என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashwin"

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
    • 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக அஷ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் பேசிய அஷ்வின், "என்னுடைய 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை. ஆனால், மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து மறக்க முடியாத பரிசை தோனி கொடுத்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

    முன்னதாக பேசிய ஸ்ரீகாந்த், "வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை தோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அஷ்வின் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

    • ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும்.
    • ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளநிலையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது.

    இதற்காக டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.

    நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சமீப காலமாகவே கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தனது யூடியூப் சேனல் மூலமாக பேசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்றெல்லாம் பல பேச்சுகள் இருந்தன. ஆனால் இந்த முறையும் ஜடேஜா சென்னை அணிக்காக தான் விளையாடுகிறார். ஜடேஜாவை டிரேடிங் மூலம் மாற்ற நினைத்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.

    ஆனால் அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது. ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும். ஆனால் அவரது இடத்திற்கு வேறொரு இந்திய வீரரை நிரப்புவது என்பது முடியாத காரியம். ஜடேஜா போன்று எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு வீரருக்கு பதிலாக மாற்று இந்திய வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்.

    அதேபோன்று ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனால்தான் சென்னை அணி நிர்வாகமும் அவரின் மதிப்பை உணர்ந்து தக்க வைத்துள்ளது" என்றார்.

    • தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா, சுப்மன் கில், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் வேறு இருக்கிறார்.
    • மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

    நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் 9 சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்தார். ஆனாலும் அவர் இடம்பெற்ற மகாராஷ்டிரா அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    மொத்தமாக 11 சதங்களை அடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்படி ரன்கள் மேல் ரன்கள் சாதனை மேல் சாதனைகள் படைத்து கேப்டனாக தனது அணியை ஃபைனல் வரை அழைத்து சென்றும் கோப்பை வெல்ல முடியாத அவரது ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. அதே சமயம் இந்த தொடர்ச்சியான ஆட்டத்தால் டோனிக்கு பின் ஐபிஎல் தொடரில் சென்னையின் கேப்டனாக ருதுராஜ் வரவேண்டும் என்று விரும்பும் சென்னை ரசிகர்கள் இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள்.

    ஆனாலும் கடுமையான போட்டி நிறைந்த இந்திய அணியில் யாருக்கு பதில் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு பெறுவார் என்று தெரிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் அதன் காரணமாகவே தற்சமயத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும் யாருக்கு பதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்? யாருக்கு பதில் என்பதை விட அவர் யாருடன் போட்டி போடுகிறார் என்பதை பாருங்கள். ஷிகர் தவான், ரோஹித் சர்மா, சுப்மன் கில் இவர்களுடன் ரிஷப் பண்ட்டும் ஓப்பனிங்கில் களமிறங்குகிறார். மேலும் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு மிகவும் கடினமான ஒரு நாடாகும்.

    • சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார்.
    • பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரனை கிரிக்கெட் விஞ்ஞானி என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் நெருக்கடியான நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் களத்தில் இருந்த அஸ்வினிடம் ஒரு தரமான இன்னிங்ஸ் விளையாடினார்.

    இந்திய அணிக்காக 87வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் அஸ்வின், இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். அதேபோல் 13 அரை சதங்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில் 442 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் சுமார் 3 ஆயிரம் ரன்களும் குவித்துள்ளார். இதனால் டெஸ்ட் கிரிகெட்டை பொறுத்தவரை, அஸ்வின் ஆல் ரவுண்டராகவே அறியப்படுகிறார். அஸ்வினுக்கு பாராட்டு இன்றைய ஆட்டத்தில் 113 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் 8வது விக்கெட்டிற்கு குல்தீப் யாதவுடன் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அஸ்வின்.

    இதன் மூலம் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அஸ்வினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அஸ்வின் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்:-

    ரவிச்சந்திரன் அஸ்வின் டெய்லண்டர் அல்ல. அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்கள் விளாசியுள்ளார். அஸ்வின் போல் கீழ்நிலையில் உள்ள வீரர்கள் ரன்கள் சேர்க்கும் போது எதிரணியினருக்கு கோபத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தும். பேட்டிங்கில் உழைக்கக் கூடியவர் அதனை அஸ்வின் மிகச்சிறப்பாக செய்து வருகிறார்.

