என் மலர்
நீங்கள் தேடியது "Asian Hockey Tournament"
- 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது.
- இந்த போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்டு 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆக்கி போட்டி நடக்கிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது. இந்த போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதில் இந்தியாவுடனான உறவு சீராக இல்லாததால் பாகிஸ்தான், சீனா அணிகள் இந்த போட்டியில் பங்கேற்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால் பாகிஸ்தான், சீனா அணிகள் ஆசிய ஆக்கி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்து இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று தெரிவித்தது.
- சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.
- இப்போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நாமக்கல்:
சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒளிபரப்பு
இப்போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த கோப்பை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டியை பொது மக்கள் காணும் வகையில் நாமக்கல் மாவட்ட விளை யாட்டுத்துறை சார்பில் நாமக்கல் செலம்ப கவுண்டர் பூங்காவில் எல்.இ.டி. திரை வாயிலாக நேரிலையாக காண்பிக்கப்பட்டது.
இந்தியா-மலேசியா இடையே நேற்று நடைபெற்ற போட்டியை இந்த எல்.இ.டி. திரையில் ராஜேஷ்குமார் எம்.பி. பொதுமக்களுடன் கண்டு ரசித்தார். இதனை பூங்காவிற்கு வந்திருந்த பொதுமக்களும் ஆர்வத்து டன் கண்டு களித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், டாக்டர் மாயவன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, சிவக்குமார் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா செய்திருந்தார்.