என் மலர்
நீங்கள் தேடியது "Annamaalai"
- பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.
- திர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள் என்று திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.
தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.
2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 – 2024 வரை, பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும், தினந்தோறும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு எத்தனை? மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது.
நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?
உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருடனை போலீசார் திருப்பூரில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- அங்கமுத்து வேலையை முடித்து விட்டு லாரியில் ஆனைமலை உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார்.
கோவை:
கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மதுசெனை (வயது 38). இவர் பழைய பேப்பர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரிடம் ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த அங்கமுத்து என்பவர் லாரி டிரைவராக வேலை செய்த வருகிறார்.
சம்பவத்தன்று அங்கமுத்து வேலையை முடித்து விட்டு லாரியில் ஆனைமலை உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இரவு லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். அப்போது அவருடன் வேலை செய்யும் மற்றோரு லாரி டிரைவர் சுரேஷ் என்பவர் அங்கமுத்துவிற்கு போன் செய்து லாரியின் ஜி.பி.எஸ் திருப்பூரில் காட்டுகிறது. எங்கே செல்கீறிர்கள் என கேட்டார்.
அதற்கு அங்கமுத்து நான் வீட்டில் தான் இருக்கிறேன் என கூறி வீட்டின் வெளியே சென்று பார்த்தார். அப்போது தான் அவருக்கு லாரி திருட்டு ேபானது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது உரிமையாளர் மதுசெனையிடம் தெரிவித்தார். அவர் உடனே ஆனைமலை வந்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி குறித்து திருப்பூர் குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சோதனை செய்து லாரியையும், லாரியை திருடி வந்த வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் லாரி மற்றும் திருடனை ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் லாரியை திருடியது ஆனைமலை திவான்சாபுதூரை சேர்ந்த பஞ்சலிங்கம் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பஞ்சலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாரி திருட்டு போன ஒரே நாளில் போலீசாரை லாரியை பறிமுதல் செய்து திருடனை கைது செய்தது பொதுமக்கள் பாராட்டினர்.