என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andrea"

    • கோபி நயினார் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘மனுசி’.
    • இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மனுசி'. இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    மனுசி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    'அனல் மேலே பனித்துளி' படத்திற்கு பிறகு ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆண்ட்ரியா பிறந்த நாளான இன்று படக்குழு இப்படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மனுசி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகை ஆண்ட்ரியா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’.
    • இப்படத்தை இயக்குனர் ஆர். அழகு கார்த்திக் இயக்கியுள்ளார்.

    பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.


    நோ என்ட்ரி

    நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் ஆர். அழகு கார்த்திக் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'நோ என்ட்ரி'. இதில் ஆதவ் கண்ணதாசன், மானஸ், ரன்யா ராவ், ஜெயஸ்ரீ மற்றும் ஜான்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜம்போ சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார்.



    நோ என்ட்ரி

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட நாய்கள் மனிதர்களை தாக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த டிரைலரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • நடிகர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆண்ட்ரியா.
    • இவர் தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஆண்ட்ரியா. நடிகராக மட்டுமல்லாது பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்தார். கண்ணும் கண்ணும் நோக்கியா, இதுவரை இல்லாத உணர்விது, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பல பாடலகளை பாடி தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

     

    ஆண்ட்ரியா

    ஆண்ட்ரியா


    சில படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது தீவிர ஒர்க்-அவுட் மோடில் இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • ஆண்ட்ரியா இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • 36 வயது ஆகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் ‘பிசி’யாக உள்ளார்.

    சினிமா பின்னணி பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம்,தரமணி, வடசென்னை ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார்.

    36 வயது ஆகி உள்ள நிலையிலும் திருமணம் செய்யாமல் நடிகை ஆண்ட்ரியா படத்தில் 'பிசி'யாக உள்ளார்.

    தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட புஷ்பா படத்தில் "ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா" என்ற பாடலை பாடியிருந்தார்.

    இந்த பாடல் பெரிய ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனல்மேல் பனித்துள்ளி என்ற படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா படம் குறித்து கூறியதாவது:-

    அனல்மேல் பனித்துளி படத்தில் ஒரு காட்சியில் நடித்த போது கூச்சமாக இருந்தது. இது புதுமையாகவும் இருந்தது. இந்த காட்சிகளைவிட என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஆண்ட்ரியா இந்த படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கார்னிவெல் விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
    • இதன் நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் காரைக்காலில் கார்னிவெல் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். முதல் -அமைச்சர் ரங்கசாமி நடிகை ஆண்ட்ரியாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.


    இசை நிகழ்ச்சியில் "ஊம்... சொல்றியா...ஊகூம் சொல்றியா.. மற்றும் நடிகர் விஜய்யின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

    இசை நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட ஆண்ட்ரியாவின் காரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் ஆண்ட்ரியா சிக்கி திணறினார். உடனே போலீசார் அவரை சிரமத்திற்கிடைய பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காரை துரத்தி சென்றனர். ஆண்ட்ரியா கார் பறந்து சென்றது.


    விழா முடிந்து இரவு 9 மணிக்கு கூட்டம் கலைந்தது. ஒரே நேரத்தில் அனைவரும் முண்டியடித்து சென்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அப்போது மக்கள் ரெயில்வே கேட்டை கடக்கும் போது சென்னை ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங்கில் கேட் இறக்கப்பட்டது. இதில் தண்டவாளத்தின் நடுவே பலரும் சிக்கினார்கள். இதனால் மீண்டும் கேட் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து வேகமாக வெளியேறினர். இதன் காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது.
    • மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது.

    சசிகலா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், "கா".

    இந்த படம் மார்ச் 22-ம்ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், "ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார் அவருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது."

     


    "அந்த காலத்தில், வெளியாகும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜய சாந்தி இது போல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார். பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்."

