என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AR Murugadoss"

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சல்மான் கான் , அமீர் கான் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இணைந்து கலந்துரையாடல் செய்து வீடியோ உருவாக்கியுள்ளனர். தன் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அமீர் கான் ஏ.ஆர் முருகதாஸை பார்த்து எங்கள் இருவரின் யார் உண்மையான சிக்கந்தர் என கேள்வி கேட்கிறார் அதற்கு பதி சொல்ல முடியாமல் ஏ.ஆர் முருகதாஸ் முழிக்கிறார். இதன் வீடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    அமீர் கான் நடிப்பில் இந்தியில் கஜினி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    • கஜினி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.
    • தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார்.

    தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே எந்திரன், சந்திரமுகி, விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.

    இந்த நிலையில் கஜினி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கஜினி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் சூர்யா, நயன்தாரா, அசின், பிரதீப் ராவத், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

    தற்போது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி 2-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, ''கஜினி 2-ம் பாகம் குறித்து எனக்கு சில யோசனைகள் உள்ளன. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார்.

    சரியான நேரத்தில் 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம். கஜினி 2 படத்தை ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாக்குவோம். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது.

    இதனை தொடர்ந்து, இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்று இருந்தனர்.

    அப்போது இந்நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் சல்மான் கானிடம், உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சல்மான் பதிலளித்தபோது, இதில் கதாநாயகிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, அவரது தந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாதபோது, உனக்கு என்ன தம்பி பிரச்சனை? நடிப்பில் ராஷ்மிகாவின் அர்பணிப்பை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வரும். அந்தளவு அர்ப்பணிப்புடன் செயல்படுவார் என்று கூறினார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான ஸோரா ஜபீன் வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களால் ரசிக்கப்பட்டது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகளில் பல சல்மான் கானின் பன்ச் வசங்கள் இடம் பெற்றுள்ளது. குடும்பங்கள், ரசிகர்கர்கள், காதலர்கள்,என அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக மாஸ் கமெர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘1947- ஆகஸ்ட் 16'.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

    இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.


    1947 ஆகஸ்ட் 16

    1947 ஆகஸ்ட் 16


    தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.


    ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன்

    ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன்


    இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளதாகவும் இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையவுள்ள படம் குறித்து அறிவிப்பு அப்பொழுது வெளியாகும் என கூறப்படுகிறது.

    • தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள '1947- ஆகஸ்ட் 16' படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

    ஏ.ஆர்.முருகதாஸ்

    இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் -கௌதம் கார்த்திக்

    இதையடுத்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கமலை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் சப்ஜெக்ட் இருக்கிறதா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, "பொதுவாகவே கமல் என்றால் எனக்கு அப்போது இருந்தே சிறிய பயம் இருக்கும். ஆனால், எல்லா இயக்குனருக்கும் கமலை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

    ஏனென்றால் கமல் சாரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களுக்கு அந்த படம் தான் அவர்களது கேரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். திரைத்துறையில் சிறந்த இருபது இயக்குனர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது கேரியர் பெஸ்ட் பிலிம் கமல் சாரோட படமாகதான் இருக்கனும். இதில் நான் சாதாரண படத்தை எடுத்திவிடக் கூடாது என்ற பயத்தில் தான் இதை செய்யவில்லை" என்று கூறினார்.

    • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.
    • இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.


    இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    மேலும், "எனது 23-வது படத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா விதத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • ஏ.ஆர்.முருகதாஸ் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் தன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.

    • விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.


    நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி " என்று பதிவிட்டுள்ளார்.

    • கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
    • இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையாக இது இருக்கும்

    கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழில் 'ரமணா', 'கஜினி', 'துப்பாக்கி' "கத்தி' போன்றப் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் 'எஸ்கே23' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.


    இந்நிலையில் 'SK23' படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆக்ஷன் ஜானர் படமாக இது இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் தனித்துவமான பல விஷயங்களை இந்த படத்தில் பார்க்க முடியும். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்காக அவரது உடல்மொழியில் கவனம் செலுத்த சிறப்புப் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம். முதலில் மிருணாள் தாக்கூர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. ஆனால், ருக்மிணியின் வேறொரு படம் பார்த்தபோது மிருணாளை விட இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடியுள்ளார்.
    • அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்

    நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடியுள்ளார்.

    அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையோடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23 ஆவது படத்தை நடித்து வருகிறார். இப்படம் ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் பேனரில் திருப்பதி பிரசாத் படத்தை தயாரிக்கிறார்.


    சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கிய நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்

    'SK23' படம் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குனர்ஏ.ஆர். முருகதாஸ், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.


    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன், படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து படைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.
    • கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி.

    சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் வெற்றியை அடுத்து பல முன்னணி இயக்குநர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். அமரன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய அமரன் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    அமரன் படத்தில் ஒரு ஆர்மி கமேண்டோவாக நடித்துள்ளார். இதற்காக அவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டு மஸ்த்தாக வைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

    அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில்.


     


    இன்று பாண்டிசேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது. கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி. சமீபத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளியாகிய 'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தில் இவர் நடித்தார். இதனிடையே, SK23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


     


    ×