    இளம் வயதிலேயே ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான கடினமான சூழல்களில் ரன்கள் சேர்த்துள்ளார். மிகவும் கடினமான ஷாட்களை, மிக எளிதாக விளையாட கூடியவர். ஒவ்வொரு ரன்னுக்காக உழைக்கக் கூடியவர். ஸ்பின்னர்களை எளிதாக விளாசிவிட்டு, வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திட்டத்துடன் இருப்பவர்.

    பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போதும் சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார். என்னை பொறுத்தவரை, அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி. ஏனென்றால், ஒவ்வொரு முறையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்து கொண்டே இருப்பார். புதிய முயற்சிகளை மேற்கொள்வார்.

    இவ்வாறு கார்த்திக் கூறினார்.

    • அஸ்வின் அருமையான இன்னிங்ஸ் ஆடினார்.
    • ஷ்ரேயாஸ் அய்யருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார்.

    தமிழக வீரர் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் விஞ்ஞானி என அழைத்து பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    அஸ்வின் அருமையான இன்னிங்ஸ் ஆடினார். ஸ்ரேயாஸ் அய்யருடன் அற்புதமான கூட்டணியும் அமைத்தார். இதை செய்தது விஞ்ஞானி. எப்படியோ நமக்கு வெற்றி கிடைத்து விட்டது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை இந்திய வீரர் சச்சின் பெற்றுள்ளார்.
    • அவர் 19 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அஸ்வின் நெருங்கி விட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்திய வீரர் சச்சின் என்பதும் அவர் 19 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் அஸ்வின் இதுவரை 18 ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளார். இன்னும் ஒரே ஒரு ஆட்டநாயகன் விருதை அவர் பெற்றுவிட்டால் சச்சினுக்கு இணையாக 19 ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை விரைவில் அவர் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மிதவேக பந்து வீரர்கள், சுழற்பந்து வீரர்கள் சிறப்பு தேர்வு 13 மாவட்ட மையங்களில் நடைபெறுகிறது.
    • 14 மற்றும் 24 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.) மாநிலம் முழுவதும் இருந்து சுழற்பந்து வீரர்கள் மற்றும் மித வேகப்பந்து வீரர்களை உருவாக்கும் வகையில் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.

    இதன்படி திறமை மிக்கவர்களை கண்டறியவும், சிறந்த பந்து வீச்சாளர்களை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த திட்டத்தை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிதவேக பந்து வீரர்கள், சுழற்பந்து வீரர்கள் சிறப்பு தேர்வு 13 மாவட்ட மையங்களில் நடைபெறுகிறது. 14 மற்றும் 24 வயதிற்குட்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் 3 ஆண்டுகளில் எந்த வயது பிரிவிலும் ஒருங்கிணைந்த மாவட்ட அணிக்காக ஆடி இருக்க கூடாது.

    சென்னையை தவிர தேனி, திருப்பூர், திருச்சி, மதுரையில் சேட்டி லைட் மையங்கள் உருவாக்கப்படும். இதில் தேனி, திருப்பூர் அதிக செயல் திறன் கொண்டவையாக செயல்படும்.

    ஏற்கனவே உள்ள நெல்லை, நத்தம், சேலம், கோவை, டி.என்.பி.எல். மைதானங்களும் இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும்.

    டி.என்.சி.ஏ. அகாடமி சார்பில் புதிய பந்து வீச்சாளர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி அளித்து உலக தரமிக்கவர்களாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும்.

    ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து பயிற்சி பெறும் போது அவர்களுக்கு உதவி தொகை வழங்குவது குறித்து பெரும் நிறுவனங்களிடம் பேசப்படும்.

    தமிழக அணி கடைசியாக 1988-ல் ரஞ்சி கோப்பையை வென்றது. அதன் பின்னர் இதுவரை கோப்பையை வெல்லவில்லை. அந்த குறையை போக்க வேண்டும். நானும் இந்த திட்டத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக செய்வேன்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    பிப்ரவரி 11 முதல் மார்ச் 26 வரை பந்து வீச்சாளர்களை கண்டறியும் தேர்வு நடைபெறுகிறது. டி.என்.சி.ஏ. செயலாளர் ஆர்.ஐ. பழனி, நிர்வாகிகள் ஆர்.என்.பாபா, கே.சிவக்குமார், ஆடம் சேட், சீனிவாச ராஜ், தேர்வு குழு தலைவர் சுப்பையா, பயிற்சியாளர் பிரகாஷ், முன்னாள் மத்திய வீரர் கல்யாண சுந்தரம், கிரிக்கெட் ஆலோசனை குழு தலைவர் கிரீஸ் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • உலக அளவில் விரைவாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார்.
    • அஸ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு அவுட்டாக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

    உலக அளவில் விரைவாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஸ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இருப்பினும் அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், அஸ்வின் இந்த சாதனையை 89 போட்டிகளிலேயே எடுத்து அசத்தியுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 5-வது முறையாகும்.
    • இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும்.

    * ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நேற்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவர் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 25-வது முறையாகும். இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கும்பிளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்து அவருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். சொந்த மண்ணில் இந்த வகையில் இவர்களை விட அதிகமாக இலங்கையின் முரளிதரன் 45 முறையும், ரங்கனா ஹெராத் 26 முறையும் 5 விக்கெட் வீழ்த்தி முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    * நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 91 ரன்னில் சுருண்டது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு அந்த அணி 2004-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் 93 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சமாக இருந்தது. அத்துடன் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா எடுத்தது டெஸ்டில் இந்திய அணிக்கு எதிராக 2-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 1981-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அந்த அணி 83 ரன்னில் ஆல்-அவுட் ஆனதே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.

    * ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 5-வது முறையாகும்.

    * நாக்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ஆஸ்திரேலிய வீரர்களும், 2-வது டெஸ்டில் 6 ஆஸ்திரேலிய வீரர்களும் என மொத்தம் 10 பேர் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டம் இழந்தனர். ஒரு டெஸ்ட் போட்டியில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆஸ்திரேலியா இழந்த அதிகபட்ச விக்கெட் இதுவாகும். இதற்கு முன்பு அந்த அணி 2001-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் (கொல்கத்தா), 2022-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்டிலும் (காலே) தலா 9 விக்கெட்டுகளை எல்.பி.டபிள்யூ. முறையில் பறிகொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    * இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் 49 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரரின் அதிகபட்ச ரன்னாகும். அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும்.

    • நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.
    • 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் அவரது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

    நாக்பூர் டெஸ்டில் 36 வயதான அஸ்வின் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 42 ரன் கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 37 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    அவர் 89 டெஸ்டில் விளையாடி 457 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 31-வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி உள்ளார். சொந்த மண்ணில் 25 தடவை 5 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் கும்ப்ளேயின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். இலங்கையின் முரளீதரன் 45 முறையும், ஹெராத் 26 தடவையும் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக அஸ்வின், கும்ப்ளே உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 97 விக்கெட் கைப்பற்றி ஹர் பஜன்சிங் சாதனையை முறியடித்தார்.

    ஹர்பஜன்சிங் 18 டெஸ்டில் 95 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தில் இருந்தார். நாக்பூர் டெஸ்டில் 8 விக்கெட் எடுத்தன் மூலம் அஸ்வின் அவரை முந்தினார். அஸ்வின் 19 டெஸ்டில் 97 விக்கெட் கைப்பற்றி 2-வது இடத்தை பிடித்தார். ஹர்பஜன்சிங் 3-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். கும்ப்ளே 111 விக்கெட் வீழ்த்தி (20டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த சுமித் 0 ரன்னில் அவுட் ஆனார்.
    • இந்திய அணி தரப்பில் அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.

    இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் சூர்ய குமார் யாதவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ரென்ஷா, ஸ்காட் போலண்ட் ஆகியோருக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், மேத்யூ குனேமேன் ஆகியோர் இடம் பெற்றனர். சுழற்பந்து வீச்சாளரான குனேமேன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

    இந்திய வீரர் புஜாரா 100-வது டெஸ்டில் களம் இறங்கினார். அவருக்கு சிறப்பு தொப்பியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் களம் இறங்கினர். அவர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள்.

    ஆஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி 50 எடுத்தது. இதன் ஜோடியை முகமது சமி பிரித்தார். அவர் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே - கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

    இந்திய சுழற் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினர். 4 பவுண்டகளுடன் விளையாடிய மார்னஸ் லாபுசாக்னே அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அஸ்வின் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் சமி 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 

    • ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார்.
    • இந்த போட்டியில் தற்போது வரை அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த அந்த அணி சீரான இடைவெளியில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. முக்கியமாக அஸ்வின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி பறிகொடுத்தது.

    இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெடுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை அஸ்வின் பிடித்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அஸ்வின் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் இடத்தில் அணில் கும்ளே உள்ளார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கபில் தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக 99 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ×