரை அது குறித்து எந்த தகவல் இல்லை.
உண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் அனுப்பினாரா? அல்லது சமாதானம் செய்ய பணம் ஏதாவது கைமாறியதா.?
இவ்வாறு அன்பழகன் கூறினார்
- அன்பழகன் குற்றச்சாட்டு
- மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு வழங்காது என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும்.
புதுச்சேரி:
புதுவை மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்க ளிடம் கூறிய தாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெரும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் நாடகம் நடத்துகிறது.
மத்தியில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தபோது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை.
பிரதமருக்கு நெருக்க மான இணை மந்திரியாக பதவியில் இருந்த நாராயண சாமி நினைத்திருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம். மத்தியிலும், மாநிலத்திலும் 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க. வும் நினைத்திருந்தால் எப்போதோ மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம்.
ஆனால் இதை செய்யமால், இண்டியா கூட்டணி கட்சிகள் தற்போது கபடநாடகம் ஆடுகின்றன.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு வழங்காது என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும். இப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு மத்திய அரசை அனுகுவோம் என்கிறார். சபாநாயகர் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்.
புதுச்சேரி மாநில பா.ஜனதாவின் நிலைபாடு என்ன? என தெளிவாக கூற வேண்டும். மாநில அந்தஸ்துக்கு தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னெடுத்து செல்ல வேண்டும்.
அனைத்து க்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். காவிரி நீரை பெறவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கேடு நினைப்பவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி.
தமிழகத்தில் கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுக்குழுவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றி னோம். வேறு எந்த கட்சிகளும் இதுபோன்று நிறைவேற்றியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
- அன்பழகன் ஆரூடம்
- அதேபோல கூட்டணி கட்சியை பலகீனப்படுத்தி, பிளவுபடுத்தி ஆட்சி மாற்றம் செய்வதாக பா.ஜனதா மீது ஏற்கனவே புகார் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர வையில் ஒரு அமைச்சரை சேர்ப்பதும், நீக்குவதும் முதல்- அமைச்சரின் உரிமை. அந்தவகையில் தனது அமைச்ச ரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சரை முதல்-அமைச்சர் நீக்கினார்.
இதற்கான அனுமதி ஜனாதிபதியிடம் இருப்பதாக தகவல் சொல்கின்றனர். கடந்த காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த சண்முகம், தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கண்ணனை நீக்கினார்.
நீக்கிய ஒரு மணி நேரத்தில் அதற்கான உத்தரவு வெளி வந்தது. இதற்கு முதல்-அமைச்சரின் பரிந்து ரையும், கவர்னரின் ஒப்புதலும் போதும். புதிய அமைச்சரை நியமிக்கத்தான் ஜனாதிபதி வரை அனுமதி பெற வேண்டும்.
அமைச்சரை நீக்க தனியாக கடிதமும், புதிய அமைச்சரை நியமிக்க தனியாக என 2 கடிதம் அளித்திருக்க வேண்டும். என்ஆர்.காங்கிரசுடன் கூட்டணியாக உள்ள பாஜக முதல்-அமைச்சருக்கு திட்டமிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் முதல்- அமைச்சரின் செயல்பாட்டில் பலகீனம் ஏற்படுகிறது. மத்திய பா.ஜனதா மந்திரி ஒருவரும், மாநில பா.ஜனதா மந்திரி ஒருவரும் சந்திரபிரியங்கா நீக்கத்தை தடுத்து நிறுத்துவதாக அதிகாரப்பூர்வ தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.
இதேநிலை நீடித்தால் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்து விடும். ஏற்கனவே முதல்-அமைச்ச ருக்கு பல்வேறு இடையூறு களை பா.ஜனதா அளித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதேபோல கூட்டணி கட்சியை பலகீனப்படுத்தி, பிளவுபடுத்தி ஆட்சி மாற்றம் செய்வதாக பா.ஜனதா மீது ஏற்கனவே புகார் உள்ளது.
இந்த புகார் புதுவையிலும் எழுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி விழித்துக்கொள்வது நல்லது. ஒரு அமைச்சர் நீக்கத்துக்கு 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இது நாகரீகமான அரசியலுக்கான வழி அல்ல. இதற்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இரு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
தற்போதைய அரசியல் சூழலால் பாராளுமன்ற தேர்தலோடு புதுவை சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கியவர் பெரியப்பா.
- தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
"யாரோ சிறியர் நரியர்
சூதோ வாதோ செய்திடத் துணிவரேல்
பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்!
தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்!
பெரியாரின் பிள்ளைகள் நாம்
பேரறிஞர் தம்பிகள் நாம் - என்றும்
பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!"
என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினம்.
- அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அன்பழகன் உருவப் படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, `சொல்லுதல் யாவருக்கும் எளிய அரியவாம்' என திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
- தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ள கவர்னர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று புதுவை கிழக்கு மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
- அரசுக்கும் முதல்- அமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது கவர்னரின் தலையாய கடமையாகும்.
