என் மலர்
நீங்கள் தேடியது "astronauts"
- இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க சீனா தீவிரம்
- ஷென்சோ-15 விண்கலம் மூலம் வீரர்கள் பயணம்
பெய்ஜிங்:
விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் பணிக்காக பல நாடுகளுடன் இணைந்த கூட்டுத் திட்டத்தின்படி ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. நீண்ட கால ஆய்வுக்கு பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவின் விண்வெளி நிலையம் ஓய்வு பெறும் என கூறப்படுகிறது.
இதையடுத்து ரஷியாவிற்கு போட்டியாக புவி சுற்றுப் பாதையில் விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளில் சீனா தீவிரம் காட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஷென்சோ-14 குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ-15 விண்கலத்துடன் இணைந்த ஒய்15 கேரியர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது.

இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விண்கலத்தை ஏவும் பணி சில நிமிடங்களில் வெற்றிகரமாக நடந்ததாக கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு சென்றுள்ள ஷென்சோ-15 குழுவை சேர்ந்த வீரர்கள், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள 3 வீரர்களுடன் இணைந்து கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது. கட்டுமானத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
- சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் 8 மாதமாகும் என தகவல் வெளியானது.
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரும்புகிறார்.
வாஷிங்டன்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(58), மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(61) ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்
அவர்கள் திட்டமிட்டபடி 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.
இந்த பிரச்சனையால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்குச் செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புமாம்.
ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாமல் சுனிதா திரும்புவதில் சிக்கல் நீடித்தால் இதுதான் ஒரே வழி ஆகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் 8 மாதம் கழித்தே பூமி திரும்புவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
- சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்தின் அளவை உணர்த்தும்.
- இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது
விண்வெளி அறிவியலில் கோலோச்சும் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. நிலவில் முதல் முறையாகக் கால்பதித்து முதல் விண்வெளி ரகசியங்களை அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வெளிக்கொணரும் நாசாவில் விஞ்ஞானியாக, விண்வெளி வீரராக வேலை பார்ப்பது என்பது சிறுவயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டது பலரது விருப்பமாக இருக்கும். அதிலும் விண்வெளி வீரர் வேலை என்பது மிகவும் துணிச்சல் மற்றும் கடின உழைப்பைப் கோரும் வேலையாக உள்ளது.
கல்பனா சாவ்லா தொடங்கி சுனிதா வில்லியம்ஸ் வரை இந்தியர்களும் நாசாவில் முக்கிய பங்காற்றி உள்ளனர். பூமிக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்திருக்கக் கூடும். அந்த வகையில் நாசா அமைப்பின் இணையத்தில் உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 1.27 கோடி ரூபாய் [$152,258] சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது விண்வெளி வீரர்களுக்கு சுமார் 10 லட்சத்துக்கு 58 ஆயிரம் ரூபாய் மாத சம்பளமாகக் கிடைக்கிறது. ரேங்க் படிநிலையை பொறுத்து இந்த தொகை மாறுபடும். மேலும் இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 4 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி ஆய்வு மையம் அமைந்து உள்ளது. விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.
சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது. அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய ராக்கெட் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா கூறி உள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ்கானின் நகரத்திற்கு அருகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைந்து உள்ளனர். இரண்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
பூஸ்டர் பிரச்சினை இருந்தது என்று டுவிட் செய்துள்ளது மற்றும் ராக்கெட் பூமி திரும்பும் என்றும் கூறி உள்ளது. #NASA
விண்வெளியில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதியது. இந்த மோதலினால் விண்வெளி ஆய்வு மையத்தில் சிறு துளை உருவானது. இதனை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதனை முதற்கட்டமாக அடைத்துவிட்டு, தற்போது முழுமையாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த துளை கண்டறியப்பட்டவுடன், விண்வெளி வீரர் அலெக்ஸ் தனது விரல் மூலம் அந்த துளையை அடைத்தபடி, அடுத்தகட்ட பணியை செய்ய சக வீரர்களிடம் கோரியுள்ளார்.
2 மி.மீ அளவில் ஏற்பட்ட துளை கவனிக்காமல் விடப்பட்டிருந்தால் 18 நாட்களில் ஆராய்ச்சி மையத்தில் இருந்த காற்று வெளியேறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் துளையை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #InternationalSpaceStation