    "மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது. நம்மூர் எழுத்தாளர் அதைக் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். பெரிய எழுத்தாளர் இப்படிப் பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக்காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்க வில்லையே என கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்
    • கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார்

    டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். டாடா படத்திற்கு அடுத்து ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலின் காட்சி முன்னோட்டம் நேற்று வெளியானது.

    இதற்கடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது அடுத்ததாக கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    ஆண்ட்ரியா நெகட்டிவ் ஷேட் கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாத இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
    • வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறார் நடிகர் கவின். அவர் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

    இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' திரைப்படத்தில் நடித்தார். ஸ்டார் திரைப்படம் கடந்த மாதம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. படம் இதுவரை 25 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்டார் திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

     

    தற்பொழுது வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
    • ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார்.

    பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'தி லெஜெண்ட்' திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார்.

     

    தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

    புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.

    இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய 'கருடன்' பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ், தயாரிப்பு நிர்வாகி: சின்னமனூர் சதீஷ், புரொடக்ஷன் மேலாளர்கள்: முனுசாமி, ஆர் எஸ் கோவிந்தராசு.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வினோத் காம்ப்ளிக்கு மது பழக்கம் அதிகமாக இருந்தது.
    • அவரை விட்டு சென்றால் வினோத் காம்ப்ளியால் தனியாக வாழ முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்பிளி. மது போதையால் தனது வாழ்க்கையை தொலைத்த வினோத் காம்ப்ளி, தற்போது எழுந்து நிற்கவே கஷ்டப்படுகிறார். இந்த சூழலில் தானேவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வினோத் காம்ப்ளி வீடு திரும்பியிருக்கிறார்.

    இந்த நிலையில் வினோத் காம்ப்ளி இரண்டாவது மனைவியான ஆண்ட்ரியா அவரை விவகாரத்து செய்ய இருந்ததாக கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வினோத் காம்பிளிக்கு மது பழக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அவரை விட்டு பிரிய நான் முடிவெடுத்தேன். ஆனால் நான் அவரை விட்டு சென்றால் வினோத் காம்ப்ளியால் தனியாக வாழ முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவருக்கு உதவி செய்ய யாருமே இருக்க மாட்டார்கள்.

    வினோத் காம்ப்ளி ஒரு குழந்தை போன்றவர். அவரை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கின்றது. அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. இதுபோல் ஒரு சூழ்நிலையில் ஒரு நண்பரை கூட என்னால் பிரிந்து செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது வினோத் காம்ப்ளி நண்பரைவிட என் வாழ்க்கையில் மேலானவர்.

    ஆனால் என் வாழ்க்கையில் பல சமயங்களில் வினோத் காம்ப்ளியை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று நான் பலமுறை நினைத்து இருக்கிறேன். ஆனால் நான் அப்படி சென்றால் எனக்கு அது கவலையை கொடுக்கும். வினோத் காம்ப்ளி சாப்பிட்டாரா? இல்லையா? அவர் சரியாக படுத்து தூங்குகிறாரா? இல்லையா? இப்போது அவர் எப்படி இருக்கின்றார் என்றெல்லாம் எனக்கு தோன்றும்.

    உடனடியாக நான் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க சென்று விடுவேன். வினோத் காம்ப்ளிக்கு நான் முக்கியம் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னுடைய மகனும் எங்கள் குடும்ப நிலையை பற்றி புரிந்து கொண்டிருக்கிறார். உனக்கு தந்தையும் நான் தான், தாயும் நான் தான் என்பதை மகன் கிறிஸ்டியானோவிடம் சொல்லி புரிய வைத்திருக்கின்றேன். வினோத் காம்ப்ளியின் தந்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.

    என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார். 

    • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
    • இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

    இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.


    ஆண்ட்ரியா

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இரண்டாவது பாடல் "நெஞ்சை கேளு" சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'பிசாசு 2' படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    ஆண்ட்ரியா

    இதைத்தொடர்ந்து படக்குழு சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் பெற மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.


    பிசாசு 2

    இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.


    பிசாசு 2

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் பிரியங்கா குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×