புதுச்சேரி:
தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ள கவர்னர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று புதுவை கிழக்கு மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவனந்தபுரத்தில் தென் மாநில முதல்-அமைச்சர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என அந்தந்த மாநில முதல்-அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுப்பினராக இருந்தும் அவர் கலந்து கொள்ளாமல் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
யூனியன் பிரதேசமான கவர்னருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அரசுக்கும் முதல்- அமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது கவர்னரின் தலையாய கடமையாகும். இதுபோன்ற கூட்டங்களில் மாநில அந்தஸ்து இல்லாத சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் மற்றும் சட்டமன்றம் இல்லாத அந்தமான், லட்சத்தீவுகளின் சார்பில் கவர்னர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ள லாம் என அனுமதிக்க ப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர், கவர்னர் கலந்து கொள்ள லாம் என விதி இருந்தும், சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் விதத்தில் கவர்னர் உரிய வாய்ப்பினை அளித்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சருக்கு உரிய உரிமையை நிலை நாட்டும் விதத்தில் கூட்டத்தில் கவர்னர் செல்வதை தவிர்த்து முதல்-அமைச்சரை கலந்து கொள்ள தெரிவித்திருக்கலாம்.
தமிழகத்தில் இருந்து புதுவைக்கு காவிரி தண்ணீர், விமான நிலையம் நில ஆர்ஜிதம், தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு மணல் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து கவர்னர் தமிழிசை பேசியுள்ளார். இதில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டிருந்தால் அவர் அண்டை மாநில முதல்-அமைச்சரிடம் நேரிடையாகவும் கலந்து பேசியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
யூனியன் பிரதேசமாக புதுவை இருந்தும் மாநில அந்தஸ்து உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நிதியுதவி 60-40 ஆக உள்ளதை யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பு நிதியாக நமக்கு 100 சதவீதமும் வழங்க வேண்டும்.
அதையும் நீங்கள் வழங்கு வதில்லை என்பதையும், தான் பா.ஜனதாவின் ஆதரவில் கவர்னராக இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரிடையாக சுட்டிக்காட்டியுள்ளார். அவரது தைரியமான செயல் என்பது பாராட்டுக்குரியது ஆகும். சிறப்புமிக்க இதுபோன்ற கூட்டங்களில் கவர்னர் கலந்து கொண்டது மற்றும் முதல் அமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்க இணைந்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை புதுவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.
- அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று அரசின் மாதாந்திர உதவி பெறாத 21 வயதிலிருந்து 55 வயது உள்ளவரை உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. ஆயிரம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள பட்ஜெட் மீதான கருத்தில் கூறியிரு ப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை புதுவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.
கடுமையான நிதி நெருக்கடியிலும் முற்போக்கு சிந்தனையுடன் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.ஆயிரத்து 684 கோடி வெளிக்கடன் வாங்கி கொள்ள அனுமதி அளித்தும் முதல்-அமைச்சர் ரூ.525 கோடி மட்டுமே கடன் பெற்று மாநிலத்தின் பொருளாதார நிலையை கட்டுக்குள் நிலைநாட்டியுள்ளார்.
அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று அரசின் மாதாந்திர உதவி பெறாத 21 வயதிலிருந்து 55 வயது உள்ளவரை உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. ஆயிரம் அறிவித்துள்ளது. பாராட்டுதலுக்குரிய அற்புதமான திட்டம் ஆகும். அனைத்து பிராந்தியங்களும் சம வளர்ச்சி அடையும் விதத்தில் காரைக்கால், மாகி, ஏனாம், புதுவை பகுதிகளில் அடிப்படை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த இந்த பட்ஜெட் ஏழை, எளியோருக்கான, மாநில உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான, உயிரோட்டமுள்ள உன்னதமான பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது மாவட்ட செயலாளர்கள்- சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
கட்சி பணிகள் குறித்தும், சட்டமன்ற, பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் இக்கூட்டத்தில் தக்க ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வின் கொள்கைப் பேராசான் இனமானப் பேராசிரியர் அன்பழகன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞரின் தலைமையினை ஏற்று இயக்கம் காப்பது ஒன்றே லட்சியம் என வாழ்பவர். கழகத்தின் பொதுச் செயலாளரான பேராசிரியர் பெருந்தகைக்கு டிசம்பர் 19-ம் நாளன்று 97-வது பிறந்தநாள்.
கலைஞரைவிட வயதில் மூத்தவர். தந்தை பெரியாரின் வாழ்நாளையும் கடந்து வாழ்பவர். கொள்கை வழி அண்ணனாக கலைஞருக்குத் துணை நின்று, இன்று உங்களில் ஒருவனான எனக்கு, தந்தை நிலையிலிருந்து வழிகாட்டி வருபவர். பேராசிரியர் தனது பிறந்தநாள் விழாக்களை, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கஜா புயலின் தாக்கத்தாலும், தனது உடல்நிலை கருதியும் முழுமையாகத் தவிர்த்திட விரும்புவதால், அதுகுறித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கழகத்தின் தலைவர் என்ற முறையில் என்னிடமும் அதனையே வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார்.
கழகத்தினர் ஏற்கனவே கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேராசிரியர் பெருந்தகையின் பிறந்த நாளான டிசம்பர்-19 அன்று சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நலத்திட்ட உதவி செய்திட வேண்டுமெனவும் நேரில் வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரில் உடல்நலம் குன்றியிருக்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பேராசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றும் மாணவர்களாக கழகத்தினர் செயல்பட்டு, அவர் நமக்கு கற்றுத்தந்த கொள்கை பாடங்களுக்கு சிறப்பு சேர்ப்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KAnbazhagan
சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முதுமை காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் இருந்தது. இதைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.இன்று மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகன் உடல் நிலை பற்றி விசாரித்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பொதுச்செயலாளர் பேராசிரியர் நேற்றிரவு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
தற்போது அன்பழகனின் உடல்நிலை சீராகி வருவதாக டாக்டர்களும் தெரிவித்துள்ளனர். #DMK #Anbazhagan #AppolloHospital #MKStalin