என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "anti democratic"
திருவண்ணாமலை:
அ.ம.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று கருத்துகணிப்புகள் வந்து உள்ளதாக தெரிகிறது. இதை நாம் நம்புவதில்லை. இவையனைத்தும் கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள்.
வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்திலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். ஆர்.கே.நகர் தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் நான் வெற்றி பெற்றேன்.
‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பின் போராட்டத்தினை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர சர்வாதிகார போக்கில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
9 அம்ச கோரிக்கைகளில் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யலாம். முடியாதவற்றை பிறகு நிறைவேற்றுவதாக தெரிவிக்கலாம். பேசி தீர்ப்பதை விட்டு விட்டு சர்வாதிகாரி போல் கைது செய்வது தீர்வாகாது. இது ஜனநாயகத்துக்கு நல்லது கிடையாது. இந்த அரசு இதற்கான பின்பலன்களை அனுபவிக்கும்.
உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்வது இல்லை. குறிப்பாக தமிழகத்தில் அ.ம.மு.க.விற்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
சில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணிக்காக பேசிக்கொண்டு வருகிறேன். அது முழுமையடைந்தவுடன் உங்களுக்கு தெரிவிப்பேன். தொண்டர்கள் 95 சதவிகிதம் பேர் அ.ம.மு.க.விடம் உள்ளனர். ஆட்சி அதிகாரம் அங்கு உள்ளதால் சிலர் ஒட்டிக்கொண்டு உள்ளனர். எலும்பு கூடு மட்டும் தான் அ.தி.மு.க.வில் உள்ளது. ரத்தமும், சதையுமான தொண்டர்கள் எங்களிடத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #govtstaff
புதுச்சேரி:
கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜனதா ஆட்சியமைக்க துணைபோன கவர்னரையும், மத்திய அரசையும் கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், ஜெயமூர்த்தி, தனவேலு, விஜயவேணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது:-
மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னரை ஏஜெண்டாக நியமித்து தொல்லை கொடுத்து வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரசும், ஜனதாதளமும் கூட்டணி அமைத்து 116 இடங்களை பெற்றுள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் பெரும்பான்மை எனக் கூறி பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார்.
பீகார், ராஜஸ்தான், மணிப்பூர், கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜனதா குறைந்த இடங்களை பெற்றும் அதிகாரத்தை பயன்படுத்தியும், பணம் கொடுத்தும் மாற்று கட்சியினரை இழுத்து ஆட்சி அமைத்துள்ளனர்.
மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனநாயக விரோத போக்கில் ஈடுபடுகின்றனர். தங்கள் விருப்பத்தை ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிக்கொள்கின்றனர். மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் அவர்களுக்கு எதிராக ஆட்சியமைக்கும் பணியை பா.ஜனதா செய்கிறது.
மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் மத்திய அரசு ஏஜெண்டாக செயல்படும் கவர்னர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.
இவ்வாறு அவர் பேசினார்.